India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

ஆசிய ஒலிம்பிக் கவுன்சிலின் முதல் இந்தியத் தலைவராக முன்னாள் துப்பாக்கி சுடுதல் வீரர் ரண்தீர் சிங் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். 1978 தாய்லாந்து ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்தியாவுக்கு முதல் தங்கப் பதக்கத்தைப் பெற்று தந்தவர். அர்ஜுனா விருது, ரஞ்சித் சிங் விருது போன்ற இந்தியாவின் உயரிய விருதுகளைப் பெற்ற இவர், 2010இல் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டி டெல்லியில் நடைபெற முக்கிய பங்காற்றியவர் ஆவார்.

வருமானத்தை தாமாக முன்வந்து தெரிவிக்கும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. இதுபோன்ற சீர்திருத்தங்கள் மூலம் அதிகம் பேரை வரி செலுத்த வைக்க முடியும் என நம்பப்பட்டது. இதனாலேயே இது “Dream Budget” எனப்பட்டது. எதிர்காலத்தை கருத்தில் கொண்டு தாக்கல் செய்யப்பட்ட “Dream Budget”ஆல் 1997இல் வருமான வரி மூலம் அரசுக்கு ₹18,700 கோடி வருவாய் கிடைத்த நிலையில் 2013இல் ₹2 லட்சம் கோடியாக கூடியது.

வெளிநாட்டு முதலீடு உச்சவரம்பு உயர்த்தப்பட்டு, பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகளை தனியாரிடம் விற்பதற்கான நடவடிக்கைக்கு அடித்தளமிடப்பட்டது. வருமான வரி தாக்கல் செய்ய புதிய அம்சங்களை ப. சிதம்பரம் அறிமுகம் செய்தார். அதாவது, கார், தொலைபேசி, வெளிநாடு பயணம், அசையா சொத்து வைத்திருப்போர் நிச்சயம் ஐ.டி கணக்கு தாக்கல் செய்ய பட்ஜெட்டில் புதிய விதி கொண்டு வரப்பட்டது.

மத்தியில் தேவகவுடா தலைமையிலான ஐக்கிய முன்னணி கூட்டணி ஆட்சியில் இருந்தபோது 1997-98 பட்ஜெட்டை ப. சிதம்பரம் தாக்கல் செய்தார். கூட்டணி அரசாக இருந்தாலும், பல சீர்திருத்தங்கள் அறிமுகப்படுத்தப்பட்டன. வருமான வரி விகிதம் 40% – 30%ஆகவும், இந்திய கார்ப்பரேட் நிறுவன வரி 40%ல்- 35% ஆகவும் குறைக்கப்பட்டது. கலால் வரி எளிமைப்படுத்தப்பட்டது. உபரி கட்டணம் நீக்கப்பட்டு ராயல்டி விகிதமும் குறைக்கப்பட்டது.

அனைவருக்கும் இலவச இன்டர்நெட் அளிக்கக்கோரும் தனிநபர் மசோதாவை மாநிலங்களவை பரிசீலிக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. சிபிஎம் MP சிவதாசன், 2023இல் அறிமுகம் செய்த இந்த மசோதா நிலுவையில் இருந்தது. அதை பரிசீலிக்க குடியரசு தலைவர் பரிந்துரை செய்துள்ளதாக மாநிலங்களவை செயலாளரிடம் மத்திய அரசு தெரிவித்தது. அரசு நிதி தொடர்பான தனி நபர் மசோதாவை பரிசீலிக்க குடியரசு தலைவர் ஒப்புதல் அவசியம்.

கடந்த 2020ம் ஆண்டு மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட் தாக்கல் செய்தார். அதற்கு அவர், 2 மணி நேரம் 40 நிமிடங்கள் எடுத்து கொண்டார். எனினும், 2 பக்கங்கள் மீதம் இருக்கையில் முன்கூட்டியே முடித்து கொண்டார். அதையும் தாக்கல் செய்தால் மேலும் நேரம் ஆகி இருக்கும். இதுவே ஒருவர் அதிக நேரத்தில் தாக்கல் செய்த பட்ஜெட் ஆகும். அதற்கு முன்பு யாரும் இதுபோல அதிக நேரம் எடுத்து கொண்டதில்லை.

மத்திய அரசுத்துறைகளில் 17,727 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க நாளை (ஜூலை 24) கடைசி நாளாகும். இதற்கு பட்டப்படிப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். இரண்டு நிலை தேர்வுகள் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். விண்ணப்பதாரர்கள் 18-30 வயதிற்குள் இருக்க வேண்டும். விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள், <

எல்லை தாண்டி மீன்பிடித்ததாக தமிழக மீனவர்கள் 9 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது. ராமேஸ்வரத்தை சேர்ந்த மீனவர்கள் நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த போது, படகுகளுடன் சிறைபிடிக்கப்பட்டுள்ளனர். தொடர்ந்து, இலங்கை காங்கேசன்துறை முகாமில் அவர்கள் வைக்கப்பட்டுள்ளனர். ஏற்கெனவே, கைதானவர்கள் இன்னும் விடுவிக்கப்படாத நிலையில், அடுத்தடுத்த கைது சம்பவம் தொடர்வது மீனவர்களை கவலையில் ஆழ்த்தியுள்ளது.

பட்ஜெட் முதலில் பிப். 28 மாலை 5 மணிக்கு தாக்கலானது. பிரிட்டன் ஆதிக்கத்தில் இந்தியா இருந்தபோது, அந்நாட்டில் பகல் நேரம் இருக்கையில் இந்தியாவில் பட்ஜெட் தாக்கல் செய்வதை உறுதி செய்ய இது கடைபிடிக்கப்பட்டது. 1999இல் நிதி அமைச்சராக யஷ்வந்த் சின்ஹா இருந்தபோது இந்நேரம் காலை 11 மணியாக மாற்றப்பட்டது. 2017இல் பிப். 1க்கு மாற்றப்பட்டது. ஏப்ரல் 1இல் பட்ஜெட் திட்டத்தை செயல்படுத்த இம்முறை கடைபிடிக்க பட்டது.

சக்தி வழிபாட்டுக்கு சிறந்த மாதமாக கருதப்படும் ஆடியில் சக்திவேல் ஏந்திய குமாரனை வணங்கினால் சங்கடங்கள் தீரும் என்பது ஆன்றோர் வாக்கு. ஆடி செவ்வாய் கிழமையில், அதிகாலையில் நீராடி, திருநீறு பூசி, விரதமிருந்து, மாலை கோயிலுக்கு சென்று, வேல்முருகனுக்கு பால் அபிஷேகம் செய்து, செவ்வரளி மாலையிட்டு, தேன் தினை மா படைத்து, சஷ்டி கவசம் பாடி வணங்கினால் இன்னல்கள் அனைத்தும் நீங்கி இன்ப வாழ்வு கிட்டும் என்பது ஐதீகம்.
Sorry, no posts matched your criteria.