India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
ஐஏஎஸ் அதிகாரி தினேஷ்குமாரின் தந்தை மறைவுக்கு, முதல்வர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பதிவிட்டுள்ள அவர், தனது தனிச் செயலாளரின் தந்தை மறைவெய்திய செய்தியை அறிந்து வேதனை அடைந்ததாக தெரிவித்துள்ளார். மேலும், தந்தையை இழந்து தவிப்பது எந்தவொரு மகனுக்கும் ஆற்றிட முடியாத துயரம் என்றும் அவர் தனது இரங்கல் குறிப்பில் கூறியுள்ளார்.
4ஆம் கட்ட மக்களவைத் தேர்தலில் மொத்தம் 63.04% வாக்குகள் பதிவானதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. மேற்குவங்கத்தில் 76.02%, மத்திய பிரதேசத்தில் 69.16%, ஆந்திராவில் 68.20, பிஹாரில் 55.92 %, ஜம்மு-காஷ்மீரில் 36.88%, ஜார்கண்டில் 64.30%, மகாராஷ்டிராவில் 52.93%, ஒடிசாவில் 64.23%, தெலங்கானாவில் 61.59%, உத்தர பிரதேசத்தில் 58.02% வாக்குகள் பதிவானதாக தேர்தல் ஆணையம் கூறியுள்ளது.
தமிழ்நாடு தொழிலாளர் கல்வி நிலையத்தில், தொழிலாளர் மேலாண்மை படிப்பில் சேருவதற்கு மே 15ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என தொழிலாளர் கல்வி நிலைய இயக்குநரகம் தெரிவித்துள்ளது. +2 முடித்த மாணவர்கள் பட்ட, பட்ட மேற்படிப்பு, முதுநிலை படிப்புகளில் சேருவதற்கு விண்ணப்பிக்கலாம். பொதுப்பிரிவு ₹200, SC/ST மாணவர்களுக்கு ₹100 கட்டணம். மதிப்பெண், அரசு விதிகள்படி மாணவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் குழுமம், நெட்மெட்ஸ் என்ற ஆன்லைன் மருந்து விற்பனை நிறுவனத்தை தற்போது நடத்தி வருகிறது. இதையடுத்து, ₹12,52,740 கோடி புழங்கும் மருத்துவ பரிசோதனை தொழிலில் கால்பதிக்க திட்டமிட்டு இருப்பதாகவும், நாடு முழுவதும் மருத்துவ பரிசோதனை நிலையங்களை நடத்திவரும் ஏதேனும் ஒரு நிறுவன பங்குகளை ₹1000 கோடி-₹3000 கோடிக்கு வாங்க திட்டமிட்டு இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
சிபிஎஸ்இ 10 மற்றும் 12ஆம் வகுப்புக்கான பொதுத்தேர்வு முடிவுகள் நாடு முழுவதும் இன்று வெளியானது. அதில் நாட்டிலேயே அதிகபட்ச மதிப்பெண் (99.91) திருவனந்தபுரத்தில் பதிவாகியுள்ளது. விஜயவாடாவில் 99.0%, சென்னையில் 98.47% மதிப்பெண்கள் பெற்றுள்ளன. இந்நிலையில், 2024 – 2025 ஆம் ஆண்டுக்கான சிபிஎஸ்இ 10, 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் 2025 பிப்.15ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆந்திராவில் இன்று மக்களவைத் தொகுதிகளுக்கும், மாநில சட்டப்பேரவை தொகுதிகளுக்கும் தேர்தல் நடத்தப்பட்டது. இதையொட்டி தேர்தல் ஆணையத்தால் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன. நாகர்குர்னூலில் வாழும் சென்சு பழங்குடியின மக்கள் வாக்களிப்பதற்கு ஏதுவாக வாக்குச் சாவடிகளை அவர்கள் வசிப்பிடம் அருகிலேயே தேர்தல் ஆணையம் அமைத்திருந்தது. அதனால் அவர்கள், அந்த சாவடிகளிலேயே வாக்களித்தனர்.
ஐபிஎல் தொடரின் 63ஆவது லீக் போட்டியில் இன்று குஜராத் – கொல்கத்தா அணிகள் மோதுகின்றன. அகமதாபாத் மைதானத்தில் போட்டியில் நடக்க இருந்த சூழலில், அங்கு இடி, மின்னலுடன் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. இதனால், மைதானம் முழுவதும் தார்ப்பாய்கள் கொண்டு மூடப்பட்டுள்ளன. மழை தொடர்ந்து நீடித்து வருவதால் போட்டி நடக்குமா என்ற சந்தேகத்தில் ரசிகர்கள் சோகத்துடன் மைதானத்தில் காத்துக் கிடக்கின்றனர்.
டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் பங்கு மதிப்பு இன்று காலை முதலே சரிவை சந்தித்தது. வர்த்தக நேரத்தின்போது தேசிய பங்குச்சந்தையில் ஒரு பங்கின் மதிப்பு 9.44% வீழ்ச்சியடைந்து ₹948ஆக இருந்தது. மாலையில் வர்த்தக நேர முடிவில் 8.34%ஆக குறைந்தது. முடிவில் ஒரு பங்கின் விலை ₹959.80ஆக நிலை கொண்டது. இந்த வீழ்ச்சியால் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்துக்கு இன்று ஒரே நாளில் ₹29,016 கோடி இழப்பு ஏற்பட்டது.
எதிர்நீச்சல், காக்கிச் சட்டை, கொடி, பட்டாசு படங்களை இயக்கிய துரை செந்தில்குமார், கருடன் படத்தை இயக்கியுள்ளார். படத்தில் சசிகுமார், சமுத்திரகனி, வடிவுக்கரசி, சூரி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். படத்துக்கு யுவன்சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். அண்மையில் வெளியான டைட்டில் க்ளிம்ஸ், டிரைலர் வீடியோ ரசிகர்களை வெகுவாக ஈர்த்தது. இந்நிலையில், படம் வருகிற 31ஆம் தேதி ரிலீஸ் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் நெட்பிலிக்ஸ், அமேசான் பிரைம், ஹாட் ஸ்டார் உள்ளிட்ட OTT செயலிகளுக்கு நல்ல வரவேற்பு உள்ளது. இதை கவனத்தில் கொண்டும், அந்நிறுவனங்களுக்கு போட்டியளிக்கும் வகையிலும், OTT சேவையை மத்திய அரசின் பிரசார் பாரதி நிறுவனம் ஆகஸ்டில் தொடங்க இருப்பதாகவும், அதில் குடும்ப நிகழ்ச்சிகளை ஒளிபரப்ப இருப்பதாகவும், முதலில் 1 அல்லது 2 ஆண்டுகளுக்கு இலவச சேவை அளிக்க இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
Sorry, no posts matched your criteria.