India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
திண்டுக்கல் எம்.பி தொகுதியில் சிபிஎம் வேட்பாளர் அபார வெற்றி பெறுவார் என அமைச்சர் ஐ.பெரியசாமி கூறியுள்ளார். எல்லாருக்கும் எல்லாம் என்ற அடிப்படையில் சிபிஎம்-க்கு திண்டுக்கல் தொகுதி ஒதுக்கியதாக கூறிய அவர், நாளைக்கு தேர்தல் வைத்தாலும் வெற்றியை பெற்றுத் தருவோம் என்று சூளுரைத்தார். முன்னதாக 2019 தேர்தலில் திண்டுக்கல் தொகுதியில் திமுக பல லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வென்றது குறிப்பிடத்தக்கது.
வெள்ளிக்கிழமை துர்க்கை அம்மனை வழிபட்டால், பெண்களுக்கு மாங்கல்ய பாக்கியம் அதிகரிக்கும். வெள்ளிக்கிழமையன்று, ராகு கால நேரமான காலை 10.30 மணி முதல் நண்பகல் 12 மணி வரையிலான நேரத்தில் கோயிலுக்கு சென்று துர்க்கை அம்மன் முன்பு நல்லெண்ணெய், நெய்யில் பஞ்சு திரி போட்டு தீபம் ஏற்றி வழிபட வேண்டும். இதுபோல வழிபட்டு வந்தால், பெண்களுக்கு மாங்கல்ய பாக்கியம் அதிகரிக்கும். தீராத துன்பங்களும் விலகும்.
மக்களவைத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் இணைய தேமுதிக சம்மதம் தெரிவித்துள்ள நிலையில், அக்கட்சிக்கு 4 தொகுதிகள் ஒதுக்கப்படும் என தெரியவந்துள்ளது. அதிமுக – தேமுதிக இடையே 2 கட்டமாக அதிகாரப்பூர்வ பேச்சுவார்த்தை நடந்த நிலையில், நேற்றிரவு நடந்த ரகசிய பேச்சுவார்த்தையில் சுமூக உடன்பாடு எட்டப்பட்டதாகவும், மாநிலங்களவை பதவி குறித்து தேர்தலுக்கு பின்பு நல்ல முடிவு எடுப்பதாக அதிமுக உறுதியளித்ததாகவும் தெரிகிறது.
பிரபல காமெடி நடிகர் சேஷூ மாரடைப்பு காரணமாக நேற்று முன்தினம் சென்னையில் உள்ள காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவர் விரைவில் குணமடைய வேண்டி சினிமா பிரபலங்கள் பலரும் பிரார்த்தித்து வருகின்றனர். இந்நிலையில், டிக்கிலோனா பட இயக்குனர் கார்த்திக் பாபு, சேஷூவின் சிகிச்சைக்கு ரசிகர்களிடம் பண உதவி கேட்டு உருக்கமாக டிவீட் செய்துள்ளார். சினிமா பிரபலங்களும், ரசிகர்களும் பண உதவி அளித்து வருகின்றனர்.
தேர்தலில் காங்கிரஸ், திமுக கட்சிகள் துடைத்து எறியப்படும் என பிரதமர் மோடி விமர்சித்திருந்தார். இதற்கு பதிலளித்துள்ள சிபிஐ மாநில செயலாளர் முத்தரசன், காங்கிரஸ் கூட்டணியை துடைத்து எறிய பிரதமருக்கு துடைப்பம் தேவை. ஆனால், அந்த துடைப்பமே (ஆம் ஆத்மி சின்னம்) எங்கள் கூட்டணியில் தான் இருக்கிறது என கூறியுள்ளார். I.N.D.I.A கூட்டணியில் காங்., திமுக, ஆம் ஆத்மி ஆகிய கட்சிகள் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
காங்கிரஸ் இல்லையெனில், நாடு இல்லை என்று உத்தவ் தாக்கரே ஆதரவு சிவசேனா பிரிவு எம்பியான சஞ்சய் ராவத் தெரிவித்துள்ளார். மும்பையில் அவர் அளித்துள்ள பேட்டியில், “காங்கிரஸ் இல்லையெனில், நாட்டுக்கு சுதந்திரம் கிடைத்திருக்காது. அறிவியல், தொழில்நுட்ப வளர்ச்சி ஏற்பட்டிருக்காது. இதுபோல பலவற்றை பாஜக கவனத்தில் கொள்ளவில்லை. ஏனெனில் பாஜக, தொழிலதிபர்கள் குறித்து மட்டும் சிந்திக்கிறது” என்றார்.
நாடாளுமன்றத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட உடன், நடத்தை விதிகள் நேற்று முதலே அமலுக்கு வந்துள்ளது. இந்நிலையில், தேர்தல் நடத்தை விதி மீறல் புகாரில் தமிழகத்தில் முதல் வழக்கு பதியப்பட்டுள்ளது. சிவகங்கையில் தேர்தல் விதிமுறையை மீறி, ஊர்வலம் சென்று சிலைகளுக்கு மாலை அணிவித்தது உள்ளிட்ட புகாரின் அடிப்படையில் நாம் தமிழர் கட்சியினர் மீது வழக்குப்பதிவு செய்து தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்துள்ளது.
தேர்தல் பத்திர மோசடி தொடர்பாக பாஜக கையும் களவுமாக பிடிபட்டுள்ளதாக முதல்வர் ஸ்டாலின் விமர்சித்துள்ளார். அழுத்தம் கொடுத்து பாஜக தேர்தல் பத்திர நிதி பெற்றதை ஆய்வு செய்ய வேண்டும் என்று கூறிய அவர், கட்சிக்கு பெற்ற நிதியை திமுக எப்போதும் தணிக்கைக்கு உட்படுத்தும் எனவும் தெரிவித்தார். மேலும், பாஜக அரசு நிறுவனங்களை பயமுறுத்தி அமலாக்கத்துறை மூலம் பல நூறு கோடி ரூபாய் பணம் பெற்றுள்ளதாகவும் அவர் சாடியுள்ளார்.
கணுக்கால் காயம் காரணமாக 2023 உலகக் கோப்பையில் இருந்து விலகியது குறித்து ஹர்திக் பாண்டியா முக்கிய தகவல்களைத் தெரிவித்துள்ளார். “நான் 5 நாட்களுக்குப் பிறகு வருவேன் என்று நிர்வாகத்திடம் சொன்னேன். ஆனால், கணுக்காலில் 3 இடங்களில் ரத்தம் எடுக்கப்பட்டதால், என்னால் நடக்க முடியாமல் போனது. 10 நாட்களுக்கு வலி நிவாரணிகளை எடுத்துக்கொண்டேன். முழுமையாக குணமடைய 3 மாதங்கள் ஆனது” எனக் கூறியுள்ளார்.
இபிஎஸ் முன்னிலையில் தமிழ்த்தேசிய ஆதரவாளர் என்று தன்னை காட்டிக் கொண்டு நாம் தமிழருக்கு ஆதரவாக செயல்பட்ட நாச்சியாள் சுகந்தி அதிமுகவில் தன்னை இணைந்துக் கொண்டார். அவரைத் தொடர்ந்து அமமுகவில் இருந்து விலகிய பலரும் அதிமுகவில் ஐக்கியமாகியுள்ளனர். நாச்சியாள் சுகந்தி-க்கு மகளிர் அணியில் முக்கியப் பொறுப்பு வழங்கப்படும் என்றும் நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இவர் பெயர் இடம்பெறும் எனவும் கூறப்படுகிறது.
Sorry, no posts matched your criteria.