News July 25, 2024

பட்ஜெட்டை கண்டித்து திமுக போராட்டம் அறிவிப்பு

image

மத்திய பட்ஜெட்டை கண்டித்து, தமிழகத்தில் அனைத்து மாவட்டத்தலைநகரங்களிலும் நாளை மறுநாள் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என திமுக அறிவித்துள்ளது. பட்ஜெட்டில் மாற்றாந்தாய் போக்குடன் தமிழகத்தை பாஜக வஞ்சித்துவிட்டதாகவும், வெள்ள பேரிடர் நிதி, மெட்ரோ ரயில் திட்ட நிதியை கூட வழங்கவில்லை எனவும் குற்றஞ்சாட்டியுள்ளது. அத்துடன், தமிழக முதல்வரின் கோரிக்கைகள் முற்றிலும் புறக்கணிக்கப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளது.

News July 25, 2024

மம்தா பேச்சுக்கு வங்கதேசம் கண்டனம்

image

மம்தா பானர்ஜியின் பேச்சுக்கு வங்கதேச அரசு கண்டனம் தெரிவித்துள்ளது. அவரது பேச்சு தீவிரவாதத்தை ஊக்கப்படுத்துவதாக இந்திய தூதரகத்திடமும் முறையிட்டுள்ளது. அரசுப்பணிகளில் இடஒதுக்கீட்டுக்கு எதிராக நடந்த மாணவர் போராட்டங்களால், வங்கதேசத்தில் வன்முறை வெடித்தது. வன்முறையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு எல்லை மாநிலமான மே.வங்கம் தேவையான உதவிகள் செய்து அடைக்கலமளிக்கும் என அம்மாநில முதல்வர் மம்தா பேசியிருந்தார்.

News July 25, 2024

53,594 அரசு பணியிடங்கள்: விரைவில் முடியும் அவகாசம்

image

மத்திய பணியாளர் தேர்வாணையத்தின் 8,326 பணியிடங்களுக்கான போட்டித் தேர்விற்கு வரும் 31ஆம் தேதிக்குள் ssc.gov.in இணையதளம் மூலமும், தபால் துறையில் உள்ள 44,228 பணியிடங்களுக்கு ஆக.5ஆம் தேதிக்குள் https://indiapostgdsonline.gov.in/ இணையதளத்திலும் விண்ணப்பிக்கலாம். SBI-யில் உள்ள 1,040 பணியிடங்களுக்கு ஆக.8க்குள் https://recruitment.bank.sbi/crpd-sco-2024-25-09/apply இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும்.

News July 25, 2024

இவர்களுக்கெல்லாம் ₹1000 கிடைக்காது

image

<<13702987>>‘தமிழ் புதல்வன்’<<>> திட்டத்தின் கீழ் மாணவர்கள் மாதம் ₹1000 பெறுவதற்கான தகுதி விதிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, *அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் தமிழ் வழியில் பயின்ற மாணவர்களை தவிர்த்து, இதர மாணவர்களுக்கு இத்திட்டம் பொருந்தாது. *தொலைதூர வழியில், அங்கீகரிக்கப்படாத கல்வி நிறுவனங்களில் உயர்கல்வி பயிலும் மாணவர்கள், மற்ற மாநிலப் பள்ளிகளில் படித்தவர்கள் இத்திட்டத்தில் ஊக்கத்தொகை பெற முடியாது.

News July 25, 2024

கடத்தல்காரர்களுக்கு நெருக்கடி ஏற்படலாம்?

image

தங்கத்தின் மீதான இறக்குமதி வரி 15% யிலிருந்து 6%ஆக குறைக்கப்பட்டுள்ளதால் கடத்தல்காரர்களுக்கு நெருக்கடி ஏற்படுமென சுங்கத்துறை அதிகாரிகள் கூறுகின்றனர். வரி 15% இருந்தபோது கடத்தல் தங்கம் அதிகளவில் இருந்ததாகவும் அப்போது கிராமுக்கு ₹300 வரை கடத்தல்காரர்களுக்கு லாபம் கிடைத்ததாகவும் கூறிய அவர்கள் இப்போது அவர்களுக்கு வரும் லாபம் குறையும் என்பதால், அவர்கள் இனி அந்த ரிஸ்க் எடுக்க யோசிப்பார்கள் என்கின்றனர்.

News July 25, 2024

அரசியலில் பெண்களுக்கு முக்கியத்துவம் இல்லையா? (1/3)

image

நாட்டின் குடியரசுத் தலைவர் தொடங்கி ஊராட்சி கவுன்சிலர் வரையிலான பதவிகளில் பெண்களுக்கு சம வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளதாக நாம் கூறிவருகிறோம். உண்மையில், இப்பதவிகளில் உள்ள பெண்களுக்கு சுதந்திரமும், அதனை செயல்படுத்தும் அதிகாரமும் இருக்கிறதா?. இல்லை என்பதே பதில். சமூக அழுத்தமும், ஆதிக்கமும் வீடு முதல் கட்சி நிர்வாகம் வரை இங்கே அனைத்து இடங்களிலும், மட்டங்களிலும் வியாபித்திருக்கிறது.

News July 25, 2024

அரசியலில் பெண்களுக்கு முக்கியத்துவம் இல்லையா? (2/3)

image

அரசியலுக்கு வரும் பெண்களை கேலி செய்வது, தனிப்பட்ட வாழ்க்கை குறித்தும், ஒழுக்கம் குறித்தும் தரக்குறைவாக பேசுவது, பொறுப்பை பெயரளவில் கொடுத்துவிட்டு, நிர்வாகத்தை ஆண்களே மேற்கொள்வது, இதையெல்லாம் மீறி துணிந்து நின்றால் அச்சுறுத்துவதும், படுகொலை செய்வதும் தொடர்கிறது. டெல்லி, பிஹார், ஆந்திரா, தமிழ்நாடு என இந்த பாலின ஆதிக்க மனநோய்க்கு மொழி, இனம், மதம், எல்லை போன்ற வேறுபாடுகளே இல்லை.

News July 25, 2024

அரசியலில் பெண்களுக்கு முக்கியத்துவம் இல்லையா? (3/3)

image

இந்நிலை மாற வேண்டும். நாட்டில் மாற்றத்தை ஏற்படுத்த, வீட்டில் இருந்தே சீர்திருத்தங்கள் தொடங்கப்பட வேண்டும். மேடையில் மட்டும் பெண்ணுரிமை பேசாமல், (ஆண்களால்) அவர்களுக்கு நடைமுறையில் ஏற்படும் சிக்கல்கள், மனத்தடைகள், இடையூறுகளை நீக்க சமூகம் துணிய வேண்டும். ஜனநாயகத்தைக் காக்க அரசியலில் பெண்களின் பங்களிப்பை மட்டுமல்ல, உண்மையான பங்கேற்பையும் உயர்த்த ஆக்கப்பூர்வமான பணிகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.

News July 25, 2024

ஏன் இந்த பதற்றம்?: சு.வெங்கடேசன்

image

இருப்புப்பாதை அமைத்த பிறகு ரயிலை இயக்கும்படி, ரயில்வே அமைச்சகத்தை மதுரை எம்.பி சு.வெங்கடேசன் கிண்டல் செய்துள்ளார். இது குறித்து தனது X பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், ரயில்வே திட்டங்களின் முழு விவரங்கள் அடங்கிய பிங்க் புக் இன்னும் வெளியாகவில்லை என்றார். ஆனால், நேற்றே ரயில்வே அமைச்சர் தொடங்கி அனைத்து அதிகாரிகளும் பிரசாரத்தை தொடங்கி விட்டதாக கூறிய அவர், ஏன் இந்த பதற்றம்? என கேள்வி எழுப்பியுள்ளார்.

News July 25, 2024

‘தமிழ் புதல்வன்’ திட்டத்திற்கு ₹360 கோடி நிதி ஒதுக்கீடு

image

‘தமிழ் புதல்வன்’ திட்டம் அடுத்த மாதம் தொடங்கப்பட உள்ள நிலையில், அதற்காக ₹360 கோடி நிதி ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் 6 முதல் 12ஆம் வகுப்பு வரை அரசு பள்ளியில் பயின்று கல்லூரியில் சேரும் மாணவர்களுக்கு, கல்லூரி முடிக்கும் வரை மாதம் ₹1000 வங்கிக் கணக்கில் செலுத்தப்பட உள்ளது. இதன் மூலம் தோராயமாக சுமார் 3.28 லட்சம் மாணவர்கள் பயன்பெறுவர் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

error: Content is protected !!