India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
மே – 14 | வைகாசி- 1
▶கிழமை: செவ்வாய்
▶நல்ல நேரம்: 07:30AM – 08:30AM, 4:30PM – 5:30PM
▶கெளரி நேரம்: 10:30 AM – 11:30 AM, 07:30 PM – 08:30 PM
▶ராகு காலம்: 03:00 PM – 04:30 PM
▶எமகண்டம்: 09:00 AM – 10:30 AM
▶குளிகை: 12:00 PM – 01:30 PM
▶சூலம்: வடக்கு
▶பரிகாரம்: பால்
▶ திதி : சூன்ய
உணவை பொறுமையாக, நிதானமாக வாயில் அசைபோட்டு சாப்பிட வேண்டும். ஏனென்றால், வேகமாக சாப்பிடுவதால் ஏற்படும் ஆபத்துக்களில் முக்கியமான ஒன்று எடை அதிகரிப்பு . விரைவாக சாப்பிடுவது பசியை கட்டுப்படுத்த உதவும். இதனால் குடல் ஹார்மோன்கள் சீர்குலைத்து உடலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும். மேலும், வேகமாக சாப்பிடுகிறவர்களுக்கு இன்சுலின் பாதிப்பு ஏற்பட்டு, சர்க்கரை நோய் தாக்கம் ஏற்பட வாய்ப்புக்கள் அதிகம்.
சூர்யகுமார் யாதவை கொல்கத்தா அணியிலிருந்து தவற விட்டதற்கு வருந்துவதாக கவுதம் கம்பீர் தெரிவித்துள்ளார். கொல்கத்தா கேப்டனாக 7 வருடம் இருந்த போது, சூர்யகுமார் யாதவை சரியாக பயன்படுத்தவில்லையே என்று வருத்துவதாக கூறிய அவர், அதற்கு மற்ற பேட்ஸ்மேன்களின் வருகை முக்கிய காரணமாக இருந்ததாக தெரிவித்தார். வீரர்களின் திறமையை கண்டறிந்து, உலகிற்கு காண்பிப்பதே ஒரு கேப்டனின் முக்கிய பொறுப்பு என்றும் அவர் கூறினார்.
சன் தொலைக்காட்சி குழுமம் ரசிகர்களின் பொழுதுபோக்கிற்காக பல்வேறு சேனல்களைத் தொடங்கியுள்ளது. இதன் அடுத்தக் கட்டமாக ஹாலிவுட் படங்களுக்கென்றே பிரத்யேகமாக ‘சன் ஹாலிவுட்’ என்ற சேனலைத் தொடங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஹாலிவுட் படங்கள் அந்தந்த பிராந்திய மொழிகளிலும் டப் செய்து வெளியிட்டு வருகிறார்கள். அப்படி தமிழில் டப் செய்து வெளியான படங்களை 24 மணி நேரமும் ஒளிபரப்பு செய்ய இருக்கிறது சன் ஹாலிவுட்.
➤இந்த உலகில் தலைவிதி என்று எதுவும் கிடையாது, எல்லாம் நீயாக தேடி கொண்டதுதான்.
➤இந்த உலகத்தை கெடுப்பது கெட்டவர்கள் அல்ல, கைகட்டி வேடிக்கை பார்க்கும் நல்லவர்கள்தான். ➤எல்லாம் தெரியும் என்று குழப்பத்தோடு இருக்காதே, எதுவும் தெரியாது என்று தெளிவோடு இரு.
➤எல்லோருக்கும் சொர்க்கத்திற்கு செல்ல ஆசை, ஆனால் யாருக்கும் சாகத்தான் விருப்பமில்லை.
*ஆவி பிடிப்பதால் சரும துளைகள் திறந்து, அடைபட்டிருக்கும் எண்ணெய் மற்றும் அழுக்கு வெளியேறும். இதனால் முகப்பருக்கள் குறையும்.
* சருமத்தில் இரத்த ஓட்டத்தை அதிகரிக்கும், இது முகப்பருக்களை குணப்படுத்த உதவுகிறது.
* ஆவி பிடிப்பதால் இறந்த சரும செல்கள் நீங்கி, புதிய சரும செல்கள் வளர்ச்சிக்கு உதவுகிறது.
* இதனால் சருமம் மென்மையாகவும், பொலிவுடனும் காணப்படும். மேலும், சைனஸ் பிரச்னைகள் குறைய வாய்ப்புள்ளது.
வைகாசி மாத சிறப்பு பூஜைக்காக சபரிமலை அய்யப்பன் கோயிலில் மே 14ஆம் தேதி மாலை 5 மணிக்கு நடை திறக்கப்படுகிறது. அதன்பின் மே 15 – 19 வரை தினமும் அதிகாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெறும். பின்னர் மே 19ஆம் தேதி அரிவராசனம் இசைக்கப்பட்டு இரவு 10:30 மணிக்கு நடை சாத்தப்படும். பக்தர்கள் வழக்கம் போல ஆன்லைனில் முன்பதிவு செய்து தரிசனத்திற்கு வரலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
➤1264 – இங்கிலாந்தின் மூன்றாம் ஹன்றி மன்னர் பிரான்சில் கைது செய்யப்பட்டார்.
➤ 1796 – பெரியம்மை நோய்க்கான தடுப்பூசியை எட்வர்ட் ஜென்னர் கண்டறிந்தார்.
➤1900 – கோடைக் கால ஒலிம்பிக் விளையாட்டுக்கள் பாரிசில் ஆரம்பமாயின.
➤1939 – பெருவைச் சேர்ந்த 5 வயது நிரம்பிய லீனா மெதினா உலகின் முதலாவது வயதில் குறைந்த தாயாக அறிவிக்கப்பட்டார்.
➤ 2012 – நேபாளத்தில் அக்னி ஏர் வானூர்தி வீழ்ந்ததில் 15 பேர் உயிரிழந்தனர்.
டி 20 உலகக் கோப்பைத் தொடர்களில் பங்கு பெறும் அணிகள் பிரத்யேக ஜெர்ஸியில் களமிறங்குவது வழக்கம். அந்த வகையில், இந்திய அணியின் டி20 உலகக்கோப்பை தொடருக்கான ஜெர்ஸி மற்றும் வீரர்களுக்கான உபகரண உடைகளை பிசிசிஐ இன்று அறிமுகம் செய்தது. இந்த அறிமுக விழாவில் ரோஹித் ஷர்மா மற்றும் பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா கலந்து கொண்டனர். இந்திய அணி ஜூன் 5இல் தனது முதல் போட்டியில் அயர்லாந்தை எதிர்த்து விளையாட உள்ளது.
◾பால்: பொருட்பால்
◾அதிகாரம்: கேள்வி
◾குறள்: 420
செவியிற் சுவையுணரா வாயுணர்வின் மாக்கள்
அவியினும் வாழினும் என்.
◾விளக்கம்: செவிச்சுவை உணராமல் வாயின் சுவைக்காக மட்டுமே வாழும் மக்கள் உயிரோடு இருப்பதும் ஒன்றுதான் இல்லாமற் போவதும் ஒன்றுதான்.
Sorry, no posts matched your criteria.