India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
பிஹார் மாநிலம் பாட்னாவில் உள்ள சாஹிப் குருத்வாராவில் பிரதமர் மோடி சிறப்பு பிரார்த்தனை செய்தார். அதனைத் தொடந்து அங்கிருந்த சமையல் கூடத்தில் உணவு சமைத்த அவர், அதனை பக்தர்களுக்கும் பரிமாறினார். மக்களவைத் தேர்தலையொட்டி, அவர் நூற்றுக்கணக்கான கோயில்களில் வழிபாடு நடத்தி வருகிறார். அதன் ஒரு பகுதியாக, பிஹாருக்கு சென்ற பிரதமர், சிறப்பு வழிபாடு நடத்தினார்.
தெலங்கானா, ஆந்திரா, பீஹார் உள்ளிட்ட 10 மாநிலங்களில் 96 மக்களவைத் தொகுதிகளில் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் 11 மணி நிலவரப்படி ஆந்திராவில் 23.10%, பீஹாரில் 22.54%, ஜம்மு & காஷ்மீரில் 14.94%, ஜார்கண்டில் 27.40%, ம.பி.யில் 32.38%, மகாராஷ்டிராவில் 17.51%, ஒடிஷாவில் 23.28%, தெலங்கானாவில் 24.31%. உ.பி.யில் 27.12% மேற்கு வங்கத்தில் 32.78% வாக்குகள் பதிவாகியுள்ளது.
கவின் நடிப்பில் வெளியாகியுள்ள ‘ஸ்டார்’ படத்திற்கு கிடைத்து வரும் வரவேற்புக்கு இயக்குநர் இளன் நன்றி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள கடிதத்தில், திரையரங்குகளில் கிடைக்கும் கைத்தட்டலும், கரகோஷமும் ‘லவ் யூ’ என சொல்வதாகவே தோன்றுவதாகவும், பலரது கனவிலும் ஸ்டார் ஒளிர்வதாகவும் மகிழ்ச்சி தெரிவித்தார். படம் முடிந்தும் பலரும் எழுந்து செல்லாமல் அமர்ந்திருப்பதாகவும் அவர் நெகிழ்ந்துள்ளார்.
சிபிஎஸ்இ 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியானது. நாடு முழுவதும் சுமார் 39 லட்சம் பேர் தேர்வு எழுதியிருந்த நிலையில், 87.98% மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். இது கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் 0.65% அதிகமாகும். மாணவிகள் 91.52% பேரும், மாணவர்கள் 85.12% பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர். சென்னை மண்டலத்தைப் பொறுத்தமட்டில், 98.47% பேர் தேர்ச்சி பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தெலங்கானா, ஆந்திரா உள்ளிட்ட 10 மாநிலங்களில் 96 மக்களவைத் தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்று வரும் நிலையில், “காங்கிரஸின் கரம் என்றும் உங்களுடன் உள்ளது” என சோனியா காந்தி தெரிவித்துள்ளார். கடும் பணவீக்கத்திற்கு மத்தியில் பெண்கள் நெருக்கடியை எதிர்கொண்டுள்ளனர். அவர்களின் கடின உழைப்புக்கு நீதி கிடைக்கும் வகையில் மகாலட்சுமி திட்டத்தின் கீழ் ஆண்டுதோறும் ஒரு லட்சம் தரப்படும் எனத் தெரிவித்துள்ளார்.
ரயிலை ஓட்டுவதற்கு கார் போல ஆக்சிலரேட்டர் அழுத்த வேண்டிய அவசியமோ, ஸ்டேரிங் பிடிக்க வேண்டிய அவசியமோ இல்லை. அப்படியானால், ஆட்டோமேட்டிக்காக ரயில் ஓடும்போது ஓட்டுநர்கள் தூங்கிவிட்டால் என்ன ஆகும்? அதற்குதான் VCD (Vigilance Control Device) என்று ஒரு பட்டன் உண்டு. ஓட்டுநர்கள் 60 நொடிக்கு ஒருமுறை அந்த பட்டனை அழுத்த வேண்டும். இல்லாவிட்டால், ரயில் தானாகவே நின்றுவிடும்.
கர்நாடகாவில் ரேவண்ணாவுக்கு எதிரான பாலியல் வழக்கில் புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது. பாலியல் கொடுமைக்கு ஆளான பணிப்பெண் கடத்தப்பட்டதாக கூறப்படும் நிலையில், அவர் தான் கடத்தப்படவில்லை என்று வீடியோ வெளியிட்டுள்ளார். தன் விருப்பத்தின்பேரிலே உறவினர் வீட்டில் உள்ளதாகவும், ரேவண்ணா தனக்கு எந்த துன்புறுத்தலும் அளிக்கவில்லை என்றும், தனது மகன் ஏன் இதுபோன்ற புகாரை கொடுத்தார் என தெரியவில்லை எனவும் கூறியுள்ளார்.
சிபிஎஸ்இ 12ஆம் வகுப்புக்கான தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளது. பிப். 15 முதல் மார்ச் 13ம் தேதி வரை நடந்த இத்தேர்வை நாடு முழுவதும் 39 லட்சம் மாணவர்கள் எழுதினர். தேர்வு முடிவுகளை cbse.nic.in, cbseresults.nic.in, cbse.gov.in, results.gov.in ஆகிய இணையதளங்களில் மாணவர்கள் அறியலாம். மேலும், UMANG என்ற செயலியின் மூலமும் முடிவுகளை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
அனைவரும் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டுமென நடிகை மனிஷா கொய்ராலா அறிவுறுத்தியுள்ளார். புற்றுநோய் பாதித்தபோது தனக்கு நடந்த துயரங்களைப் பகிர்ந்து கொண்ட அவர், தனக்கு வசதியான உறவினர்கள் பலர் இருப்பதாகவும், ஆனால், புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டதும் எல்லோரும் விலகிச் சென்றதாக வேதனை தெரிவித்தார். புற்றுநோய் பாதிப்புக்கு முன்பு இருந்ததை போல, தன்னால் தற்போது பணியாற்ற முடியவில்லை என்றும், அவர் கூறினார்.
சென்னை மெட்ரோ ரயில் அதிகாரியை தாக்கிய வழக்கில் பிரபல பின்னணி பாடகர் வேல்முருகனை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர். மெட்ரோ ரயில் பணிக்காக பள்ளம் தோண்டியது தொடர்பான பிரச்னையில், மெட்ரோ ரயில் உதவி மேலாளரை மதுபோதையில் இருந்த வேல்முருகன் தாக்கியுள்ளார். இதுதொடர்பான புகாரின்பேரில், ஆபாசமாக பேசுதல், தாக்குதல் நடத்துதல் உள்ளிட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவரை போலீசார் கைது செய்தனர்.
Sorry, no posts matched your criteria.