News March 25, 2024

கோடீஸ்வரனாகப் போகும் ராசிகள்

image

ஏப்ரல் மாதம் 7ஆம் தேதி சனி பகவான் பூரட்டாதி நட்சத்திரத்தில் நுழைகிறார். இது குரு பகவானின் நட்சத்திரம் என்பதால் இந்த இடமாற்றம் மேஷம், ரிஷபம், மிதுனம், கடக ராசியினருக்கு அதிர்ஷ்டம் காத்திருக்கிறது. வழக்குகளில் சாதகமான தீர்ப்பு, தொழில்களில் புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாவது, நிலுவையில் இருந்த பணம் வந்து சேருவது, குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சி என மேற்கண்ட ராசியினருக்கு சுப பலன்கள் தேடி வரப்போகிறது.

News March 25, 2024

அதிகம் டீ குடித்தால் இத்தனை தீமைகளா?

image

▶ஒரு நாளைக்கு 3 கப்-களுக்கு மேல் டீ குடித்தால், உணவுகளில் உள்ள இரும்புச்சத்துக்கள் உறிஞ்சப்பட்டு, உடலின் திறன் பாதிப்படையும். ▶கருச்சிதைவு, பிறக்கும் குழந்தைக்கு எடை குறைவு போன்ற சிக்கல்களின் அபாயத்தை அதிகரிக்கும். ▶கவலை, மன அழுத்தம், அமைதியின்மைக்கு முக்கிய காரணமாகும். ▶தூக்கமின்மை மற்றும் உடல் பருமன் பிரச்னை ஏற்படும். ▶நெஞ்செரிச்சல் மற்றும் ஆசிட் ரிஃப்ளெக்ஸ் அறிகுறிகளை அதிகரிக்கும்.

News March 25, 2024

RCB ஜெர்சியா? CSK ஜெர்சியா?

image

RCB – PBKS இடையேயான ஐபிஎல் போட்டியை தொகுத்து வழங்கிக் கொண்டிருந்த போது, இந்தப் போட்டியில் பெங்களூரு அணி வெற்றி பெற்றால் இனி வரும் பெங்களூரு அணி போட்டிகளில் RCB ஜெர்சியை அணிவேன் என முன்னாள் நியூசி., வீரர் ஸ்காட் ஸ்டைரிஸும், ஒருவேளை பெங்களூரு அணி தோல்வி அடைந்தால் இனி வரும் சென்னை அணியின் போட்டிகளில் CSK ஜெர்சியை அணிகிறேன் என தென்.ஆப்., வீரர் ஏ.பி.டிவில்லியர்ஸும் பந்தயம் வைத்துக் கொண்டனர்.

News March 25, 2024

CUET தேர்வுக்கு விண்ணப்பிக்க நாளையே கடைசி

image

மத்திய பல்கலைக்கழக மாணவர் சேர்க்கைக்கான பொது நுழைவுத்தேர்வுக்கு விண்ணப்பிக்க நாளையே கடைசி நாள். மத்திய பல்கலைக்கழகங்கள் மற்றும் அதன் கீழ் இயங்கும் கல்லூரிகளில் சேர CUET எனப்படும் பொது நுழைவுத் தேர்வு நடத்தப்படுகிறது. இந்த ஆண்டிற்கான தேர்வு மே 15 – 31வரை நடைபெற உள்ளதாக பல்கலை., மானியக்குழு தெரிவித்துள்ளது. மேலும் விவரங்களுக்கு exams.nta.ac.in என்ற இணையதளத்தை காணலாம்.

News March 25, 2024

தேர்தல் திருவிழா அழைப்பிதழ்

image

மக்களவைத் தேர்தல் தமிழகத்தில் களைகட்டியுள்ள சூழலில், தேர்தல் திருவிழா அழைப்பிதழ் என்ற பெயரில் நெல்லை மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர்கள் வெளியிட்டுள்ள பத்திரிகை அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. திருமண அழைப்பிதழ் போன்று வடிவமைக்கப்பட்டுள்ள அந்தப் பத்திரிகையில், தமிழகத்தில் தேர்தல் நடைபெறும் தேதி, வாக்குப்பதிவு நேரம் உள்ளிட்ட விவரங்களுடன், 100% வாக்குப் பதிவுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

News March 25, 2024

1000+ பவுண்டரி விளாசிய வீரர்கள்

image

T20 கிரிக்கெட் போட்டியில் 1000 முறைக்கு மேல் பவுண்டரி விளாசிய வீரர்கள்…
*அலெக்ஸ் ஹேல்ஸ் – 1316 பவுண்டரிகள்
*டேவிட் வார்னர் – 1218 பவுண்டரிகள்
*ஜேம்ஸ் வின்ஸ் – 1164 பவுண்டரிகள்
*கிறிஸ் கெயில் – 1132 பவுண்டரிகள்
*பாபர் அசாம் – 1108 பவுண்டரிகள்
*ஆரோன் ஃபின்ச் 1095 பவுண்டரிகள்
*ஷிகர் தவான் – 1094 பவுண்டரிகள்
*விராட் கோலி – 1074 பவுண்டரிகள் *ஷோயப் மாலிக் – 1041 பவுண்டரிகள்

News March 25, 2024

நாளை முதல் விடுமுறை

image

பதினொன்றாம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வுகள் இன்றோடு முடிவடைந்திருக்கிறது. இதனையடுத்து, நாளை முதல் அவர்களுக்கான கோடை விடுமுறை தொடங்குகிறது. ஏற்கெனவே 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான விடுமுறை தொடங்கியிருக்கும் நிலையில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுகள் நாளை தொடங்கவுள்ளன. அனைத்து வகுப்பினருக்கான தேர்வுகளையும் தேர்தலுக்குள் முடிக்க பள்ளிக் கல்வித்துறை திட்டமிட்டுள்ளது.

News March 25, 2024

குடும்பத்துடன் ஹோலி கொண்டாடிய ரஜினி

image

நாடு முழுவதும் இன்று ஹோலி பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டது. திரைப் பிரபலங்களும், கிரிக்கெட் வீரர்களும் தங்கள் நண்பர்கள் மற்றும் குடும்பத்துடன் சிறப்பாக கொண்டாடி மகிழ்ந்தனர். நடிகர் ரஜினியும் தனது மகள் மற்றும் பேரக் குழந்தைகளுடன் வீட்டில் இருந்தபடியே வண்ண பொடி பூசி ஹோலி பண்டிகையை கொண்டாடினார். இதுதொடர்பான புகைப்படத்தை ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

News March 25, 2024

அதிக கேட்சுகளை பிடித்து விராட் கோலி சாதனை

image

பஞ்சாப் அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில், விராட் கோலி புதிய சாதனை படைத்துள்ளார். பஞ்சாப் வீரர் பேர்ஸ்டோவின் கேட்சை பிடித்த அவர், ஐபிஎல் மற்றும் சர்வதேச T20 போட்டிகளில் அதிக கேட்சுகளை (173*) பிடித்த இந்திய வீரர் என்ற பெருமையை பெற்றார். இதற்கு முன்னதாக அதிக கேட்சுகளை பிடித்த சுரேஷ் ரெய்னா (172), தற்போது 2ஆவது இடத்திற்கு தள்ளப்பட்டார். 167 கேட்சுகளுடன் ரோஹித் ஷர்மா 3ஆவது இடத்தில் உள்ளார்.

News March 25, 2024

IPL: பெங்களூரு அணிக்கு 177 ரன்கள் இலக்கு

image

பஞ்சாப்பிற்கு எதிரான ஐபிஎல் போட்டியில், பெங்களூரு அணிக்கு 177 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் அணி, ஒரு பக்கம் அதிரடியாக விளையாடினாலும், இன்னொரு பக்கம் விக்கெட்டுகளையும் இழந்து வந்தது. கேப்டன் ஷிகர் தவான் (45) பொறுப்புடன் விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்த, 20 ஓவர்கள் முடிவில் பஞ்சாப் அணி 176 ரன்கள் குவித்தது. சிராஜ், மேக்ஸ்வெல் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

error: Content is protected !!