India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

காவேரியில் தமிழகத்துக்கு வரும் நீரின் அளவு அதிகரித்து வருவதால் மேட்டூர் அணையின் நீர் மட்டம் 77.36 அடியாக உயர்ந்துள்ளது. கர்நாடகாவில் தென்மேற்கு பருவமழை தீவிரமாக பெய்து வருவதால் கபினி, கே.ஆர்.எஸ் அணைகள் நிரம்பியுள்ளன. இதனையடுத்து தமிழக எல்லையில் வினாடிக்கு சுமார் 58,000 கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது. இதனால், டெல்டா பாசத்திற்கு அதிகளவு நீர் திறக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

*மேஷம் – போட்டி உண்டாகும்
*ரிஷபம் – முயற்சிக்கேற்ற பலன்
*மிதுனம் – தடங்கல் ஏற்படும்
*கடகம் – அன்பு அதிகரிக்கும்
*சிம்மம் – உயர்வு உண்டாகும்
*கன்னி – சாந்தமான நாள்
*துலாம் – வரவு அதிகரிக்கும்
*விருச்சிகம் – கடன் பிரச்னை தீரும்
*தனுசு – மேன்மையான நாள்
*மகரம் – அசதி ஏற்படும் *கும்பம் – புகழ் உண்டாகும் *மீனம் – ஆதரவு அதிகரிக்கும்

இலங்கைக்கு எதிராக 3 ஒருநாள் போட்டிகள், 3 டி20 போட்டிகளில் விளையாடவிருக்கும் இந்திய கிரிக்கெட் அணி இலங்கை சென்றடைந்தது. இதுகுறித்து X தளத்தில் பதிவிட்டிருக்கும் ஐசிசி, “கவுதம் கம்பீரின் சகாப்தம் தொடங்கியது” என்று குறிப்பிட்டுள்ளது. இந்திய அணியின் பயிற்சியாளராக கம்பீர் பொறுப்பேற்ற பின் நடைபெறும் முதல் தொடர் என்பதால் கிரிக்கெட் ரசிகர்களின் பார்வை அவர் மீது திரும்பியுள்ளது.

குருகுலம், இந்து பல்கலைக்கழகம், தொழில் செய்வதற்கான இந்து உலக வர்த்தக மையம் கைலாசாவில் அமைய இருப்பதாக நித்யானந்தா அறிவித்துள்ளார். இது குறித்து யூடியூப் வலைதளத்தில் வீடியோ வெளியிட்டுள்ள அவர், கைலாசாவில் உணவு, தங்குமிடம், உடை , மருத்துவம் உள்ளிட்ட அனைத்தும் இலவசம் என அறிவித்துள்ளார். மேலும், ராணுவமோ, காவல்துறையோ கைலாசத்தில் இல்லை என்றும், வரி விதிப்பு முறை இல்லையெனவும் கூறியுள்ளார்.

இஸ்ரேல்-ஹமாஸ் அமைப்பு இடையிலான மோதலில் இதுவரை 39,000 பேர் பலியானதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. 2023 அக்டோபரில், இஸ்ரேல் மீது ஹமாஸ் அமைப்பு தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதல் போராக மாறிய சூழலில், காஸா மீது இஸ்ரேல் குண்டுமழை பொழிந்து வருகிறது. இதில், குழந்தைகள், பெண்கள், முதியவர்கள் என பலதரப்பட்ட மக்கள் பலியாகியுள்ள நிலையில், லட்சக்கணக்கான மக்கள் அனைத்தையும் இழந்து பரிதவித்து வருகின்றனர்.

நீட் தேர்வில் இருந்து விலக்கு கோரி, சட்டப்பேரவையில் தீர்மானம் கொண்டு வர கர்நாடக அரசு முடிவெடுத்துள்ளது. முதல்வர் சித்தராமையா தலைமையிலான மாநில அமைச்சரவை இந்த தீர்மானத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளது. முன்னதாக, நீட் தேர்வுக்கு விலக்கு கோரி தமிழ்நாடு சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேற்கு வங்கத்திலும் தீர்மானம் நிறைவேற்ற அம்மாநில அரசு திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

‘தமிழ்ப் புதல்வன்’ திட்டத்தில், 6-12ஆம் வகுப்புவரை அரசுப் பள்ளியில் படித்த மாணவர்களுக்கு நடப்பாண்டு முதல் மாதம் ₹1000 வழங்கப்பட உள்ளது. ஏற்கெனவே கலை&அறிவியல் கல்லூரிகளில் முதலாமாண்டு வகுப்புகள் தொடங்கிய நிலையில், பொறியியல் கலந்தாய்வு இன்று தொடங்கியுள்ளது. BE முதலாமாண்டு வகுப்பு தொடங்கியபிறகு, இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டு, மாணவர்களுக்கு மாதம் ₹1,000 வழங்கப்படும் எனத் தகவல் வெளியாகியுள்ளது.

ஆடி கிருத்திகை 29ஆம் தேதி கொண்டாடப்படவுள்ளது. இதையொட்டி, திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி முருகன் கோயிலுக்கு ஆயிரக்கணக்கில் பக்தர்கள் வருவது வழக்கம். இதனால் அம்மாவட்டத்திற்கு 29ஆம் தேதி உள்ளூர் விடுமுறை விடப்படுவதாக மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர் அறிவித்துள்ளார். பள்ளி, கல்லூரிகளுக்கு 29ஆம் தேதி விடுமுறை. இதனை ஈடுசெய்யும் விதமாக ஆக். 10 வேலைநாளாக கடைபிடிக்கப்படும் என்று அவர் கூறியுள்ளார்.

பாலிவுட் நடிகைகளுடன் தொடர்பு இருந்தால் மட்டுமே இந்திய அணியில் இடம்பெற முடியும் என இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சுப்ரமணியம் பத்ரிநாத் கடுமையாக விமர்சித்துள்ளார். ஒருநாள், டி20 போட்டியில் ருதுராஜ் கெய்க்வாட் இடம்பெறவில்லை. ஆனால், ரியான் பராக் சேர்க்கப்பட்டுள்ளார். இது குறித்து கருத்து தெரிவித்துள்ள பத்ரிநாத், இந்திய அணியில் சேர கெட்ட பையன் என்ற இமேஜ் தேவைப்படுவதாகக் கூறியுள்ளார்.

இந்தியாவில் 18ஆம் நூற்றாண்டில் இருந்து பிரீஃப்கேஸ் மூலம் பட்ஜெட் தாக்கல் செய்வது வழக்கம். 2019ஆம் ஆண்டு, பிரீஃப்கேஸ் வழக்கத்தை ஒழித்த நிர்மலா சீதாராமன், துணிப்பையில் ஆவணங்களைக் கொண்டு வந்தார். 2021ஆம் ஆண்டு காகிதமில்லா பட்ஜெட்டை தாக்கல் செய்தார். ஆனாலும், பாரம்பரியமான சிவப்பு நிறத்தை மாற்றாமல், ஐபேடை சிவப்பு பவுச்சில் கொண்டு வந்தார். சிவப்பு நிறத்திற்கு பல்வேறு காரணங்கள் கூறப்படுகிறது. <<-se>>#Budget2024<<>>
Sorry, no posts matched your criteria.