News May 12, 2024

மோடி என்ற பிராண்டைப் பயன்படுத்த நினைக்கிறார்கள்

image

பொதுமக்கள் முன்னிலையில் பிரதமர் மோடியுடன் நேருக்கு நேர் விவாதிக்க தான் தயாராக இருப்பதாக ராகுல் காந்தி கூறியிருந்தார். இது தொடர்பாக கருத்து தெரிவித்த பாஜக ஐ.டி பிரிவு தலைவர் அமித் மாளவியா, “ராகுல் காந்தி தனது அரசியல் பயணத்தை மீண்டும் தொடங்க மோடி என்ற பிராண்டைப் பயன்படுத்துவதை நிறுத்த வேண்டும். பிரதமர் பதவியில் இருக்கும் மோடி, ராகுலுடன் ஏன் விவாதிக்க வேண்டும்?” என்றார்.

News May 12, 2024

இரவுப்பணி செல்வோருக்கு காத்திருக்கும் ஆபத்து

image

உலகமயமாக்கலுக்கு பிறகு, நைட் ஷிஃப்ட் என்பது சர்வ சாதாரணமாக மாறிவிட்டது. இந்நிலையில், இரவில் கண் விழித்து பணி செய்வோருக்கு நீரிழிவு, உடல் பருமன் உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்பட அதிக வாய்ப்புள்ளதாக வாஷிங்டன் பல்கலைக்கழகம் எச்சரித்துள்ளது. சிலருக்கு இதய நோய், பக்கவாதம் ஏற்படும் வாய்ப்புகள் இருப்பதாகவும் கணிக்கப்பட்டுள்ளது. இரவில் விழித்திருப்பவர்களுக்கு இன்சுலின் குறைவதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.

News May 12, 2024

கட்சித் தலைவர் பதவியில் இருந்து சிறிசேன விலகல்

image

இலங்கை சுதந்திரக் கட்சியின் தலைவர் பதவியில் இருந்து மைத்திரிபால சிறிசேன விலகியுள்ளார். 2015-2019 வரை இலங்கை அதிபராக பதவி வகித்த சிறிசேன, சுதந்திரக் கட்சியின் தலைவராகவும் செயல்பட்டு வந்தார். இந்த நிலையில், கட்சி செயற்குழுக் கூட்டத்தில் பங்கேற்ற அவர் தலைவர் பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்தார். இதைத் தொடர்ந்து இலங்கை சுதந்திரக் கட்சியின் புதிய தலைவராக விஜயதாச ராஜபக்ச நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

News May 12, 2024

வெளுத்து வாங்கும் கனமழை

image

தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. அக்னி நட்சத்திரம் தொடங்கியதிலிருந்து வெயில் வாட்டி வதைக்கும் சூழலில், சில மாவட்டங்களில் அவ்வப்போது மழை பெய்து வருகிறது. அந்த வகையில் கோவை, திருவாரூர், நீலகிரி, திண்டுக்கல், சேலம், குமரி உள்பட பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இதனால், வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவியதாக மக்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

News May 12, 2024

பாகுபலி-3 விரைவில் அறிவிப்பு வெளியாகும்!

image

‘பாகுபலி – கிரவுன் ஆஃப் பிளட்ஸ்’ என்ற அனிமேட்டட் வெப் தொடர் வருகிற மே 17ஆம் தேதி டிஸ்னி + ஹாட்ஸ்டார் OTT தளத்தில் வெளியாக உள்ளது. அதன் புரொமோஷன் நிகழ்வில் கலந்துகொண்ட இயக்குநர் ராஜமெளலியிடம், “பாகுபலி 3ஆம் பாகம் எப்போது வெளியாகும்?” என்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், “பிரபாஸுடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. விரைவில் அறிவிப்பு வெளியாகும்” என பதிலளித்துள்ளார்.

News May 12, 2024

CSK ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் காத்துக் கொண்டிருக்கிறது

image

ராஜஸ்தானுக்கு எதிரான போட்டிக்கு பிறகு ரசிகர்கள் அனைவரும் மைதானத்திலேயே இருக்குமாறு CSK நிர்வாகம் கேட்டுக் கொண்டுள்ளது. அது என்னவாக இருக்கும் என்று ரசிகர்கள் குழம்பி இருந்த நிலையில், போட்டி முடிந்த பிறகு CSK வீரர்கள் ஆட்டோகிராப் போட்ட நினைவுப் பரிசு, ஜெர்சி, பந்து போன்றவற்றை ரசிகர்கள் அனைவருக்கும் வழங்க CSK நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. இதனால் CSK ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

News May 12, 2024

விரைவில் திமுக அரசு தூக்கி எறியப்படும்: ஓபிஎஸ்

image

தமிழகத்தில் திமுக அரசு 3 ஆண்டுகால ஆட்சியை நிறைவு செய்தது தொடர்பாக பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், தமிழகத்தில் நடப்பது சொல்லாட்சி இல்லை, செயலாட்சி எனக் கூறியிருந்தார். அதை விமர்சித்துள்ள ஓபிஎஸ், 3 ஆண்டுகால திமுக ஆட்சி பொய்மையின் மொத்த உருவமாக காட்சி அளிக்கிறது என்றும், விரைவில் மக்களின் விருப்பத்திற்கிணங்க பொய்யாட்சி தூக்கி எறியப்பட்டு செயலாட்சி ஏற்படுத்தப்படும் என்றும் கூறியுள்ளார்.

News May 12, 2024

உலகின் முதல் பறக்கும் டாக்சி தயாரிக்கும் சென்னை ஐ.ஐ.டி.

image

சாலை போக்குவரத்து நெருக்கடிக்கு தீர்வளிக்கும் வகையில், உலகின் முதல் பறக்கும் எலக்ட்ரிக் டாக்சியை புதிய கண்டுபிடிப்புகளுக்கு முன்னோடியாக திகழ்கின்ற சென்னை ஐ.ஐ.டி., வடிவமைத்து வருகிறது. மணிக்கு 200 கி.மீ., வேகத்தில் செல்லும் இந்த டாக்சி தரையிறங்கவும், பறக்கவும் 15 அடி நீளமும், அகலமும் கொண்ட இடம் போதுமானது. 2 பேர் அமர்ந்து பயணிக்கக்கூடிய வகையில் இந்த டாக்சி வடிவமைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

News May 12, 2024

விலங்குகளுக்கு தண்ணீர் அளிக்கும் திட்டமுள்ளதா?

image

வீதிகளில் திரியும் விலங்குகளுக்கு வெயில் காலங்களில் தண்ணீர் அளிக்கும் திட்டம் உள்ளதா என அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. விலங்கு நல ஆர்வலர் ஒருவர் தொடுத்த மனுவில், வெயில் காலங்களில் விலங்குகளுக்கு, கால்நடைத்துறை மூலம் தண்ணீர், உணவளிக்க உத்தரவிடக் கூறியிருந்தார். இதை விசாரித்த நீதிபதிகள், அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு, வழக்கை 6 வாரத்திற்கு ஒத்திவைத்தனர்.

News May 12, 2024

IPL: சென்னை அணிக்கு 142 ரன்கள் இலக்கு

image

RR-க்கு எதிரான ஐபிஎல் போட்டியில், CSK அணிக்கு 142 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தொடக்கம் முதலே நிதானமாக விளையாடி வந்த RR அணி, ரன் குவிக்க திணறி வந்தது. இதனால் ஜெய்ஸ்வால், பட்லர், சஞ்சு சாம்சன் ஆகியோர் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். பொறுப்புடன் விளையாடிய ரியான் பராக், 47 ரன்கள் குவித்து அணியின் ஸ்கோரை உயர்த்தினார். சென்னை அணி சார்பில், சிமர்ஜீத் சிங் 3 விக்கெட்களை கைப்பற்றினார்.

error: Content is protected !!