India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

INDIA கூட்டணி ஆட்சிக்கு வந்தவுடன் அக்னிபாத் திட்டத்தை ரத்து செய்வோம் என சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் தெரிவித்துள்ளார். அரசியல் ஆதாயத்திற்காக அக்னிபாத் திட்டத்தை எதிர்க்கட்சிகள் எதிர்ப்பதாக பிரதமர் மோடி கூறியிருந்தார். அதற்கு பதிலளித்த அவர், “குறுகிய கால ராணுவ ஆள்சேர்ப்பு அக்னிபாத் திட்டத்தை, 24 மணி நேரத்தில் ரத்து செய்வோம். மீண்டும் பழைய முறையில் ஆள்சேர்ப்பு நடைபெறும்” எனக் கூறியுள்ளார்.

இந்நிலையில், 25 கிலோவுக்கு மேல் உள்ள அரிசி உள்ளிட்ட உணவுப் பொருள்களை பைகளில் அடைத்து விற்பனை செய்யப்படுவதால் அவை விவசாய பண்ணை விளைபொருள் அல்ல என்று GST கவுன்சில் ஏற்கெனவே பரிந்துரைத்துள்ளது. இதனை மத்திய மறைமுக வரிகள் வாரியம் சுட்டிக்காட்டி அறிக்கை வெளியிட்டுள்ளது. இதுகுறித்து உத்தரவு வரும் என்றால், 26 கிலோவுக்கு மேல் பைகளில் விற்கப்படும் பொருள்களுக்கு 5% GST விதிக்கப்படும் என தெரிவித்துள்ளது.

தமிழக அரசு அளிக்கும் சாதி சான்றிதழ், கல்வி உதவித் தொகை, வேலைவாய்ப்பு உள்ளிட்ட பயன்கள் பெற உதவுகிறது. இதை ஆன்லைனில் எளிதில் விண்ணப்பித்து பெறலாம். பிள்ளைகளுக்கு சாதி சான்றிதழுக்கு விண்ணப்பிக்க விரும்பும் பெற்றோர், <

பிறகு, இணையதளத்தில் பிரத்யேக LOG IN, கடவுச்சொல்லை உருவாக்கி உள்நுழைய வேண்டும். பின்னர் வருவாய்த்துறை சேவைக்கு சென்று, சாதி சான்றிதழ் பிரிவை தேர்ந்தெடுத்து, CAN எண்ணை விண்ணப்பித்து பெற்று, பெற்றோர் சாதி சான்றிதழ் எண்ணை குறிப்பிட வேண்டும். இதையடுத்து, விண்ணப்பதாரர் புகைப்படம், முகவரி சான்று, பெற்றோர் சாதி சான்றை பதிவேற்றி கட்டணம் செலுத்தி விண்ணப்பிக்கலாம்.

இந்தி பேசாத மாநிலங்களுக்கு நிதி ஒதுக்காமல் பாஜக வஞ்சனை செய்வதாக திமுக எம்.பி., தயாநிதி மாறன் குற்றஞ்சாட்டியுள்ளார். சென்னையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் பேசிய அவர், “தமிழர்கள் பாஜகவுக்கு வாக்களிக்காததால் மத்திய அரசின் பட்ஜெட்டில் திருக்குறளும் இல்லை, தமிழகத்துக்கு நிதியும் இல்லை. தமிழகத்துக்கு நிதி ஒதுக்காமல் வஞ்சித்த பாஜகவுக்கு தமிழர்கள் தேர்தலில் தக்க பாடம் புகட்டுவார்கள்” எனத் தெரிவித்துள்ளார்.

நீலகிரி, கோவையில் ஓரிரு பகுதிகளில் இன்றும், நாளையும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. தமிழகத்தில் இன்றும், நாளையும் இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும், தொடர்ந்து 5 நாள்களுக்கு ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது. சென்னையில் ஓரிரு இடங்களில் அடுத்த 48 மணி நேரத்திற்கு லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் கூறியுள்ளது.

இந்தியன் ஆயில் கார்ப்பரேசன் நிறுவனத்தில், டெக்னிகல் அட்டென்டன்ஸ், ஜூனியர் என்ஜீனியர் அசிஸ்டெண்ட் உள்ளிட்ட 476 காலி பணியிடங்களை நிரப்பும் அறிவிப்பு அண்மையில் வெளியிடப்பட்டது. இந்த பணிகளுக்கான கல்வித் தகுதியாக, ஐடிஐ, என்ஜீனியரிங் டிப்ளமோ குறிப்பிடப்பட்டுள்ளது. விருப்பமுள்ளோர் <

பாரிஸ் ஒலிம்பிக்ஸ் தொடக்க விழாவின் சிறப்பு அம்சமாக கருதப்படும் கம்பீர அணிவகுப்பில் தென் கொரியாவை வட கொரியா என்று IOC தவறாக அறிமுகப்படுத்தியது. இது விளையாட்டு தளத்தைக் கடந்து அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால் ஆவேசம் கொண்ட தென் கொரிய விளையாட்டு அமைச்சகம், கடும் கண்டனம் தெரிவித்தது. இதையடுத்து, நடந்த தவறுக்கு IOC-ன் அதிகாரப்பூர்வ X பக்கத்தில் மன்னிப்புக் கேட்டு சூழலை சரி செய்துள்ளது.

இந்திய பங்குச் சந்தையில் மூன்று ஆண்டுகளுக்கு வர்த்தகம் செய்ய விஜய் மல்லையாவுக்கு SEBI தடை விதித்துள்ளது. 2006-2008 காலக்கட்டத்தில் வெளிநாட்டு வங்கிக் கணக்குகளில் இருந்து பங்கு சந்தையில் (பங்கு & பத்திரங்கள்) சட்டவிரோதமாக அவர் முதலீடு செய்ததாக புகார் எழுந்தது. அதனை விசாரித்த SEBI, அவர் முறைகேடுகளை செய்ததை உறுதி செய்தது. வங்கிகளில் ₹9,000 கோடி மோசடி செய்த அவர் பிரிட்டனில் பதுங்கியிருக்கிறார்.

டெல்லியில் உள்ள தாஜ் பேலஸில் ‘இந்திய கவுச்சர் வீக்’ கொண்டாட்டத்தின் 2ஆம் நாள் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்வில், சிறப்பு மாடலாக கலந்துகொண்ட பாலிவுட் அழகிகள் ஜாக்குலின், ரித்திமா கபூர் தங்களது வசீகரத்தால் பார்வையாளர்களை ஈர்த்தனர். புகழ்பெற்ற ரோஸ்ரூம் ஆடையகத்தின் வடிவமைப்பாளர்கள் சுனித் வர்மா & இஷா ஜஜோடியா ஆகியோர் ‘காடு’ எனும் கருப்பொருளில் தங்கள் ஆடை & அணிகலன்களை காட்சிப்படுத்தினர்.
Sorry, no posts matched your criteria.