India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
சிபிஎஸ்இ 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியானது. நாடு முழுவதும் சுமார் 39 லட்சம் பேர் தேர்வு எழுதியிருந்த நிலையில், 87.98% மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். இது கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் 0.65% அதிகமாகும். மாணவிகள் 91.52% பேரும், மாணவர்கள் 85.12% பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர். சென்னை மண்டலத்தைப் பொறுத்தமட்டில், 98.47% பேர் தேர்ச்சி பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தெலங்கானா, ஆந்திரா உள்ளிட்ட 10 மாநிலங்களில் 96 மக்களவைத் தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்று வரும் நிலையில், “காங்கிரஸின் கரம் என்றும் உங்களுடன் உள்ளது” என சோனியா காந்தி தெரிவித்துள்ளார். கடும் பணவீக்கத்திற்கு மத்தியில் பெண்கள் நெருக்கடியை எதிர்கொண்டுள்ளனர். அவர்களின் கடின உழைப்புக்கு நீதி கிடைக்கும் வகையில் மகாலட்சுமி திட்டத்தின் கீழ் ஆண்டுதோறும் ஒரு லட்சம் தரப்படும் எனத் தெரிவித்துள்ளார்.
ரயிலை ஓட்டுவதற்கு கார் போல ஆக்சிலரேட்டர் அழுத்த வேண்டிய அவசியமோ, ஸ்டேரிங் பிடிக்க வேண்டிய அவசியமோ இல்லை. அப்படியானால், ஆட்டோமேட்டிக்காக ரயில் ஓடும்போது ஓட்டுநர்கள் தூங்கிவிட்டால் என்ன ஆகும்? அதற்குதான் VCD (Vigilance Control Device) என்று ஒரு பட்டன் உண்டு. ஓட்டுநர்கள் 60 நொடிக்கு ஒருமுறை அந்த பட்டனை அழுத்த வேண்டும். இல்லாவிட்டால், ரயில் தானாகவே நின்றுவிடும்.
கர்நாடகாவில் ரேவண்ணாவுக்கு எதிரான பாலியல் வழக்கில் புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது. பாலியல் கொடுமைக்கு ஆளான பணிப்பெண் கடத்தப்பட்டதாக கூறப்படும் நிலையில், அவர் தான் கடத்தப்படவில்லை என்று வீடியோ வெளியிட்டுள்ளார். தன் விருப்பத்தின்பேரிலே உறவினர் வீட்டில் உள்ளதாகவும், ரேவண்ணா தனக்கு எந்த துன்புறுத்தலும் அளிக்கவில்லை என்றும், தனது மகன் ஏன் இதுபோன்ற புகாரை கொடுத்தார் என தெரியவில்லை எனவும் கூறியுள்ளார்.
சிபிஎஸ்இ 12ஆம் வகுப்புக்கான தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளது. பிப். 15 முதல் மார்ச் 13ம் தேதி வரை நடந்த இத்தேர்வை நாடு முழுவதும் 39 லட்சம் மாணவர்கள் எழுதினர். தேர்வு முடிவுகளை cbse.nic.in, cbseresults.nic.in, cbse.gov.in, results.gov.in ஆகிய இணையதளங்களில் மாணவர்கள் அறியலாம். மேலும், UMANG என்ற செயலியின் மூலமும் முடிவுகளை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
அனைவரும் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டுமென நடிகை மனிஷா கொய்ராலா அறிவுறுத்தியுள்ளார். புற்றுநோய் பாதித்தபோது தனக்கு நடந்த துயரங்களைப் பகிர்ந்து கொண்ட அவர், தனக்கு வசதியான உறவினர்கள் பலர் இருப்பதாகவும், ஆனால், புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டதும் எல்லோரும் விலகிச் சென்றதாக வேதனை தெரிவித்தார். புற்றுநோய் பாதிப்புக்கு முன்பு இருந்ததை போல, தன்னால் தற்போது பணியாற்ற முடியவில்லை என்றும், அவர் கூறினார்.
சென்னை மெட்ரோ ரயில் அதிகாரியை தாக்கிய வழக்கில் பிரபல பின்னணி பாடகர் வேல்முருகனை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர். மெட்ரோ ரயில் பணிக்காக பள்ளம் தோண்டியது தொடர்பான பிரச்னையில், மெட்ரோ ரயில் உதவி மேலாளரை மதுபோதையில் இருந்த வேல்முருகன் தாக்கியுள்ளார். இதுதொடர்பான புகாரின்பேரில், ஆபாசமாக பேசுதல், தாக்குதல் நடத்துதல் உள்ளிட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவரை போலீசார் கைது செய்தனர்.
தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடி மையத்தில் தனது மனைவி சுரேகா உடன் வந்த நடிகர் சிரஞ்சீவி, ஜனநாயக கடமையாற்றினார். ஜூப்ளி ஹில்ஸ் வாக்குச்சாவடியில் ஆஸ்கர் புகழ் இசையமைப்பாளர் எம்.எம்.கீரவாணி வாக்களித்தார். அதேபோல, ஆந்திராவின் மங்களகிரியில் ஜனசேனா கட்சி தலைவரும், நடிகருமான பவன் கல்யாண் தனது வாக்கை செலுத்தினார்.
ஆந்திராவில் மக்களவைத் தேர்தலுடன், சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவும் நடந்து வருகிறது. காலை வாக்குப்பதிவு தொடங்கியது முதலே பலநாடு உள்ளிட்ட பல்வேறு வாக்குச்சாவடிகளில் ஆளும் ஒய்எஸ்ஆர், தெலுங்கு தேசம் நிர்வாகிகள் இடையே மோதல் நிலவி வருகிறது. பல இடங்களில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் அடித்து உடைக்கப்பட்டுள்ளன. தேர்தலில் முறைகேடு செய்ய முனைவதாக இரு கட்சியினரும் மாறி மாறி குற்றம்சாட்டியுள்ளனர்.
சூரிய ஒளியின் கதிர்வீச்சு நம்முடைய சருமத்தை பாதிக்காமல் பாதுக்காக்க ‘சன் ஸ்கிரீன்’ பலராலும் பயன்படுத்தப்படுகிறது. இதுகுறித்து மருத்துவர்கள் கூறும்போது, வெளிர் தோல் கொண்டிருக்கும் மேலை நாட்டினருக்கே சன் ஸ்கிரீன் அவசியம் என்றும் இந்தியா போன்ற அடர் நிறத் தோலை கொண்டிருக்கும் நாட்டிற்கு சன் ஸ்கிரீன் அவசியம் இல்லை என்றும், நம்முடைய தோலில் இருக்கும் மெலனின் போதுமானது எனவும் கூறுகின்றனர்.
Sorry, no posts matched your criteria.