India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. அக்னி நட்சத்திரம் தொடங்கியதிலிருந்து வெயில் வாட்டி வதைக்கும் சூழலில், சில மாவட்டங்களில் அவ்வப்போது மழை பெய்து வருகிறது. அந்த வகையில் கோவை, திருவாரூர், நீலகிரி, திண்டுக்கல், சேலம், குமரி உள்பட பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இதனால், வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவியதாக மக்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.
‘பாகுபலி – கிரவுன் ஆஃப் பிளட்ஸ்’ என்ற அனிமேட்டட் வெப் தொடர் வருகிற மே 17ஆம் தேதி டிஸ்னி + ஹாட்ஸ்டார் OTT தளத்தில் வெளியாக உள்ளது. அதன் புரொமோஷன் நிகழ்வில் கலந்துகொண்ட இயக்குநர் ராஜமெளலியிடம், “பாகுபலி 3ஆம் பாகம் எப்போது வெளியாகும்?” என்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், “பிரபாஸுடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. விரைவில் அறிவிப்பு வெளியாகும்” என பதிலளித்துள்ளார்.
ராஜஸ்தானுக்கு எதிரான போட்டிக்கு பிறகு ரசிகர்கள் அனைவரும் மைதானத்திலேயே இருக்குமாறு CSK நிர்வாகம் கேட்டுக் கொண்டுள்ளது. அது என்னவாக இருக்கும் என்று ரசிகர்கள் குழம்பி இருந்த நிலையில், போட்டி முடிந்த பிறகு CSK வீரர்கள் ஆட்டோகிராப் போட்ட நினைவுப் பரிசு, ஜெர்சி, பந்து போன்றவற்றை ரசிகர்கள் அனைவருக்கும் வழங்க CSK நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. இதனால் CSK ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.
தமிழகத்தில் திமுக அரசு 3 ஆண்டுகால ஆட்சியை நிறைவு செய்தது தொடர்பாக பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், தமிழகத்தில் நடப்பது சொல்லாட்சி இல்லை, செயலாட்சி எனக் கூறியிருந்தார். அதை விமர்சித்துள்ள ஓபிஎஸ், 3 ஆண்டுகால திமுக ஆட்சி பொய்மையின் மொத்த உருவமாக காட்சி அளிக்கிறது என்றும், விரைவில் மக்களின் விருப்பத்திற்கிணங்க பொய்யாட்சி தூக்கி எறியப்பட்டு செயலாட்சி ஏற்படுத்தப்படும் என்றும் கூறியுள்ளார்.
சாலை போக்குவரத்து நெருக்கடிக்கு தீர்வளிக்கும் வகையில், உலகின் முதல் பறக்கும் எலக்ட்ரிக் டாக்சியை புதிய கண்டுபிடிப்புகளுக்கு முன்னோடியாக திகழ்கின்ற சென்னை ஐ.ஐ.டி., வடிவமைத்து வருகிறது. மணிக்கு 200 கி.மீ., வேகத்தில் செல்லும் இந்த டாக்சி தரையிறங்கவும், பறக்கவும் 15 அடி நீளமும், அகலமும் கொண்ட இடம் போதுமானது. 2 பேர் அமர்ந்து பயணிக்கக்கூடிய வகையில் இந்த டாக்சி வடிவமைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
வீதிகளில் திரியும் விலங்குகளுக்கு வெயில் காலங்களில் தண்ணீர் அளிக்கும் திட்டம் உள்ளதா என அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. விலங்கு நல ஆர்வலர் ஒருவர் தொடுத்த மனுவில், வெயில் காலங்களில் விலங்குகளுக்கு, கால்நடைத்துறை மூலம் தண்ணீர், உணவளிக்க உத்தரவிடக் கூறியிருந்தார். இதை விசாரித்த நீதிபதிகள், அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு, வழக்கை 6 வாரத்திற்கு ஒத்திவைத்தனர்.
RR-க்கு எதிரான ஐபிஎல் போட்டியில், CSK அணிக்கு 142 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தொடக்கம் முதலே நிதானமாக விளையாடி வந்த RR அணி, ரன் குவிக்க திணறி வந்தது. இதனால் ஜெய்ஸ்வால், பட்லர், சஞ்சு சாம்சன் ஆகியோர் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். பொறுப்புடன் விளையாடிய ரியான் பராக், 47 ரன்கள் குவித்து அணியின் ஸ்கோரை உயர்த்தினார். சென்னை அணி சார்பில், சிமர்ஜீத் சிங் 3 விக்கெட்களை கைப்பற்றினார்.
இந்தாண்டின் பிற்பாதியில் கமலின் 3 படங்கள் அடுத்தடுத்து வெளியாகவுள்ளன. நாக் அஷ்வின் இயக்கும் ‘கல்கி 2898 ஏ.டி’ ஜூன் 27ஆம் தேதியும், ஷங்கர் இயக்கும் ‘இந்தியன் 2’ ஜூலை மாதமும், மணிரத்னம் இயக்கும் ‘தக் லைஃப்’ ஆண்டு இறுதிக்குள் வெளியாகவுள்ளன. 35 ஆண்டுகளுக்குப் பிறகு கமலின் 3 படங்கள் 6 மாதங்களுக்குள்ளாகவே வெளியாக உள்ளது. 1989இல் சாணக்கியன், வெற்றி விழா, இந்திரன் சந்திரன் ஆகிய 3 படங்கள் வெளியானது.
PSLV ராக்கெட்டில் பயன்படுத்த புதிய பி.எஸ்-4 திரவ என்ஜின் சோதனை வெற்றிபெற்றதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது. அதன் அறிக்கையில், ‘அடிட்டிவ் மேனுபேக்சரிங்’ தொழில்நுட்பம் மூலம் உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட பி.எஸ்-4 திரவ என்ஜினில் 4 வகையான சோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. மகேந்திரகிரியில் உள்ள இஸ்ரோவின் புரோபல்சன் மையத்தில் 665 வினாடிகள் நடந்த அனைத்து சோதனைகளும் வெற்றிபெற்றதாகக் கூறப்பட்டுள்ளது.
தமிழகத்தில் முத்திரைக் கட்டணங்கள் உயர்த்தப்பட்டுள்ளதால் மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். ஒப்பந்த ஆவணங்கள், பவர் பத்திரம் வழங்குதல் உள்ளிட்ட 26 சேவைகளுக்கான முத்திரைக் கட்டணம் 10% முதல் 33% வரை, விலை உயர்த்தப்பட்டுள்ளது. ஏற்கெனவே சொத்து வரி, குடிநீர் வரி போன்றவற்றின் கட்டணங்கள் உயர்ந்துள்ள சூழலில், முத்திரைக் கட்டண உயர்வு மேலும் சுமையை உண்டாக்கும் என மக்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.
Sorry, no posts matched your criteria.