India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

மத்திய அரசின் பல்வேறு துறைகளில் காலியாகவுள்ள 17,727 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி நாள். SSC சார்பில் நடத்தப்படும் CGL-2024 தேர்வுக்கு விண்ணப்பிக்கும் பட்டதாரிகள், 18-32 வயதுக்குள் இருக்க வேண்டும். முதல்நிலை கணினி வழி தேர்வு: செப்டம்பர், அக்டோபரிலும், 2ஆம் நிலை கணினி வழி தேர்வு: டிசம்பரிலும் நடைபெறும். மேலும் விவரங்களுக்கு <

மத்திய அரசின் பட்ஜெட்டில் தமிழகம் புறக்கணிக்கப்பட்டதைக் கண்டித்து திமுக சார்பில் இன்று அனைத்து மாவட்டங்களிலும் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. தொடர்ந்து, தமிழக காங்., சார்பில் இன்று மாலை ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. ஆக.1ம் தேதி இரு கம்யூனிஸ்ட் கட்சிகளும் மறியல் போராட்டம் அறிவித்துள்ளன. கூட்டணி கட்சிகளுக்கு திமுக அழைப்பு விடுக்காததே, தனித்தனியாக போராடுவதற்கு காரணம் எனக் கூறப்படுகிறது.

ஆடி வெள்ளி மட்டுமில்லை, ஆடி சனிக்கிழமைக்கும் பல சிறப்புகள் இருப்பதாக ஆன்மிகத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆடி மாத வெள்ளிக்கிழமை அம்மன் வழிபாடும், சனிக்கிழமை சனி பகவானின் வழிபாடும் மிகவும் சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது. சனி தோஷம் உள்ளவர்கள், ஆடி சனியன்று சிவனை வழிபட்டால் சனி தோஷம் குறையும் என்று கூறப்படுகிறது. சிவன், சனி பகவான் ஆசீர்வாதம் பெற ஆடி சனி சிறந்த நாளாக சொல்லப்படுகிறது.

காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கடந்த சில தினங்களாக கன மழை பெய்துவருவதால் காவிரி ஆற்றில் நீர் வரத்து அதிகரித்துள்ளது. காவிரி ஆற்றின் தமிழக எல்லையான பிலிகுண்டுலுவுக்கு நீர்வரத்து 1.15 லட்சம் கன அடியாகவும், வினாடிக்கு 1,50,000 ஆக அதிகரித்துள்ளது. நீர் வரத்து அதிகரித்ததன் காரணமாக ஒகேனக்கல்லில் சுற்றுலா பயணிகள் குளிக்கவும், பரிசல் இயக்கவும் தடை நீட்டிக்கப்பட்டுள்ளது.

இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது. இதில் முதல் போட்டி இன்று இரவு 7 மணிக்கு பல்லேகலே மைதானத்தில் நடைபெறுகிறது. கோலி, ரோஹித், ஜடேஜா போன்ற சீனியர் வீரர்கள் டி20 போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றுள்ள நிலையில், சூர்யகுமார் தலைமையிலான இளம் அணி இன்று களமிறங்குகிறது. இன்று எந்த அணி வெற்றிபெறும்?

தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து கல்லூரிகள், பல்கலை.,யில் கடந்த 5 ஆண்டுகளில் சேர்ந்த மாற்றுத்திறனாளி மாணவர்களின் விவரங்களை சமர்பிக்க யுஜிசி உத்தரவிட்டுள்ளது. மாற்றுத்திறனாளி மாணவர்கள், ஆசிரியர்கள், இதர பணிகளை செய்பவர்களின் விவரங்களை ஆக.31க்குள் அனுப்ப உத்தரவிட்டுள்ளது. மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு அனைத்து உரிமைகளும் கிடைக்கிறதா என்பதை சரிபார்க்கவே தகவல்கள் கேட்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேற்கு திசை காற்று வேகமாறுபாடு காரணமாக, நீலகிரி, கோவை மாவட்ட மலை பகுதிகளில் இன்று ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் இன்று ஓரிரு இடங்களில் இடி மற்றும் மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை மையம் கூறியுள்ளது. நாளை முதல் 1ஆம் தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் குறிப்பிட்டுள்ளது.

➤ மகளிர் ஆசிய கோப்பை டி20 போட்டியில் இந்தியா – இலங்கை அணிகள் இறுதி சுற்றுக்கு முன்னேறியது
➤ வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவானது – சென்னை வானிலை ஆய்வு மையம்
➤ தமிழகத்தில் உள்ள அனைத்து அரசுப் பள்ளிகளில் சாதிப் பெயரை பயன்படுத்தக் கூடாது – ஐகோர்ட்
➤ தமிழகம், ராஜஸ்தான், திரிபுரா, அசாம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களுக்கு மேலிட பொறுப்பாளர்களை நியமனம்

பட்ஜெட்டை கண்டித்து தமிழகம் முழுவதும் திமுக நடத்த உள்ள போராட்டம் வேடிக்கையானது என தமிழக பாஜக துணை தலைவர் வி.பி.துரைசாமி விமர்சித்துள்ளார். மத்திய பட்ஜெட்டில் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு, முத்ரா கடன் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் உள்ளதாகவும், அதன்மூலம் தமிழகமும் பயன்பெறும் என்றார். மேலும், தெற்கு ரயில்வேக்கு கடந்த 10 ஆண்டுகளில் ₹28,400 கோடிக்கு திட்டங்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

போக்குவரத்து கழகத்தில் உள்ள பணியிடங்கள் அனைத்தும் விரைவில் நிரப்பப்படும் என அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார். விழுப்புரத்தில் நடைபெற்ற விழாவில் கலந்துகொண்டு பேசிய அவர், கடந்த அதிமுக ஆட்சியில் ஓய்வுபெறும் வயதை 60 ஆக உயர்த்தியதால் புதிய கண்டக்டர், ஓட்டுநர்கள் நியமிக்கப்படவில்லை என்றார். கடும் நிதிச்சுமையில் இருந்த போக்குவரத்து கழகம், திமுக ஆட்சியில் புத்துயிர் பெற்றுவருவதாக தெரிவித்தார்.
Sorry, no posts matched your criteria.