India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

கொரோனா ஊரடங்கின் போது மும்பையில் தனியாக இருந்ததால் மன அழுத்தத்துக்கு ஆளானதாக நடிகர் விஜய் வர்மா கூறியுள்ளார். தனிமையை தாங்கமுடியாததால் தேம்பி தேம்பி அழுததாகவும், படுக்கையை விட்டே நகராமல் இருந்ததாகவும் மனம் திறந்துள்ளார். இதனை கவனித்த அமீர் கானின் மகள் நடிகை ஐரா கான் வீடியோ காலில் தனக்கு உறுதுணையாக இருந்தார் என்றும், அதன்பிறகு மனநல டாக்டரிடம் இதுகுறித்து ஆலோசித்ததாகவும் அவர் தெரிவித்துளார்.

NDA-வில் தவெகவை சேர்க்க வேண்டும் என்பதே EPS-ன் எண்ணமாக இருக்கிறது. கூட்டணியில் இருக்கும் தமாகா தலைவர் GK வாசனும் அதே முடிவையே அறிவித்துள்ளார். பொது எதிரியான திமுகவை வீழ்த்த வேண்டும் என்ற நோக்கில் விஜய் தங்கள் கூட்டணிக்கு வர வேண்டும் என அவர் விருப்பம் தெரிவித்துள்ளார். அப்படி நடந்தால், 2026 தேர்தலில் திமுகவின் தோல்வி உறுதி என்றும் GK வாசன் குறிப்பிட்டுள்ளார். இதுபற்றி உங்கள் கருத்து என்ன?

உலகம் முழுவதும் போர் பிரதேசங்களில் வாழும் குழந்தைகள் எண்ணிக்கை 2024-ல் 4.7 கோடியில் இருந்து அதிகரித்து சுமார் 5.2 கோடியாகிவிட்டது. இதனை ‘Save the Children’ அமைப்பு புதிய அறிக்கையில் கூறியுள்ளது. இது பெரும் கவலையை ஏற்படுத்துகிறது. அதிகம் பாதிக்கப்பட்டுள்ள நாடுகள் என்னென்ன என்று, மேலே போட்டோக்களில் கொடுத்திருக்கிறோம். அவற்றை ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. இதை SHARE பண்ணுங்க.

உச்சபட்ச அதிகார மயக்கத்தில் மனிதாபிமானம் இல்லாமல், சட்டசபையில் CM ஸ்டாலின் பேசியதாக விஜய் விமர்சித்ததற்கு, அமைச்சர் துரைமுருகன் பதிலடி கொடுத்துள்ளார். கரூரில் உயிரிழந்தவர்களின் வீட்டிற்கு செல்லாத விஜய் மனிதாபிமானம் உள்ளவர்; நாங்கள் மனிதாபிமானம் இல்லாதவர்களா என கேள்வி எழுப்பியுள்ளார்.

சுமார் 2 பில்லியன் கணக்குகள் ஹேக்கர்கள் கண்டுபிடிக்கும் அளவுக்கு ஈஸியான பாஸ்வேர்டுகளை வைத்துள்ளதாக Comparitech நிறுவனம் கண்டறிந்துள்ளது. குறிப்பாக, ‘123456’ என்ற பாஸ்வேர்டை 76 லட்சம் பேரும், ‘admin’ என 19 லட்சம் பேரும் வைத்திருப்பதாக கூறப்பட்டுள்ளது. இதேபோல அந்த லிஸ்ட்டில், ‘qwerty’, ‘password’, ‘India@123’ போன்ற பாஸ்வேர்டுகளும் இடம்பெற்றுள்ளன. இதை இன்றே மாற்றும்படி அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

PM KISAN திட்டத்தின் 21-வது தவணைத் தொகை எப்போது வரவு வைக்கப்படும் என விவசாயிகள் காத்திருக்கின்றனர். அவர்களுக்கு மகிழ்ச்சியளிக்கும் விதமாக, நவ.15-க்குள் வங்கி கணக்கில் ₹2,000 செலுத்தப்படும் என மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. சரியான நேரத்தில் பணம் கிடைக்க, <

3 ISIS தீவிரவாதிகளை ஆயுதங்களுடன் குஜராத் பயங்கரவாத தடுப்பு பிரிவு கைது செய்துள்ளது. டாக்டர் அகமது மொஹியுதீன் சையது, முகமது சுஹேல் மற்றும் ஆசாத் சுலேமான் ஷேக் ஆகிய மூவரை கிட்டதட்ட ஓராண்டாக போலீசார் கண்காணித்து வந்துள்ளனர். இந்தியாவில் சில இடங்களில் தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்த நிலையில், அகமதாபாதில் அவர்களை சுற்றிவளைத்து கைது செய்துள்ளனர். மூவரிடமும் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.

*கீர்த்தி சுரேஷ் நடித்துள்ள ‘ரிவால்வர் ரீட்டா’ படம் நவ.28-ம் தேதி வெளியாகிறது.
*முனீஸ்காந்தின் ‘மிடில் கிளாஸ்’ படத்தின் பர்ஸ்ட் சிங்கிளை படக்குழு வெளியிட்டுள்ளது.
*பிரபல யூடியூபர்களான கிஷன் தாஸ், ஹர்ஷத் கான் நடித்த ‘ஆரோமலே’ படம் 2 நாள்களில் 1.5 கோடி வசூல்
*7 ஆண்டுகளுக்கு பிறகு அனுஷ்கா சர்மாவின் புதிய படம் திரைக்கு வருகிறது. *ஐஸ்வர்யா ராஜேஷின் புதிய படம் பூஜையுடன் தொடங்கியது.

செவ்வாய் பகவான் டிச.7-ம் தேதி தனுசு ராசிக்கு பெயர்ச்சி அடைவதால் 3 ராசியினருக்கு ஜாக்பாட் அடிக்கப் போகிறதாம். *மேஷம்: தொழில், வேலையில் பலன் கிடைக்கும். நிதி நிலைமை வலுவடையும். *விருச்சிகம்: மகிழ்ச்சி, செழிப்பை அனுபவிப்பீர்கள். நிதி ஆதாயங்களை பெறலாம். பழைய கடன்கள் தீரும். *மகரம்: தொழிலில் மகத்தான வெற்றியை பெறும் வாய்ப்புகள் பிரகாசமாக உள்ளன. வேலையில் ஊதிய உயர்வு கிடைக்கலாம்.

➤ஹார்மோன் மாற்றங்கள் ➤செல்கள் இறப்பால் பிக்மண்டேஷன் ➤கருத்தடை, ஆன்டிபயாடிக் மருந்துகளை எடுப்பது ➤மன அழுத்தம், தூக்கமின்மை ➤வைட்டமின் பி12, வைட்டமின் சி, வைட்டமின் ஈ குறைபாடு ➤சருமப் பராமரிப்பு பொருள்களால் ஏற்படும் பக்கவிளைவுகள் ஆகியவற்றின் காரணமாக முகம் கருப்பாகலாம். முகம் பளபளப்பாக வெறும் கிரீம்களை பயன்படுத்தாமல், மேலே குறிப்பிட்டிருக்கும் பிரச்னைகளை சரிசெய்யுங்கள். SHARE
Sorry, no posts matched your criteria.