News May 13, 2024

மெட்ராஸ் vs கவுண்டம்பாளையம்

image

தமிழ் சினிமாவுலகில் அரசியல் ரீதியான இரண்டு அணிகள் உருவாகி வருகின்றன. பா.ரஞ்சித், மாரி செல்வராஜ், வெற்றி மாறன் போன்ற தலித் அரசியல் பேசும் இயக்குநர்கள் ஒருபுறம். பேரரசு, நடிகர் ரஞ்சித், மோகன். ஜி, RB. உதயகுமார், கனல் கண்ணன், பிரவீன் காந்தி என அவர்களுக்கு எதிரான அரசியல் பேசுபவர்கள் ஒருபுறம் என இரு அணியாக பிரிந்து நிற்கின்றனர். இதுகுறித்து உங்களது கருத்து என்ன?

News May 13, 2024

நாகை எம்பி மறைவுக்கு முதல்வர் இரங்கல்

image

நாகை எம்பி செல்வராஜ் மறைவு செய்தி கேட்டு மிகுந்த வேதனை அடைந்ததாக முதல்வர் ஸ்டாலின் உருக்கமாக இரங்கல் தெரிவித்துள்ளார். அரை நூற்றாண்டு காலம் பொதுவுடமை இயக்கத்தில் தன்னை முழுமையாக ஒப்படைத்து, டெல்டா மாவட்ட ரயில்வே திட்டங்களுக்காகவும், வேளாண் மக்கள் உரிமைக்காகவும் பல போராட்டங்களை நடத்தியவர். என் மீது தனிப்பட்ட முறையில் பாசம் வைத்த அவரின் இழப்பு தமிழ் சமூகத்திற்கு பெரும் இழப்பு என தெரிவித்துள்ளார்.

News May 13, 2024

ஆந்திராவில் வாக்குச்சாவடி முகவர்கள் கடத்தல்?

image

ஆந்திராவில் மக்களவைத் தேர்தலோடு, சட்டமன்றத்திற்கும் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. இந்நிலையில், அங்கு புங்கனூர் தொகுதியில் தெலுங்கு தேசம் கட்சியைச் சேர்ந்த வாக்குச்சாவடி முகவர்கள் 15 பேர் கடத்தப்பட்டதாக அக்கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு புகார் தெரிவித்துள்ளார். ஆளும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி பிரமுகரின் ஆதரவாளர்களே கடத்தியுள்ளதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

News May 13, 2024

எம்.பி செல்வராஜ் மறைவுக்கு முத்தரசன் இரங்கல்

image

நாகை எம்.பி செல்வராஜ் மறைவுக்கு சிபிஎம் மாநிலச் செயலாளர் முத்தரசன் இரங்கல் தெரிவித்துள்ளார். உடல்நலக்குறைவால் தொடர் சிகிச்சை பெற்று வந்த நிலையிலும், கட்சி பொறுப்புகளையும், மக்கள் பிரதிநிதி என்ற முறையில் தொகுதிப் பிரச்னைகளிலும் ஓயாது செயல்பட்டு முன்னுதாரணமாக திகழ்ந்து வந்ததாக நினைவுகூர்ந்துள்ளார். அத்துடன், அவரை இழந்து தவிக்கும் அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல்களையும் அவர் தெரிவித்துள்ளார்.

News May 13, 2024

நுரையீரல் சளியை எளிதாக வெளியேற்றலாம்

image

*ஒரு ஸ்பூன் வெந்தயத்துடன் ஒரு கிளாஸ் தண்ணீர் ஊற்றி, சுமார் 5 நிமிடங்கள் கொதிக்க விட்டு குடித்து வந்தால், நுரையீரலில் உள்ள சளி கரைந்து வெளியேறும். *தினமும் மூச்சுப்பயிற்சி செய்வதன் மூலம் நுரையீரல் சளி கரைந்து வெளியேற வாய்ப்பு உள்ளது. *சளி வெளியேற கொதிக்கும் நீரில் ஆவி பிடிக்கலாம். *கொதிக்கும் நீரில் உப்பு கலந்து, வெதுவெதுப்பாக இருக்கும்போது வாயில் ஊற்றி கொப்பளிக்க நுரையீரலில் உள்ள சளி குறையும்.

News May 13, 2024

5 போட்டிகளில் தொடர் வெற்றி பெற்ற RCB

image

நடப்பு ஐபிஎல் தொடரில் தொடர்ச்சியாக 5 போட்டிகளில் வெற்றி பெற்ற முதல் அணி என்ற பெருமையை RCB பெற்றுள்ளது. DCக்கு எதிரான நேற்றைய போட்டியில் RCB 47 ரன்கள் வித்தியாசத்தில் வென்று, ப்ளே-ஆஃப் சுற்றுக்கு செல்வதற்கான வாய்ப்பையும் தக்கவைத்துள்ளது. புள்ளிப்பட்டியலில் 5வது இடத்திற்கு முன்னேறிய RCB, இதுவரை 13 போட்டிகளில் விளையாடியுள்ளது. அதில், 6 போட்டிகளில் வெற்றியும், 7 போட்டிகளில் தோல்வியும் அடைந்துள்ளது.

News May 13, 2024

இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்யும்

image

தமிழ்நாட்டில் 6 மாவட்டங்களில் ( இன்று காலை 10 மணி வரை) இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. செங்கல்பட்டு, புதுக்கோட்டை, திண்டுக்கல், நீலகிரி, ஈரோடு, திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் மழை பெய்யும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, தேனி, விருதுநகர், தென்காசி, நெல்லை, குமரி, கோவை உள்ளிட்ட 10 மாவட்டங்களுக்கு இன்று கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.

News May 13, 2024

தமிழக ரசிகர்களை குறி வைக்கும் மலையாள படங்கள்

image

தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில், தற்போது மலையாள படங்களுக்கான ஆதரவு அதிகரித்து வருகிறது. அந்த வகையில், தமிழ் ரசிகர்களைக் கவரும் விதமாக ‘கட்டீஸ் கேங்’ மலையாள படத்தை அனில் தேவ் இயக்கியுள்ளார். உன்னிலாலு, சவுந்தரராஜன் உள்ளிட்டோர் நடித்துள்ள இப்படத்தில் கதாநாயகன் ரஜினியின் தீவிர ரசிகராக நடித்துள்ளார். இந்நிலையில், ரஜினி ரசிகர்களை கெளரவிக்கும் விதமாக ஆட்டோ ஓட்டுநர்களுக்கு படக்குழு சீருடை வழங்கியது.

News May 13, 2024

வாக்களித்த மக்களுக்கு எதையும் செய்யவில்லை: அமித் ஷா

image

காங்., சிறுபான்மையினரின் நலனில் மட்டும் அக்கறை கொண்டுள்ளதாக பாஜக தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறது. இந்நிலையில், காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி தனது எம்பி நிதியில் 70%க்கும் மேல் சிறுபான்மையினருக்கு செலவிட்டுள்ளதாக மத்திய அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார். ரேபரேலியில் பிரசாரம் செய்த அவர், பல ஆண்டுகளாக எம்பியாக இருக்கும் சோனியா காந்தி வாக்களித்த மக்களுக்காக எதையும் செய்யவில்லை, என்றார்.

News May 13, 2024

இந்திய பங்குகளை விற்கும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள்

image

நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற்று வருவதால் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் இந்திய பங்குச்சந்தையில் முதலீடு செய்துள்ள பணத்தை வெளியே எடுத்து வருகின்றனர். மே மாதத்தில் மட்டும் சுமார் ₹17 ஆயிரம் கோடி மதிப்பிலான பங்குகளை அவர்கள் விற்றிருக்கிறார்கள். இதனால் இந்திய பங்குச்சந்தைகளில் நிலையற்ற தன்மை காணப்படுகிறது. இந்தப் பணத்தை அவர்கள் சீனாவில் முதலீடு செய்துவருவதாகவும் தகவல் வெளியாகியிருக்கிறது.

error: Content is protected !!