India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
மொபைல் போன் வெடித்ததில் 4 குழந்தைகள் உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. உ.பி., மாநிலம் மீரட்டில், வீட்டில் சார்ஜ் போட்டிருந்த மொபைல் போன், குறைந்த மின்னழுத்தம் காரணமாக வெடித்துள்ளது. உடனடியாக தீ வீடு முழுவதும் பரவியதில் கலு (6), கோலு (5), நிஹாரிகா (8), சரிகா (12) ஆகியோர் உயிரிழந்தனர். குழந்தைகளை காப்பாற்ற முயன்ற பெற்றோர்கள் கடும் தீக்காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
SBI வங்கியின் புதிய கட்டண முறைகள் ஏப்ரல் 1ஆம் தேதி முதல் அமலுக்கு வருகின்றன. அதன்படி, மற்ற வங்கியின் ATMகளில் 3 முறை மட்டுமே இலவசமாக பணம் எடுக்க முடியும். SBI வங்கி ATMகளில் 5 முறை இலவசமாக எடுக்கலாம். இதற்கு மேல் மற்ற வங்கியின் ATMகளை பயன்படுத்தினால் ₹20 + GST கட்டணமும், SBI ATMகளுக்கு ₹10 + GST கட்டணமும் வசூலிக்கப்படும். வங்கிக் கணக்கில் பணம் இல்லாமல் போனால் ₹20 + GST கட்டணம் வசூலிக்கப்படும்.
மும்மை- குஜராத் அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் போட்டி, இன்றிரவு 7.30 மணிக்கு நடைபெற உள்ளது. கடந்த 2013ஆம் ஆண்டு முதல், ஐபிஎல் தொடரின் முதல் போட்டியில் மும்பை அணி வெற்றி கண்டதில்லை. 10 ஆண்டுகளாக முதல் போட்டியில் தோல்வியுற்று வரும் மும்பை அணி, இம்முறையாவது வெற்றியுடன் தொடங்குமா? என ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர். இதுவரை 4 முறை நேருக்கு நேர் மோதியதில், இரு அணிகளும் தலா 2 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளன.
அதிமுகவின் இரட்டை இலை சின்னத்திற்கு பிரச்னை வந்தால் ஒழித்து கட்டுவோம் என முன்னாள் அதிமுக அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறியுள்ளார். துரோகம் எந்த வடிவத்தில் வந்தாலும் நெஞ்சுறுதியுடன் வீழ்த்திக் காட்டுவோம் என்று கூறிய அவர், மக்களவைத் தேர்தலில் இரட்டை இலையை வெற்றி பெறச் செய்வோம் என்று சூளுரைத்தார். மேலும் அனைத்து தொகுதிகளிலும் நாளை அதிமுக சார்பில் வேட்பு மனு தாக்கல் செய்யப்பட உள்ளதாகவும் அவர் கூறினார்.
மதிமுகவை சேர்ந்த ஈரோடு எம்.பி கணேச மூர்த்தி தற்கொலை முயற்சி செய்து கவலைக்கிடமாக இருக்கிறார். கடந்த சில மாதங்களாகவே மன அழுத்தத்தில் இருந்த அவர், இன்று மாத்திரை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றதாக சொல்லப்படுகிறது. இதனையடுத்து, ஈரோடு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், தற்போது மேல் சிகிச்சைக்காக கோவை தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டிருக்கிறார்.
லக்னோ-ராஜஸ்தான் அணிகளுக்கு இடையேயான 4ஆவது ஐபிஎல் போட்டி, இன்று மதியம் 3.30 மணிக்கு ஜெய்ப்பூரில் தொடங்க உள்ளது. இதில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி, பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது. இரு அணிகளும் இதுவரை 3 முறை நேருக்கு நேர் சந்தித்ததில், லக்னோ- 1, ராஜஸ்தான்- 2 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளன. காயத்தில் இருந்து மீண்ட லக்னோ அணியின் கேப்டன் கே.எல்.ராகுல், 8 ஆண்டுகளுக்கு பிறகு மிடில் ஆர்டரில் களமிறங்க உள்ளார்.
மஞ்சுமெல் பாய்ஸ் படத்தை சென்னை திரையங்கில் தோனி உள்ளிட்ட சிஎஸ்கே வீரர்கள் கண்டு களித்தனர். நேற்று முன்தினம் நடைபெற்ற ஐபிஎல் துவக்கப் போட்டியில் ஆர்சிபி அணியை சிஎஸ்கே வென்றது. இப்போட்டிக்கு பிறகு, நேற்று பயிற்சியின் இடையே தோனி உள்ளிட்டோர் சத்யம் திரையரங்கம் சென்று மஞ்சுமெல் பாய்ஸ் படத்தை பார்த்தனர். தோனி வந்திருப்பதை பார்த்த ரசிகர்கள், தல என கோஷமிட்டபடி இருந்தனர்.
மக்களவைத் தேர்தலில் போட்டியிடாதது தியாகம் அல்ல, வியூகம் என மநீம தலைவர் கமல்ஹாசன் விளக்கமளித்துள்ளார். இதனால் ஒரு தொகுதி, இரண்டு தொகுதி என இல்லாமல் 40 தொகுதிகளிலும் பரப்புரை மேற்கொள்ளலாம் என்று கூறினார். திமுகவை விமர்சித்து ரிமோட்டை வீசி, டிவியை உடைத்துவிட்டு இப்போது கூட்டணியா என கேட்கிறார்கள்? இது நமது டிவி, நமது ரிமோட் இங்கு தான் இருக்கும், எப்போதும் உடைத்துக்கொள்ளலாம் என்று தெரிவித்தார்.
ஈரோடு தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் கணேசமூர்த்தி தற்கொலைக்கு முயன்றதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. காலையில் உடல்நிலை குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக தகவல் வெளியான நிலையில், தற்போது தற்கொலைக்கு முயன்றது தெரியவந்துள்ளது. வரும் மக்களவை தேர்தலில் போட்டியிட சீட் வழங்கப்படாததால் ஒருவாரமாக மன அழுத்தத்தில் இருந்த அவர், தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளார்.
மக்களவைத் தேர்தலில் தென்காசி தொகுதியில் புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமியும், தமமுக தலைவர் ஜான்பாண்டியனும் முதல்முறையாக நேருக்கு நேர் மோதுகின்றனர். பாஜக ஆதரவாளரான கிருஷ்ணசாமி இம்முறை அதிமுகவுடன் கூட்டணி அமைத்தும், ஜான்பாண்டியன் பாஜகவுடன் கூட்டணி அமைத்து களம் காண்கின்றனர். ஒரே சமுதாயத்தை சேர்ந்த 2 தலைவர்கள் ஒரே தொகுதியில் போட்டியிடுவதால் தென்காசி தொகுதி முக்கியத்துவம் பெற்றுள்ளது.
Sorry, no posts matched your criteria.