India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
திஹார் சிறையில் தன்னை அவமானப்படுத்த முயற்சிகள் நடந்ததாக அரவிந்த் கெஜ்ரிவால் குற்றம் சாட்டியுள்ளார். சிறையில் 2 கேமராக்கள் வைத்து தன்னை கண்காணித்ததாகவும், அந்த வீடியோவை சிறைத்துறையினர் பிரதமர் மோடிக்கு அனுப்பியதாகவும் கெஜ்ரிவால் விமர்சித்துள்ளார். பாஜக இவ்வளவு செய்தும் கட்சியினர் ஒற்றுமையாக இந்ததற்காக பாராட்டிய அவர் INDIA கூட்டணி ஆட்சிக்கு வந்ததும், சிறையில் இருந்து வெளியே வருவேன் என்றார்.
நாடு முழுவதும் 96 தொகுதிகளுக்கு இன்று நான்காம் கட்டத் தேர்தல் நடைபெற்று வருகிறது. இதில் பிஹாரில் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு பல ஆண்டுகளாக படுத்த படுக்கையாக இருக்கும் பெண் ஒருவர் ஸ்ட்ரெச்சரில் வந்து வாக்களித்தது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 4 ஆண்டுகளாக வெறும் தண்ணீரை மட்டும் குடித்து வாழ்த்து வரும் அவர், ஜனநாயகக் கடமையாற்ற வேண்டும் என்ற தனது ஆசையை மகன்களிடம் கூறி இன்று வாக்களித்துள்ளனர்.
பாகிஸ்தானுக்கு வளையல்களை தமது அரசு அனுப்பி வைக்கும் என்று மோடி தெரிவித்துள்ளார். பிஹார் பிரசாரக் கூட்டத்தில் பேசிய அவர், INDIA கூட்டணி கட்சியினர் பாகிஸ்தானை கண்டும், அந்நாட்டின் அணுஆயுதங்களை கண்டும் அஞ்சுவதாகவும், அக்கட்சிகள் கோழைகள் என்றும் கூறினார். தமது அரசு பாகிஸ்தானுக்கு வளையல்களை அணிவிக்கும், பாகிஸ்தானிடம் போதிய வளையல்கள் இல்லையெனில் தயாரித்து அனுப்பும் என்றும் அவர் தெரிவித்தார்.
நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமாரின் மர்ம மரணம் குறித்து தென்மண்டல ஐஜி கண்ணன் பேட்டியளித்தார். அப்போது ஜெயக்குமார் உடலுடன் கடப்பா கல் கட்டப்பட்டு இருந்ததாகவும், பாத்திரம் கழுவ பயன்படும் ஸ்கரப்பர் வாயில் திணிக்கப்பட்டு இருந்ததாகவும் தெரிவித்தார். ஜெயக்குமாரின் கடிதத்தில் அப்பாவு பெயர் இருப்பதாகவும், தேவைப்பட்டால் அவரிடமும் விசாரணை நடத்தப்படும் என்றும் கண்ணன் கூறினார்.
நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் மர்ம மரணம் குறித்து 32 பேரிடம் விசாரணை நடைபெறுவதாக தென்மண்டல ஐஜி கண்ணன் தெரிவித்துள்ளார். அவரது மரணம் கொலையா, தற்கொலையா எனத் தெரியாததால் குழப்பம் நிலவுகிறது. இதுகுறித்து பேசிய கண்ணன், மர்ம மரணம் என்று வழக்குப்பதிவு செய்யப்பட்டு 10 தனிப்படைகள் விசாரணை நடத்தி வருவதாகவும், டிஎன்ஏ உள்ளிட்ட அறிக்கைகள் இன்னும் வரவில்லை என்றார்.
9 மாநிலங்கள் ஒரு யூனியன் பிரதேசத்தில் நடைபெற்ற 4ஆம் கட்ட மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப் பதிவு நிறைவடைந்தது. ஆந்திரா, தெலங்கானா உள்பட 96 தொகுதிகளில் இன்று காலை 7 மணிக்கு வாக்குப் பதிவு தொடங்கியது. ஆந்திரா, ஒடிசா மாநிலங்களுக்கு மக்களவைத் தேர்தலுடன், சட்டப் பேரவைத் தேர்தலுக்கான வாக்குப் பதிவும் நடைபெற்றது. தொடர்ந்து மே 20இல் 6 மாநிலங்கள், 2 யூனியன் பிரதேசங்களில் 5ஆம் கட்ட தேர்தல் நடைபெற உள்ளது.
பரிவர்த்தனைக்காக வரும் சொத்து பத்திரங்களின் சரிபார்ப்பு நிலவரத்தை, அதை வாங்குவோர் தெரிந்துகொள்வதற்கான நடவடிக்கையை எடுக்க வேண்டும் என பதிவுத்துறை தலைவர் உத்தரவிட்டுள்ளார். மேலும், பத்திரங்களில் பிழை இருப்பதாகக் கூறி மக்களை அலைக்கழிக்கக் கூடாது எனக் குறிப்பிட்டுள்ள அவர், இந்த உத்தரவை சார்-பதிவாளர்கள் கடைப்பிடிப்பதை மாவட்ட பதிவாளர்கள், டிஐஜிக்கள் உறுதி செய்ய வேண்டும் எனக் கூறியுள்ளார்.
குஜராத்தைச் சேர்ந்த பூனம் என்ற மாணவி 10ஆம் வகுப்பு தேர்வில் 99.72% மதிப்பெண்களை பெற்று சாதனை படைத்துள்ளார். இவரது தந்தை பிரகாஷ் குஷ்வாஹா 25 ஆண்டுகளாக பானிபூரி கடை நடத்திவரும் நிலையில், பள்ளி நேரம் போக மீதி நேரத்தில் பூனம் தன் தந்தைக்கு உதவி செய்துள்ளார். ஏழ்மையிலும் சாதிக்க துடித்த அவர், தற்போது 99.72% மதிப்பெண் பெற்று பெற்றோரை பெருமையடையச் செய்துள்ளார். டாக்டராவதே தனது லட்சியம் என்கிறார் பூனம்.
மோகன் நடிப்பில் உருவாகியுள்ள ஹரா பட இசை வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. இதில் கலந்து கொண்டு பாக்யராஜ் பேசிய போது, மோகன் வேலையில் கண்ணும் கருத்துமாய் இருப்பவர், சினிமா சம்பிரதாய நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள மாட்டார் என்று தெரிவித்தார். பாடல்களே மோகனின் பலம், பாடல் காட்சியில் மோகனே பாடுவது போல இருக்கும், இந்த குணத்தை சிவாஜியிடம் மட்டுமே பார்த்துள்ளதாகவும் பாக்யராஜ் கூறினார்.
மறைந்த MP செல்வராஜ் உடலுக்கு, இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். உடல்நலக் குறைவால் சென்னை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர், சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார். 2019 மக்களவைத் தேர்தலில் நாகை தொகுதியில் போட்டியிட்டு MP-யான செல்வராஜ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நிர்வாகக் குழு உறுப்பினராகவும் செயல்பட்டு வந்தார்.
Sorry, no posts matched your criteria.