News May 13, 2024

இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்யும்

image

தமிழ்நாட்டில் 6 மாவட்டங்களில் ( இன்று காலை 10 மணி வரை) இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. செங்கல்பட்டு, புதுக்கோட்டை, திண்டுக்கல், நீலகிரி, ஈரோடு, திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் மழை பெய்யும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, தேனி, விருதுநகர், தென்காசி, நெல்லை, குமரி, கோவை உள்ளிட்ட 10 மாவட்டங்களுக்கு இன்று கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.

News May 13, 2024

தமிழக ரசிகர்களை குறி வைக்கும் மலையாள படங்கள்

image

தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில், தற்போது மலையாள படங்களுக்கான ஆதரவு அதிகரித்து வருகிறது. அந்த வகையில், தமிழ் ரசிகர்களைக் கவரும் விதமாக ‘கட்டீஸ் கேங்’ மலையாள படத்தை அனில் தேவ் இயக்கியுள்ளார். உன்னிலாலு, சவுந்தரராஜன் உள்ளிட்டோர் நடித்துள்ள இப்படத்தில் கதாநாயகன் ரஜினியின் தீவிர ரசிகராக நடித்துள்ளார். இந்நிலையில், ரஜினி ரசிகர்களை கெளரவிக்கும் விதமாக ஆட்டோ ஓட்டுநர்களுக்கு படக்குழு சீருடை வழங்கியது.

News May 13, 2024

வாக்களித்த மக்களுக்கு எதையும் செய்யவில்லை: அமித் ஷா

image

காங்., சிறுபான்மையினரின் நலனில் மட்டும் அக்கறை கொண்டுள்ளதாக பாஜக தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறது. இந்நிலையில், காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி தனது எம்பி நிதியில் 70%க்கும் மேல் சிறுபான்மையினருக்கு செலவிட்டுள்ளதாக மத்திய அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார். ரேபரேலியில் பிரசாரம் செய்த அவர், பல ஆண்டுகளாக எம்பியாக இருக்கும் சோனியா காந்தி வாக்களித்த மக்களுக்காக எதையும் செய்யவில்லை, என்றார்.

News May 13, 2024

இந்திய பங்குகளை விற்கும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள்

image

நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற்று வருவதால் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் இந்திய பங்குச்சந்தையில் முதலீடு செய்துள்ள பணத்தை வெளியே எடுத்து வருகின்றனர். மே மாதத்தில் மட்டும் சுமார் ₹17 ஆயிரம் கோடி மதிப்பிலான பங்குகளை அவர்கள் விற்றிருக்கிறார்கள். இதனால் இந்திய பங்குச்சந்தைகளில் நிலையற்ற தன்மை காணப்படுகிறது. இந்தப் பணத்தை அவர்கள் சீனாவில் முதலீடு செய்துவருவதாகவும் தகவல் வெளியாகியிருக்கிறது.

News May 13, 2024

எம்ஜிஆருடன் விஜய்யை ஒப்பிட்ட செல்லூர் ராஜூ

image

நடிகர் விஜய் நன்றாகச் செயல்படக் கூடியவர் என்றும், அவர் அரசியல் கட்சி தொடங்கியதில் மகிழ்ச்சி எனவும் அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார். அத்துடன், எம்ஜிஆரைப் போல அவர் சம்பாதித்த பணத்தை பொதுமக்கள், மாணவர்களுக்குச் செலவு செய்ய நினைப்பதாகவும் புகழ்ந்து கூறினார். முன்னதாக, நேற்று இபிஎஸ் பிறந்தநாளையொட்டி, அவருக்கு விஜய் வாழ்த்து தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

News May 13, 2024

செல்வராஜ் உடலுக்கு நாளை இறுதிச்சடங்கு

image

மறைந்த நாகை எம்பி செல்வராஜ் கட்சியில் பல பெரிய பொறுப்பு, பதவிகளில் இருந்தபோதும், கடைசி வரை மக்கள் தொண்டராக இருந்தவர். 7 முறை மக்களவைத் தேர்தலில் போட்டியிட்டு 4 முறை (989, 1996, 1998, 2019) எம்பியாக தேர்வானவர். அவரின் இறுதிச் சடங்கு சித்தமல்லி கிராமத்தில் நாளை காலை 10 மணிக்கு நடைபெறும் என்றும் தமிழக முழுவதும் செங்கொடி அரைக் கம்பத்தில் பறக்கவிடப்படும் எனவும் இந்திய கம்யூ., அறிவித்துள்ளது.

News May 13, 2024

4ஆம் கட்ட வாக்குப்பதிவு தொடக்கம்

image

உ.பி, ஒடிசா, மகாராஷ்டிரா உள்ளிட்ட 10 மாநிலங்களில் உள்ள 96 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு துவங்கியுள்ளது. மேலும், ஆந்திரா, ஒடிசா சட்டப் பேரவைத் தேர்தலுக்கான வாக்குப் பதிவும் ஆரம்பித்துள்ளது. ஆந்திராவில் 175 தொகுதிகளிலும், ஒடிசாவில் 28 தொகுதிகளுக்கும் தேர்தல் நடைபெறுகிறது. கடந்த 2019இல், தற்போது தேர்தல் நடக்கும் 96 தொகுதிகளில், பாஜக கூட்டணி 41 இடத்திலும், INDIA கூட்டணி 11 இடத்திலும் வென்றிருந்தன.

News May 13, 2024

யார் இந்த செல்வராஜ்

image

ஏழைக் குடும்பத்தில் பிறந்து, சாதிய அடக்குமுறைக்கு எதிராக வெகுண்டெழுந்த செல்வராஜ், 1975இல் இந்திய கம்யூ., கட்சியில் இணைந்தார். சாணிப்பால் சவுக்கடி கொடுமைக்கு எதிராக விவசாய தொழிலாளர்களை திரட்டி போராட்டம் மூலம் வென்று காட்டியவர். ஏறக்குறைய 45 ஆண்டுகளுக்கு மேல் அரசியலில் இருந்த அவர், ஏழை எளிய மக்களின் பல்வேறு பிரச்னைகளுக்காக போராட்டம் நடத்தி வெற்றிக் கண்டு, நாகை மாவட்டத்திற்கு ஒளியாக திகழ்ந்தவர்.

News May 13, 2024

Knock-outஆக மாறப் போகும் சிஎஸ்கேvsஆர்சிபி

image

ஐபிஎல் தொடரின் தற்போதைய புள்ளிப் பட்டியல் சுவாரஸ்யமான பல வாய்ப்புகளை முன்னிறுத்துகிறது. குறிப்பாக மே 18ஆம் தேதி நடைபெறும் CSK – RCB இடையேயான போட்டி Knock-out போட்டியாக மாறுவதற்கு வாய்ப்பு உள்ளது. இரண்டு அணிகளுக்கும் 1 போட்டி மட்டுமே மீதமிருக்கும் நிலையில் கடைசிப் போட்டியை வெல்லும் அணி அடுத்த சுற்றுக்கு போகலாம். அல்லது, இரண்டு அணிகளுமே ப்ளே-ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறாமல் போகவும் வாய்ப்புள்ளது.

News May 13, 2024

இன்று முதல் சிறப்புப் பயிற்சி வகுப்புகள்

image

10ஆம் வகுப்புத் தேர்வில் தேர்ச்சி பெறாத மற்றும் வருகை புரியாத மாணவர்களுக்கு ‘தொடர்ந்து கற்போம்’ என்ற திட்டத்தின் கீழ் இன்று முதல் சிறப்புப் பயிற்சி வகுப்புகள் நடைபெறுகின்றன. பாடவாரியாக ஆசிரியர் வல்லுநர்கள் குழு மூலம் தயாரித்த குறைந்தபட்ச கற்றல் கையேடு (MLM), வினாத்தாள் மாணவர்களுக்கு வழங்கப்பட உள்ளது. இந்த சிறப்புப் பயிற்சி மையம் மாணவர்கள் முன்னதாக பயின்ற பள்ளியிலேயே நடைபெறும்.

error: Content is protected !!