News August 18, 2025

மானியத்துடன் ₹1 கோடி கடன் திட்டம் நாளை தொடக்கம்

image

முன்னாள் ராணுவ வீரர்களை தொழில் முனைவோர்களாக மாற்றும் நோக்கத்துடன் ‘முதல்வரின் காக்கும் கரங்கள்’ திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் 30% மானியத்துடன் ₹1 கோடி வரை வங்கி கடன் பெற முடியும். இந்த திட்டத்தில் பயன்பெற www.exwel.tn.gov.in இணையதளத்தில் முன்னாள் ராணுவ வீரர்கள் விண்ணப்பித்து வருகின்றனர். இந்நிலையில், பயனாளிகளுக்கு கடன் வழங்கும் வகையில் திட்டத்தை நாளை CM ஸ்டாலின் தொடங்கி வைக்க உள்ளார்.

News August 18, 2025

யானையும் டிராகனும் ஒன்றிணையுமா?

image

இந்தியா வந்துள்ள சீன வெளியுறவு அமைச்சருடன் பேச்சுவார்த்தை தொடங்கியுள்ளது. இதுபற்றி பேசிய EAM ஜெய்சங்கர், இரு நாடுகளுக்கு இடையேயான வித்தியாசம், தகராறாக மாறக் கூடாது என்றார். மேலும், நாம் விரும்புவது நியாயமான, பலதுருவ உலக ஒழுங்கை தான் (பலதுருவ ஆசியா உள்பட). உலகப் பொருளாதாரத்தில் நிலைத்தன்மையை கொண்டுவர இது அவசியமாகும் என்றும், இந்த சந்திப்பு பரஸ்பரம் பலன் தரும் எனவும் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

News August 18, 2025

Chips பாக்கெட்டில் காற்று… இது தான் காரணமாம்!

image

சிப்ஸ் பாக்கெட்டில் காற்று நிரப்புவது ஏன் தெரியுமா? உடையாமல், நொறுங்காமல், சிப்ஸ் அப்படியே கஸ்டமர் கைக்கு போகவே இந்த ஏற்பாடு. பாக்கெட்டில் அதிக சிப்ஸ் இருந்தால், நொறுங்கி விடும். இதை தவிர்க்கவே நைட்ரஜன் கேஸ் நிரப்புகிறார்கள். ஏன், ஆக்சிஜன் நிரப்பலாமே என்கிறீர்களா? ஆக்சிஜன் எளிதில் வினை புரியக் கூடியது. அதனால் சிப்ஸ் நமத்துப் போகவும், கெட்டுப் போகவும் செய்யலாம். புரிகிறதா? SHARE IT.

News August 18, 2025

இதய நோயை 12 ஆண்டுகளுக்கு முன்பே கண்டறியலாம்

image

இதய நோய் வருவதற்கு 12 ஆண்டுகளுக்கு முன்பே, அதன் அறிகுறிகள் தென்பட தொடங்கும் என்று அமெரிக்கன் ஹார்ட் அசோஸியேஷன் தெரிவித்துள்ளது. 5 கிமீ வேகத்தில் நடந்தாலே சிரமப்படுதல், சின்ன வேலைகள் செய்தாலே விரைவாக சோர்வடைதல், மூச்சுத்திணறல் போன்ற அறிகுறிகளை உணர்ந்தால், அலட்சியப்படுத்த வேண்டாம். உடனே டாக்டரை அணுகவும். மேலும், வேக நடை, ஓட்டம், நீச்சல், சைக்கிள் ஓட்டுதல் பயிற்சிகளையும் மேற்கொள்ளலாம்.

News August 18, 2025

அதிமுகவின் சிக்கலுக்கு தீர்வு காண உள்ளேன்: சசிகலா

image

பலவீனமாக உள்ள அதிமுகவை பலமாக மாற்றும் பணியை மேற்கொள்ள உள்ளதாக சசிகலா தெரிவித்துள்ளார். தனது 71-வது பிறந்தநாளை முன்னிட்டு போயஸ் கார்டனில் உள்ள வீட்டில் தொண்டர்களுக்கு இனிப்பு வழங்கினார். பின்னர் பேசிய அவர், அதிமுகவில் உள்ள சிக்கலை அனுபவப்பட்டவர்களால் மட்டுமே தீர்க்க முடியும் என்றார். இதனால், மீண்டும் அதிமுகவை கைப்பற்ற சசிகலா முனைப்பு காட்டுவதாக பலரும் கருத்து கூறி வருகின்றனர். உங்கள் கருத்து என்ன?

News August 18, 2025

வசூல் தாண்டவமாடும் ‘நரசிம்மர்’ படம்..!

image

இந்திய சினிமாவில் குடும்பங்களை மகிழ்விக்கும் சாமி படங்கள் அவ்வப்போது வெளியாகி வெற்றி பெறுவதுண்டு. அவை மொழிகளைக் கடந்து பல்வேறு மாநிலங்களிலும் கொண்டாடப்படும். காந்தாரா, மாளிகைபுரம் வரிசையில் தற்போது மகாவதார் நரசிம்மா படமும் மாநிலங்களைக் கடந்து கொண்டாடப்பட்டு வருகிறது. வெறும் ₹15 கோடி பட்ஜெட்டில் உருவான இந்த படம் இப்போது ₹260 கோடி வசூலை கடந்துள்ளது.

News August 18, 2025

பாக்கெட்டில் போன் வைப்பவரா? எச்சரிக்கை!

image

நீண்டநேரம் பாக்கெட்டில் மொபைல் வைத்திருப்பது, மடி மீது வைத்து லேப்டாப் பயன்படுத்துவது ஆகியவற்றால் குழந்தையின்மை மற்றும் ஆண்மைக்குறைவு ஏற்படும் ஆபத்து அதிகரிக்கிறது. கொல்கத்தா பல்கலை., IRM நிறுவனங்கள் இணைந்து, 1200 ஆண்களிடம் 5 yrs நடத்திய ஆய்வில் இது உறுதியாகியுள்ளது. இந்த சாதனங்களில் இருந்து வெளியாகும் மின்காந்த கதிர்வீச்சும் வெப்பமும் விந்தணு உருவாக்க செல்களை பாதிப்பதால் இந்நிலை ஏற்படுகிறது.

News August 18, 2025

வீட்டிலிருந்தே இலவச மருத்துவ ஆலோசனை பெற வேண்டுமா?

image

சாமானிய மக்கள் இருக்கும் இடத்திலிருந்தே இலவசமாக மருத்துவ ஆலோசனை பெறும் வசதி இந்தியாவில் உள்ளது ▶இதற்கு e-Sanjeevani செயலியைப் பதிவிறக்கவும். ▶செயலிக்குள் Patient Registration-ஐ கிளிக் செய்து, உங்கள் மொபைல் எண்ணுக்கு வரும் OTP-ஐ உள்ளிடுங்கள் ▶பிறகு பெயர், பிறந்த தேதி & முகவரியை வழங்கினால் SMS மூலம் Patient ID கிடைக்கும் ▶LogIn செய்து, வீடியோ காலில் மருத்துவர் இணையும் வரை காத்திருங்கள்.

News August 18, 2025

கேஜிஃஎப் நாயகனுடன் கைகோர்க்கும் இளம் நாயகி..!

image

தென்னிந்திய சினிமாவின் லேட்டஸ்ட் சென்சேஷன் நடிகை ருக்மணி வசந்த். VJS-ன் ஏஸ் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான இவர் SK-வுடன் மதராஸி, ரிஷப்பின் காந்தாரா, ஜூனியர் NTR-ன் புதிய படம் என பல படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில், யஷ்ஷின் டாக்ஸிக் படத்திலும் இவர் இணைந்திருக்கிறார். தென்னிந்திய அளவில் அடுத்த தலைமுறை நடிகைகளில் இவர்தான் டாப் என்கிறார்கள்.

News August 18, 2025

பள்ளி மாணவர்கள் நெரிசல் இல்லாமல் பஸ்ஸில் போகலாம்!

image

மாணவர்கள் அரசு பஸ்களில் நெரிசலின்றி பள்ளிக்கு செல்லும் திட்டத்தை சென்னையில் DCM உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார். முதல்கட்டமாக, 25 பள்ளிகளில் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. அதன்படி, காலையில் பள்ளி மாணவர்களை மட்டும் ஏற்றிவிட்டு பள்ளி வளாகத்திற்குச் செல்லும் மாநகர பஸ்கள், மாலையில் அதே வழித்தடத்தில் சென்று அவர்கள் பகுதியில் இறக்கிவிடும். தமிழ்நாடு முழுவதும் இந்த திட்டம் செயல்பாட்டுக்கு வருமா?

error: Content is protected !!