News March 23, 2024

CSKvsGT: டிக்கெட் விலை குறைந்தது

image

சென்னை- குஜராத் அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் போட்டி, வரும் மார்ச் 26ஆம் தேதி சேப்பாக்கத்தில் நடைபெற உள்ளது. இப்போட்டிக்கான டிக்கெட் விற்பனை இன்று காலை 10.10 மணிக்கு தொடங்கியது. முதல் போட்டிக்கான டிக்கெட் அதிகபட்சமாக ₹7,500 வரை விற்பனையான நிலையில், இம்முறை ₹1,700 – ₹6,000 ஆக விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. டிக்கெட்டுகளை சிஎஸ்கே மற்றும் பேடிஎம் இன்சைடர் ஆகிய இணையதளங்களில் பெற்றுக் கொள்ளலாம்.

News March 23, 2024

ஒரு அணிக்கு எதிராக அதிக வெற்றிகளை குவித்த அணிகள்

image

▶மும்பை- கொல்கத்தாவுக்கு எதிராக 23 வெற்றிகள் ▶சென்னை- பெங்களூருக்கு எதிராக 21 வெற்றிகள் ▶கொல்கத்தா- பஞ்சாப்பிற்கு எதிராக 21 வெற்றிகள் ▶மும்பை- சென்னைக்கு எதிராக 20 ▶சென்னை- டெல்லிக்கு எதிராக 19 வெற்றிகள் ▶சென்னை – கொல்கத்தாவுக்கு எதிராக 18 வெற்றிகள் ▶கொல்கத்தா- பெங்களூருக்கு எதிராக 18 வெற்றிகள் ▶மும்பை- டெல்லிக்கு எதிராக 18 வெற்றிகள் ▶மும்பை- பெங்களூருக்கு எதிராக 18 வெற்றிகள்.

News March 23, 2024

BREAKING: திமுகவுக்கு ஆதரவு என அறிவிப்பு

image

டெல்டா பகுதிகளைச் சேர்ந்த 16 விவசாய சங்கங்கள் திமுக கூட்டணிக்கு ஆதரவளிப்பதாக தெரிவித்துள்ளன. தஞ்சாவூர், திருவாரூர் பகுதிகளில் முதல்வர் ஸ்டாலின் பிரசாரப் பயணம் மேற்கொண்டு வருகிறார். அங்கு அவரை சந்தித்த விவசாய பிரதிநிதிகள், திமுக மற்றும் I.N.D.I.A கூட்டணிக்கு ஆதரவளிப்பதாக தெரிவித்தனர். இவர்களது வாக்குகள் திமுகவுக்கு பக்க பலமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

News March 23, 2024

புதிய சாதனை படைத்தார் ‘தல தோனி’

image

பெங்களூரு அணிக்கு எதிரான நேற்றைய ஐபிஎல் போட்டியில், எம்.எஸ்.தோனி புதிய சாதனை படைத்துள்ளார். பெங்களூரு வீரர் அனுஜ் ராவத்தை ரன் அவுட் செய்ததன் மூலம், ஐபில் வரலாற்றில் அதிக ரன் அவுட்டுகளை நிகழ்த்திய வீரர் பெருமையை பெற்றார் தோனி. 1. தோனி- 24 ரன் அவுட், 2. ரவீந்திர ஜடேஜா- 23, 3. விராட் கோலி- 19 ரன் அவுட், 4.சுரேஷ் ரெய்னா- 16 ரன் அவுட், 5. மனிஷ் பாண்டே- 16 என அடுத்தடுத்த இடங்களில் உள்ளனர்.

News March 23, 2024

ரஷ்யாவில் 20 ஆண்டுகளில் முதல் மிகப்பெரிய தாக்குதல்

image

ரஷ்யாவில் 60 பேரை பலிகொண்ட துப்பாக்கிச் சூடு சம்பவம், அந்நாட்டில் கடந்த 20 ஆண்டுகளில் நடைபெற்ற முதல் மிகப்பெரிய தாக்குதலாகும். 2004இல் பெஸ்லான் பள்ளிக்குள் புகுந்த செசன்ய தீவிரவாதிகள், 1,100 பேரை சிறைபிடித்தனர். அவர்களை மீட்கும்போது நடந்த துப்பாக்கிச் சண்டையில் 334 பேர் கொல்லப்பட்டனர். அந்த சம்பவத்துக்கு பிறகு 20 ஆண்டுகள் கழித்து தற்போதுதான் ரஷ்யாவில் மிகப்பெரிய தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

News March 23, 2024

புஷ்பக் மூலம் புதிய சாதனை படைத்த இந்தியா

image

புஷ்பக் மூலம் மறுபயன்பாட்டு விண்கல புறப்பாடு வாகனம் (ஆர்எல்வி) கொண்டுள்ள நாடுகளின் பட்டியலில் இந்தியாவும் இணைந்து சாதனை படைத்துள்ளது. செயற்கைக்கோள்களை ஏவ பயன்படும் ராக்கெட்டுகளுக்கு பதிலாக ஆர்எல்வி வாகனத்தை இந்தியா உருவாக்கியுள்ளது. இதற்கு முன்பு அமெரிக்கா, ரஷ்யா, பிரான்ஸ், சீனா, ஜப்பான் நாடுகள் மட்டுமே இதனை தயாரித்திருந்தன. அந்தப் பட்டியலில் தற்போது இந்தியாவும் இணைந்துள்ளது.

News March 23, 2024

BREAKING: அதிரடியாக கட்டணத்தை உயர்த்தியது அரசு

image

நாடு முழுவதும் சுங்கச்சாவடி கட்டணங்களை தேசிய நெடுஞ்சாலை ஆணையம் அதிரடியாக உயர்த்தியுள்ளது. அதில் தமிழ்நாட்டில் மட்டும் 5 சுங்கச்சாவடியின் கட்டணங்கள் உயர்த்தப்பட்டுள்ளன. அரியலூர் – மணகெதி, திருச்சி – கல்லக்குடி, வேலூர் – வல்லம், விழுப்புரம் – தென்னமாதேவி, திருவண்ணாமலை – இனம்கரியாந்தல் ஆகிய சுங்கச்சாவடிகளின் கட்டணங்கள் உயர்த்தப்பட்டுள்ளன. ஏப்ரல் 1 முதல் இந்த கட்டண உயர்வு அமலுக்கு வருகிறது.

News March 23, 2024

பைக் டாக்ஸியில் பெண்ணுக்கு தொல்லை

image

சென்னையில் 33 வயது பெண் ஒருவர் மார்ச் 19ஆம் தேதி மொபைல் செயலி மூலம் பைக் டாக்ஸி புக் செய்திருக்கிறார். கிண்டியில் இருந்து கொட்டிவாக்கம் சென்ற அவருக்கு பைக்கை ஓட்டிவந்த நடன சபாபதி (22) பாலியல் தொல்லை கொடுத்திருக்கிறார். அத்துடன், இதுகுறித்து யாரிடமும் சொல்லக் கூடாது என்றும் மிரட்டியிருக்கிறார். பெண்ணின் புகாரையேற்று போலீசார் நடன சபாபதியை கைது செய்துள்ளனர்.

News March 23, 2024

பழனியில் இன்று திருக்கல்யாண உற்சவம்

image

பழனி தண்டாயுதபாணி சாமி திருக்கோயிலின் பங்குனி உத்திரத் திருவிழா மார்ச் 18ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினமும் கிரி வீதிகளில் மயில், ஆட்டுக்கிடா, காமதேனு வாகனங்களில் சாமி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். விழாவின் 6ஆம் நாளான இன்று, மாலை திருக்கல்யாண உற்சவம் நடைபெறவுள்ளது. பின்னர், இரவு 8.30 மணிக்கு மணக்கோலத்தில் வெள்ளித் தேரில் சாமி உலா வருவார்.

News March 23, 2024

காவல்துறை அதிகாரி மீது கெஜ்ரிவால் குற்றச்சாட்டு

image

காவல் உதவி ஆணையர் ஏ.கே. சிங் மோசமாக நடந்து கொண்டதாக கெஜ்ரிவால் குற்றம்சாட்டியுள்ளார். மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் கைதான அவர், நீதிமன்றத்துக்கு நேற்று அழைத்து செல்லப்பட்டார். அப்போது ஏ.கே. சிங் மோசமாக நடந்து கொண்டதால், அவரை பணிநீக்கம் செய்யும்படி நீதிமன்றத்தில் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். எந்த விதத்தில் மோசமாக நடந்தார் என கெஜ்ரிவால் குறிப்பிடவில்லை.

error: Content is protected !!