India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
சிறுமியுடன் விருப்பத்துடன் உறவு வைத்துக் கொண்டாலும் அது குற்றம்தான் என்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இந்த வழக்கில் சிக்கிய வாலிபர் சதீஷ் குமாருக்கு (25) 10 ஆண்டுகள் சிறைத் தண்டனையை நீதிமன்றம் உறுதி செய்தது. 15 வயது சிறுமியும், சதீஷ்குமாரும் காதலித்து வந்ததாகவும் விருப்பத்தின் பேரிலேயே உறவு வைத்துக் கொண்டதாகவும் வழக்கறிஞர் வாதாடினார். ஆனால், அதனை நீதிமன்றம் நிராகரித்துவிட்டது.
இந்தியாவில் இருந்து ஹஜ் யாத்திரை செல்வோருக்கு மத்திய, மாநில அரசுகள் பல்வேறு வசதிகளைச் செய்து வருகின்றன. இந்தாண்டு சுமார் 1.75 லட்சம் பேர் ஹஜ் பயணம் மேற்கொள்ளவுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. இந்நிலையில், ஹஜ் பயணம் செல்பவர்களுக்கு மருத்து முகாம் மற்றும் தடுப்பூசி முகாமை நடத்த மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. அதன்படி, தமிழ்நாட்டில் இன்று முதல் சிறப்பு முகாம்கள் நடைபெறவுள்ளன.
நேற்று மதியம் நடந்த போட்டியில் RR அணியை வீழ்த்தி CSK ப்ளே ஆஃப்-க்கு தகுதிபெறும் வாய்ப்பை தக்கவைத்தது. நடப்பு ஐபிஎல் தொடரில் ஆரம்பத்தில் இருந்து அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் RR, நேற்றையை போட்டியில் மிக மோசமாக விளையாடியது. இதனால், இப்போட்டி முழுக்க முழுக்க Fixing செய்யப்பட்டதாக சமூக வலைதளங்களில் விமர்சிக்கும் நெட்டிசன்கள், #Fixing என்ற ஹேஷ்டேக்கை ட்ரெண்டிங் செய்து வருகின்றனர்.
ஆந்திராவில் மக்களவைத் தேர்தல் மற்றும் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. முக்கிய அரசியல் பிரபலங்கள், திரை பிரபலங்கள் மற்றும் பொதுமக்கள் ஆர்வமாக வாக்களித்து வருகின்றனர். அந்த வகையில், முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி, எதிர்க்கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு, நடிகர்கள் ஜுனியர் என்டிஆர், அல்லு அர்ஜுன் உள்ளிட்டோர் தங்களது ஜனநாயக கடமையாற்றினர்.
தமிழ் சினிமாவுலகில் அரசியல் ரீதியான இரண்டு அணிகள் உருவாகி வருகின்றன. பா.ரஞ்சித், மாரி செல்வராஜ், வெற்றி மாறன் போன்ற தலித் அரசியல் பேசும் இயக்குநர்கள் ஒருபுறம். பேரரசு, நடிகர் ரஞ்சித், மோகன். ஜி, RB. உதயகுமார், கனல் கண்ணன், பிரவீன் காந்தி என அவர்களுக்கு எதிரான அரசியல் பேசுபவர்கள் ஒருபுறம் என இரு அணியாக பிரிந்து நிற்கின்றனர். இதுகுறித்து உங்களது கருத்து என்ன?
நாகை எம்பி செல்வராஜ் மறைவு செய்தி கேட்டு மிகுந்த வேதனை அடைந்ததாக முதல்வர் ஸ்டாலின் உருக்கமாக இரங்கல் தெரிவித்துள்ளார். அரை நூற்றாண்டு காலம் பொதுவுடமை இயக்கத்தில் தன்னை முழுமையாக ஒப்படைத்து, டெல்டா மாவட்ட ரயில்வே திட்டங்களுக்காகவும், வேளாண் மக்கள் உரிமைக்காகவும் பல போராட்டங்களை நடத்தியவர். என் மீது தனிப்பட்ட முறையில் பாசம் வைத்த அவரின் இழப்பு தமிழ் சமூகத்திற்கு பெரும் இழப்பு என தெரிவித்துள்ளார்.
ஆந்திராவில் மக்களவைத் தேர்தலோடு, சட்டமன்றத்திற்கும் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. இந்நிலையில், அங்கு புங்கனூர் தொகுதியில் தெலுங்கு தேசம் கட்சியைச் சேர்ந்த வாக்குச்சாவடி முகவர்கள் 15 பேர் கடத்தப்பட்டதாக அக்கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு புகார் தெரிவித்துள்ளார். ஆளும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி பிரமுகரின் ஆதரவாளர்களே கடத்தியுள்ளதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
நாகை எம்.பி செல்வராஜ் மறைவுக்கு சிபிஎம் மாநிலச் செயலாளர் முத்தரசன் இரங்கல் தெரிவித்துள்ளார். உடல்நலக்குறைவால் தொடர் சிகிச்சை பெற்று வந்த நிலையிலும், கட்சி பொறுப்புகளையும், மக்கள் பிரதிநிதி என்ற முறையில் தொகுதிப் பிரச்னைகளிலும் ஓயாது செயல்பட்டு முன்னுதாரணமாக திகழ்ந்து வந்ததாக நினைவுகூர்ந்துள்ளார். அத்துடன், அவரை இழந்து தவிக்கும் அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல்களையும் அவர் தெரிவித்துள்ளார்.
*ஒரு ஸ்பூன் வெந்தயத்துடன் ஒரு கிளாஸ் தண்ணீர் ஊற்றி, சுமார் 5 நிமிடங்கள் கொதிக்க விட்டு குடித்து வந்தால், நுரையீரலில் உள்ள சளி கரைந்து வெளியேறும். *தினமும் மூச்சுப்பயிற்சி செய்வதன் மூலம் நுரையீரல் சளி கரைந்து வெளியேற வாய்ப்பு உள்ளது. *சளி வெளியேற கொதிக்கும் நீரில் ஆவி பிடிக்கலாம். *கொதிக்கும் நீரில் உப்பு கலந்து, வெதுவெதுப்பாக இருக்கும்போது வாயில் ஊற்றி கொப்பளிக்க நுரையீரலில் உள்ள சளி குறையும்.
நடப்பு ஐபிஎல் தொடரில் தொடர்ச்சியாக 5 போட்டிகளில் வெற்றி பெற்ற முதல் அணி என்ற பெருமையை RCB பெற்றுள்ளது. DCக்கு எதிரான நேற்றைய போட்டியில் RCB 47 ரன்கள் வித்தியாசத்தில் வென்று, ப்ளே-ஆஃப் சுற்றுக்கு செல்வதற்கான வாய்ப்பையும் தக்கவைத்துள்ளது. புள்ளிப்பட்டியலில் 5வது இடத்திற்கு முன்னேறிய RCB, இதுவரை 13 போட்டிகளில் விளையாடியுள்ளது. அதில், 6 போட்டிகளில் வெற்றியும், 7 போட்டிகளில் தோல்வியும் அடைந்துள்ளது.
Sorry, no posts matched your criteria.