India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
* வேகத் தடை அருகிலுள்ள மின்கம்பங்களை உடனடியாக அகற்ற தமிழ்நாடு மின்சார வாரியம் ஆணையிட்டுள்ளது.
* கடந்த 50 ஆண்டுகளில் இந்தியாவில் இந்துக்களின் எண்ணிக்கை 7.82% சரிந்துள்ளது.
* மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்துக்கு மத்திய அரசு பத்ம பூஷன் விருது அளித்தது.
* சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 8 பேர் உயிரிழந்தனர்.
சேலம் அருகே உள்ள தாரமங்கலத்தில் அமைந்திருக்கும் இந்த முருகர் சிலைதான் சமூக வலைதளத்தின் இன்றைய ஹாட் டாக். அழகை பெயரிலேயே கொண்ட முருகனை அவலட்சனமாக சித்தரிப்பதாக சிலர் வேதனை தெரிவிக்கின்றனர். அதேநேரம், முருகன் இப்படிதான் இருக்க வேண்டும் என்பதை யார் தீர்மானிப்பது என்று சிலர் கேள்வி எழுப்புகின்றனர். இந்த விவகாரம் தொடர்பான உங்களது கருத்தை கமெண்ட்டில் சொல்லுங்க.
தரம்சாலா மைதானத்தில் நடைபெற்ற பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் பெங்களூரு அணி 60 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்றுள்ளது. இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த RCB 7 விக்கெட்டுகளை இழந்து 241 ரன்கள் எடுத்தது. பின்னர் 242 ரன்கள் இலக்கை துரத்தி ஆடிய PBKS 18 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 181 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியடைந்தது. இதன் மூலம் RCB ப்ளே ஆப் வாய்ப்பைத் தக்க வைத்துள்ளது.
தெற்கு காசாவில் உள்ள ரபா பகுதியை இஸ்ரேல் கைப்பற்றினால், இனி அமெரிக்கா ஆயுத உதவிகளை வழங்காது என்று அந்நாட்டு அதிபர் ஜோ பைடன் கூறியிருந்தார். இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள ஐ.நா சபைக்கான இஸ்ரேலின் தூதர் கிலாட் எர்டன், “அமெரிக்காவின் இந்த முடிவு தீவிரவாத ஹமாஸ் இயக்கத்திற்கு எதிராக போராடும் இஸ்ரேலுக்கு மிகுந்த ஏமாற்றத்தையும், கவலையையும் அளிக்கிறது” என வேதனையுடன் கூறியுள்ளார்.
எலுமிச்சையின் நிறம் அதன் வகையைப் பொறுத்து மாறுபடும், பழுத்த எலுமிச்சை பொதுவாக பிரகாசமான மஞ்சள் தோலைக் கொண்டிருக்கும். எலுமிச்சை மிகவும் கடினமாக உணர்ந்தாலோ அல்லது அதிகப்படியாக உலர்ந்து காணப்பட்டாலோ அவற்றை தேர்ந்தெடுக்க வேண்டாம். சுருக்கம் அல்லது மென்மையான புள்ளிகள் கொண்ட எலுமிச்சையை தவிர்க்கவும், ஏனெனில் அவற்றில் அதிக சாறு இருக்காது. முடிந்தவரை ஆர்கானிக் எலுமிச்சையைத் தேர்ந்தெடுப்பது நல்லது.
இந்திய அணிக்கு தலைமைப் பயிற்சியாளராக பணியாற்றும் வாய்ப்புக்காக காத்திருப்பதாக ஆஸி. முன்னாள் கிரிக்கெட் வீரர் ஷேன் வாட்சன் தெரிவித்துள்ளார். நேர்காணல் ஒன்றில் பேசிய அவர், “பாகிஸ்தான் சூப்பர் லீக்கில் பயிற்சியாளராக பணியாற்றி இருக்கிறேன். எனக்கு பயிற்சியாளர் பணி பிடிக்கும். உலகின் சிறந்த வீரர்களுடன் இணைந்து பணியாற்ற விரும்புகிறேன். அதற்கு இந்திய அணி மிகவும் பொருத்தமானது” எனக் கூறியுள்ளார்.
*மேஷம் – திட்டமிட்ட அணுகுமுறை தேவை *ரிஷபம் – சாதகமான பலன்*மிதுனம் – முக்கிய முடிவுகளை தவிர்க்கவும்*கடகம் – அமைதியான நாள் *சிம்மம் – சாதகமான நாள்*கன்னி – வெற்றி நிச்சயம் *துலாம் – எச்சரிக்கை தேவை *விருச்சிகம் – வெற்றிக்கு அடிகோலும் நாள் *தனுசு – எதிர்பாராத நிகழ்வுகள் நடக்கும் *மகரம் -எதிர்மறை எண்ணங்களை தவிர்த்தல் நலம் *கும்பம் -அமைதியாக இருப்பது நல்லது*மீனம் – சாதகமான நாள்
டி20 உலக்கோப்பையில் பங்கேற்கும் இலங்கை அணி அறிவிக்கப்பட்டுள்ளது. காயத்திலிருந்து மீண்டுள்ள ஹசரங்கா மீண்டும் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். குசல் மெண்டிஸ், பதும் நிஷங்கா, ஏஞ்சலோ மேத்யூஸ், தனஞ்செயா டி சில்வா, மதீஷா பதிரானா உள்ளிட்ட முக்கிய வீரர்கள் அணியில் இடம் பெற்றுள்ளார்கள். அனுபவ வீரர் ஏஞ்சலோ மேத்யூஸ் 6ஆவது முறையாக டி20 உலக்கோப்பையில் பங்கேற்க உள்ளது குறிப்பிடத்தக்கது.
டி20 உலகக்கோப்பையில் சஞ்சு சாம்சன் மிக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவார் என இலங்கை முன்னாள் வீரர் குமார் சங்ககாரா தெரிவித்துள்ளார். கிரிக்கெட்டை பொறுத்த வரையில் மிக சரியான திட்டமிடலுடன் சஞ்சு சாம்சன் இருப்பதாக தெரிவித்த அவர், இந்திய அணியில் முக்கிய இடத்தை விரைவாக பிடிப்பார் என்று நம்பிக்கை தெரிவித்தார். நடப்பு ஐபிஎல் தொடரில் 11 ஆட்டங்களில் விளையாடி 471 ரன்களை அவர் எடுத்துள்ளார்.
தமிழகத்தில் இன்று இரவு மழை பெய்யவிருக்கும் மாவட்டங்களின் பட்டியலை சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது. அதன்படி, சேலம், ஈரோடு, விருதுநகர், தேனி, மதுரை, திண்டுக்கல், கோயம்புத்தூர் ஆகிய மாவட்டங்களின் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான மஞ்சள் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.