India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

இந்திய அணிக்கு எதிரான இந்த டி20 தொடரில் இலங்கை வீரர்கள் தங்களது 100 சதவீத உழைப்பை தர வேண்டும் என அந்த அணியின் கேப்டன் சரித் அசலங்கா கூறியுள்ளார். எங்கள் அணியில் திறமையான வீரர்கள் பலர் இருந்தாலும், அந்த திறமையை வெற்றியாக மாற்றி போட்டியை வெல்வதே முக்கியம் என்று தெரிவித்துள்ளார். இரு அணிகளுக்கு இடையேயான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதல் ஆட்டம் இன்று நடைபெறுகிறது.

திமுகவை பற்றி பேசியதற்காக கட்சியில் இருந்து தன்னை நீக்க வேண்டும், என்ற கோரிக்கை எழுவது ஆச்சரியமாக இருப்பதாக கார்த்தி சிதம்பரம் தெரிவித்துள்ளார். ஒரு வாரத்திற்கு முன்பு காங்கிரஸ் தலைவரை மேடையில் வைத்துக்கொண்டு தான் தெரிவித்த கருத்துக்காக, ஈவிகேஎஸ் இளங்கோவன் தன்னை விமர்சிப்பது தேவையில்லாதது என்றும் கூறியுள்ளார். முன்னதாக, திமுகவிடம் அடிமையாக இருக்கக்கூடாது என கார்த்தி சிதம்பரம் கூறியிருந்தார்.

33ஆவது ஒலிம்பிக்ஸில் சீனா அணி முதல் தங்கப் பதக்கத்தை வென்றுள்ளது. 10 மீட்டர் ஏர் ரைஃபிள் கலப்பு பிரிவு இறுதிப் போட்டியில், தென்கொரியாவை சீனா எதிர்கொண்டது. விறுவிறுப்பாக நடைபெற்ற இந்தப் போட்டியில், சீனாவின் ஹுவாங் யுடிங், ஷெங் லிஹாவ் ஜோடி, கொரிய வீரர்கள் வீழ்த்தி வெற்றி பெற்றனர். இதன்மூலம், 2024 ஒலிம்பிக் தொடரில் முதல் தங்கப் பதக்கம் வென்ற நாடு என்ற பெருமையை சீனா பெற்றுள்ளது. <<-se>>#OLYMPICS2024<<>>

நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்ற மம்தாவை முழுமையாக பேச விடாமல் தடுத்ததற்கு முதல்வர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். எதிர்கட்சிகள் ஜனநாயகத்தின் அங்கம் என்பதை புரிந்துக்கொள்ளுமாறு அறிவுறுத்திய அவர், இதுதான் மாநில முதல்வரை நடத்தும் விதமா? என்றும் கேள்வி எழுப்பினார். சந்திரபாபு நாயுடுவை 20 நிமிடம் பேசவிட்டு, தனக்கு 5 நிமிடமே தரப்பட்டதாக மம்தா குற்றஞ்சாட்டியதை மேற்கோள் காட்டி அவர் கண்டித்துள்ளார்.

பாரிஸ் ஒலிம்பிக்ஸில் துப்பாக்கி சுடுதல் பிரிவில் இருந்து, இந்திய கலப்பு இரட்டையர் அணி வெளியேறியது. 10 மீ., ஏர் ரைபிள் பிரிவின் தகுதிச் சுற்றில் ரமிதா ஜிண்டால் – அர்ஜூன் பபுதா ஜோடி 6ஆவது இடத்தை பிடித்தது. மற்றொரு தகுதிச் சுற்றில், இளவேனில் வாலறிவன்-சந்தீப் சிங் ஜோடி 12ஆவது இடத்தை பிடித்து வெளியேறியது. இதன் மூலம் இரு அணிகளும் பதக்கச் சுற்றுக்கு தகுதி பெறவில்லை. <<-se>>#OLYMPICS2024<<>>

ஒவ்வொரு மாத ஊதியத்திலும் சிலருக்கு வருமான வரி பிடித்தம் செய்யப்படும். இது, ஆண்டு வருமானத்தை கணக்கிட்டு, அதற்கான வரி வகுக்கப்பட்டு பிடித்தம் செய்யப்படும். இதில் பழைய விகிதத்தில் அரசு நிர்ணயித்த வருமானத்துக்கு கூடுதலான வருமானத்துக்கு வசூலிக்கப்படும் தொகைக்கு ரூ.2 லட்சம் வரை மருத்துவம், வாடகை, காப்பீடு உள்ளிட்ட செலவு கணக்குகளை தாக்கல் செய்து பிடித்தத்தை திரும்ப பெற முடியும்.

33ஆவது ஒலிம்பிக்ஸ், பாரிஸில் கோலாகலமாக தொடங்கியுள்ளது. இதில், 10 மீட்டர் துப்பாக்கிச் சுடும் போட்டியில், கஜகஸ்தான் அணி வெண்கலம் வென்றுள்ளது. இதன்மூலம், 2024 ஒலிம்பிக்கில், முதல் பதக்கத்தை வென்ற நாடு என்ற பெருமையை அது பெற்றுள்ளது. ஒலிம்பிக்கில் நூற்றுக்கணக்கான போட்டிகளில் பங்கேற்க ஆயிரக்கணக்கான வீரர்கள் தயாராக உள்ள நிலையில், அதனை பார்வையிட லட்சக்கணக்கான ரசிகர்கள் பாரிஸில் குவிந்துள்ளனர்.

மத்திய அரசின் 2024-25 பட்ஜெட், தமிழ்நாடு இந்தியாவில் உள்ளதா? இல்லையா என்ற ஐயப்பாட்டை மக்கள் மத்தியில் எழுப்பியுள்ளதாக, திமுக செய்தி தொடர்பாளர் TKS இளங்கோவன் தெரிவித்துள்ளார். கடலூரில் பேசிய அவர், வளர்ச்சி பெற்ற மாநிலங்களில், தமிழ்நாடு முன்னணியில் இருப்பதாக கூறினார். ₹12,000 கோடி அளவிற்கு மத்திய அரசுக்கு வரி கொடுத்தும், தமிழ்நாட்டிற்கு பிரதிபலனாக கிடைக்கும் பணம் குறைவுதான் என்றும் சாடினார்.

‘C’ என்ற எழுத்தில் தொடங்கும் பெயரைக் கொண்டவர்கள் தன்னை முன்னிலைப்படுத்தாமல் மற்றவர்களுக்கு முக்கியத்துவம் அளிப்பவர்களாக இருப்பார்கள் என்று ஜோதிடர்கள் கூறுகின்றனர். கனிவான மனம் கொண்டவர்களாக இருக்கும் அதே நேரத்தில் அதீத மன விரக்தியிலும் இருப்பார்கள் என்று தெரிவிக்கின்றனர். குருவின் ஆதிக்கம் கொண்ட ‘C’ என்ற எழுத்தில் பெயர் கொண்ட உங்கள் குடும்பத்தினர், நண்பர்களுக்கு இதை பகிருங்கள்.

25 கிலோ எடைக்கும் கூடுதலாக உள்ள அரிசி மூட்டைகளுக்கும் ஜிஎஸ்டி விதிக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளதால், சில்லறை விலையில் அதன் விலை மேலும் அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. 25 கிலோ மற்றும் அதற்கு கீழ் உள்ள அரிசி உள்ளிட்ட உணவுப்பொருள்களுக்கு தற்போது 5% ஜிஎஸ்டி வசூலிக்கப்படுகிறது. ஜிஎஸ்டியில் இருந்து விலக்கு பெறும் வகையில் அரிசி விற்பனையாளர்கள் தற்போது 26 கிலோ எடை மூட்டையில் அவற்றை விற்பனை செய்கின்றனர்.
Sorry, no posts matched your criteria.