India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

தமிழகத்தில் கோவை, நீலகிரி மாவட்டத்தில் இன்றும், நாளையும் 7 முதல் 11 செ.மீ வரை கனமழை பெய்யக்கூடும் என வானிலை மையம் மஞ்சள் எச்சரிக்கை விடுத்துள்ளது. தொடர்ந்து, தமிழகத்தில் 7 நாள்களுக்கு மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும், மன்னார் வளைகுடா, தென்தமிழக கடலோர பகுதிகளில் 45 கி.மீ வேகத்தில் காற்று வீசும் எனவும் கணித்துள்ளது. சென்னையில் இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் கூறியுள்ளது.

சீனாவின் மிகப்பெரிய பணக்காரரான ஷாங் ஷென்ஷேன், 3 ஆண்டுகளுக்குப் பிறகு முதல் இடத்தை இழக்கும் அபாயத்தில் உள்ளார். அவரது பாட்டில் குடிநீர் தயாரிக்கும் நிறுவனமான Nongfu Springஇன் சந்தை மதிப்பு நடப்பு ஆண்டில் மட்டும் சுமார் 20% சரிந்துள்ளது. இதனால், அவரது சொத்து மதிப்பு 4.58 லட்சம் கோடியாக சரிந்துள்ளது. அவருக்கு அடுத்த இடத்தில் இருக்கும் கொலின் ஹுவாங்கியின் சொத்து மதிப்பு 3.95 லட்சம் கோடியாக உள்ளது.

விவாகரத்துக்கு பிறகு நடாஷா போட்ட இன்ஸ்டா பதிவுக்கு இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்திக் பாண்டியா அன்பை பொழிந்துள்ளார். இந்தியாவை விட்டு வெளியேறி சொந்த நாடான செர்பியாவிற்கு தனது மகன் அகஸ்தியாவுடன் சென்ற அவர், அங்கு மகனுடன் எடுத்த புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டார். 4 வருட திருமண உறவுக்கு பின் கடந்த 18ஆம் தேதி ஹர்திக் – நடாஷா தம்பதி விவாகரத்தை அறிவித்தது குறிப்பிடத்தக்கது.

தமிழ்நாடு, மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களைத் தொடர்ந்து நீட் தேர்வை ரத்து செய்யக் கோரி கர்நாடக சட்டசபையிலும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. நீட் தேர்வு முறைகேடுகள் நாட்டையே உலுக்கி வரும் சூழ்நிலையிலும், இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜக & அதன் கூட்டணி கட்சியைச் சேர்ந்த உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்துள்ளனர். இருப்பினும், சட்டசபையில் காங்கிரஸுக்கு பலம் அதிகம் இருந்ததால் தீர்மானம் நிறைவேறியுள்ளது.

திமுகவுக்கு எதிராக கருத்து தெரிவிக்கும் நிர்வாகிகள் பற்றி, காங்கிரஸ் மேலிடப்பொறுப்பாளர் அஜோய் குமார் அறிக்கை கேட்டுள்ளார். தமிழக காங். நிர்வாகிகள் சிலர், கூட்டணியில் இருந்தால் கூனி குறுகி நிற்க வேண்டுமா?, ஆட்சியில் அதிகாரம், அமைச்சரவையில் இடம் தேவை என கருத்துகளை தெரிவித்ததால், கூட்டணியில் சலசலப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது. இவ்விவகாரம் பூதாகரமான நிலையில், உரியவர்களிடம் விளக்கம் கேட்கப்பட்டுள்ளது.

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் 3ஆவது குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ள கேரளாவைச் சேர்ந்த தீபு, 7ஆவது குற்றவாளியான உதயகுமாரிடம் சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கோவை காவலர் பயிற்சி பள்ளி வளாகத்தில் இருவரிடமும் விசாரணை நடைபெறுகிறது. இந்த வழக்கில் இதுவரை 200 பேரிடம் விசாரணை நடந்துள்ள நிலையில், கைதான சயான், மனோஜ் உள்ளிட்ட 10 பேரின் செல்ஃபோன் தரவுகள் பெறப்பட்டுள்ளன.

பாரிஸ் ஒலிம்பிக்ஸில் பதக்கம் வெல்லவில்லை என்றால் இனி எப்போதுமே அதற்கான வாய்ப்பு தனக்கு கிடைக்காதென இந்திய வில்வித்தை வீரர் தருண்தீப் ராய் (40) கூறியுள்ளார். ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்கும் வீரர்கள் இதுவே தங்களுக்கான கடைசி வாய்ப்பு என நினைத்து விளையாட வேண்டுமென கூறிய அவர், இது தனது 4வது ஒலிம்பிக் போட்டி என்றார். அத்துடன், இந்த முறை பதக்கம் வெல்வேன் எனவும் நம்பிக்கை தெரிவித்துள்ளார். <<-se>>#OLYMPICS<<>>

அமெரிக்க பங்குச்சந்தை குறியீட்டெண் நாஸ்டாக் நேற்று ₹83 லட்சம் கோடி சந்தை மதிப்பை இழந்தது. இதனால், உலகின் டாப் 10 பணக்காரர்கள் ஒரே நாளில் ₹5.52 லட்சம் கோடி சொத்து மதிப்பை இழந்தனர். குறிப்பாக, டெஸ்லா பங்குகள் 12% சரிந்ததால், அதன் CEO எலான் மஸ்கின் சொத்து மதிப்பு ₹1.42 லட்சம் கோடி சரிந்து, ₹19.33 லட்சம் கோடியாக குறைந்தது. டெஸ்லா, ஆல்பாபெட் நிறுவனங்களின் வருவாய் முடிவுகள் சந்தை சரிவுக்கு வித்திட்டன.

அமெரிக்காவில் டொனால்ட் டிரம்ப் மீது கடந்த 13ஆம் தேதி துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது. இந்நிலையில், இந்தியாவிலுள்ள VVIP-களின் பாதுகாப்பை அதிகரிக்க அனைத்து மாநில காவல்துறை தலைமை இயக்குநர்கள், துணை ராணுவப்படையினருக்கு மத்திய அரசு சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. பொதுவெளியில் நடக்கும் பேரணி, பொதுக்கூட்டங்களின்போது கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளை பலப்படுத்தவும் அறிவுறுத்தியுள்ளது.

மத்திய பட்ஜெட்டை கண்டித்து, தமிழகத்தில் அனைத்து மாவட்டத்தலைநகரங்களிலும் நாளை மறுநாள் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என திமுக அறிவித்துள்ளது. பட்ஜெட்டில் மாற்றாந்தாய் போக்குடன் தமிழகத்தை பாஜக வஞ்சித்துவிட்டதாகவும், வெள்ள பேரிடர் நிதி, மெட்ரோ ரயில் திட்ட நிதியை கூட வழங்கவில்லை எனவும் குற்றஞ்சாட்டியுள்ளது. அத்துடன், தமிழக முதல்வரின் கோரிக்கைகள் முற்றிலும் புறக்கணிக்கப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளது.
Sorry, no posts matched your criteria.