News March 31, 2024

ஒரே சின்னத்தில் ஓபிஎஸ், மன்சூர் அலிகான் போட்டி

image

ராமநாதபுரம் தொகுதியில் பாஜக ஆதரவுடன் சுயேச்சை வேட்பாளராக போட்டியிடும் ஓ.பன்னீர்செல்வத்துக்கு, பலாப்பழம் சின்னம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதே போல், வேலூர் தொகுதியில் இந்திய ஜனநாயக புலிகள் கட்சி சார்பாக சுயேச்சையாக போட்டியிடும் மன்சூர் அலிகானுக்கும் பலாப்பழம் சின்னம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதனால் வரும் மக்களவைத் தேர்தலில் இருவரும் ஒரே சின்னத்தில் போட்டியிடுகின்றனர்.

News March 31, 2024

பாஜகவை கண்டு திமுகவும், அதிமுகவும் அஞ்சுகின்றன

image

பாஜகவை கண்டு திமுகவும், அதிமுகவும் அஞ்சுவதாக பாஜக நிர்வாகியும், நடிகையுமான குஷ்பு விமர்சித்துள்ளார். அவர் அளித்துள்ள பேட்டியில், “தேர்தலில் பாஜக யாரையும் போட்டியாக பார்க்கவில்லை. ஆனால், பாஜகவை திமுகவும், அதிமுகவும் போட்டியாக பார்க்கின்றன. தமிழ்நாட்டில் பாஜக இல்லவே இல்லை என கூறிய திமுகவும், அதிமுகவும் இன்று பாஜகவை கண்டு அஞ்சுகின்றன. அந்த அளவுக்கு பாஜக வளர்ந்துள்ளது” என்றார்.

News March 31, 2024

முதல் பந்திலேயே பதற்றம் தனிந்தது

image

PBKSக்கு எதிரான போட்டியில் LSG பந்துவீச்சாளர் மயங்க் 155 கிமீ வேகத்தில் பந்துவீசி அணியின் வெற்றிக்கு முக்கிய பங்கு வகித்தார். இதுபற்றி அவர், முதல் பந்திலேயே தனது பதற்றம் தனிந்ததாகவும், தனக்கு இப்படி ஒர் அறிமுகம் கிடைக்கும் என்று நினைக்கவில்லை எனக் கூறினார். மேலும், கேரியரில் முதல் விக்கெட் எப்போதுமே சிறப்பானது என்றும், மெதுவாக பந்துகளை வீச நினைத்தபோதும் தன்னால் முடியவில்லை எனவும் அவர் கூறினார்.

News March 31, 2024

அஞ்சலி செலுத்தினார் முதல்வர்

image

மறைந்த ஈரோடு எம்.பி கணேசமூர்த்தியின் வீட்டிற்கு நேரில் சென்ற முதல்வர் ஸ்டாலின், அவரது உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். அத்துடன், அவரது குடும்பத்தினருக்கும் ஆறுதல் தெரிவித்தார். 2024 தேர்தலில் மீண்டும் சீட் தராததால் அதிருப்தியில் இருந்த கணேசமூர்த்தி தற்கொலைக்கு முயன்றார். இதில் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வந்த அவர், மார்ச் 28ஆம் தேதி மாரடைப்பால் உயிரிழந்தார்.

News March 31, 2024

அண்ணாமலை மீது வழக்குப்பதிவு

image

திருச்சியில் தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறியதாக அண்ணாமலை மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. நேற்று இரவு 10 மணிக்கு மேல் அமமுக வேட்பாளர் செந்தில் நாதனை ஆதரித்து பிரசாரம் செய்ததாக புகார் அளிக்கப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில், செந்தில் நாதன், அமமுக அமைப்பு செயலாளர் சாருபாலா தொண்டைமான், அண்ணாமலை உள்பட 700 பேர் மீது 4 பிரிவுகளின் கீழ் திருச்சி தில்லைநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

News March 31, 2024

பாஜகவினர் ஒருவர் மீதாவது வழக்கு நடக்கிறதா?

image

பாஜகவின் சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் 2027 பேர் மீது எந்த வழக்கும் இல்லை. யாரும் சிறையில் இல்லை என காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் குற்றம் சாட்டியுள்ளார். காங்கிரஸ், திமுக உள்ளிட்ட எதிர்கட்சித் தலைவர்கள், உறுப்பினர்கள் மீது வழக்கு நடப்பதாக அவர் சாடினார். பாஜக உறுப்பினர்கள் ஒருவர் மீதாவது வழக்கு நடக்கிறதா? என்றும் பாஜகவில் இருப்பவர்கள் அனைவரும் உத்தமர்களா? எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.

News March 31, 2024

தவெக தலைவர் விஜய் ஈஸ்டர் பண்டிகை வாழ்த்து

image

தவெக தலைவரும், நடிகருமான விஜய் ஈஸ்டர் பண்டிகையையொட்டி வாழ்த்து தெரிவித்துள்ளார். உலகம் முழுவதும் இன்று ஈஸ்டர் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இதையொட்டி விஜய் தனது சமூகவலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “உலக மக்கள் அனைவரிடமும் அமைதி நிலவ, அன்பு, சகோதரத்துவம், ஒற்றுமை, தியாகம் தழைத்தோங்க புனிதமான இந்நன்னாளில் அனைவருக்கும் எனது ஈஸ்டர் பெருவிழா வாழ்த்துகள்” எனத் தெரிவித்துள்ளார்.

News March 31, 2024

முதல்முறையாக அரசியலில் நுழைந்த டிடிவி மனைவி

image

டிடிவி தினகரன் தேனி மக்களவைத் தொகுதியில் போட்டியிடுகிறார். இதுவரை அரசியலில் ஈடுபடாத அவரது மனைவி, முதல்முறையாக கணவருக்கு ஆதரவாக தேர்தல் பரப்புரை செய்து வருகிறார். போடி அருகே உள்ள கிராமங்களில் டிடிவிக்காக அவரது மனைவி அனுராதா வீடுவீடாக சென்று மக்களிடம் வாக்கு சேகரித்தார். அவருக்கு ஆரத்தி எடுத்து பெண்கள் வரவேற்பு அளித்தனர். அனுராதா வரும் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட வாய்ப்புள்ளது என கூறப்படுகிறது.

News March 31, 2024

ஐஎஸ் பயங்கரவாத அமைப்பு திடீர் மிரட்டல்

image

ஐஎஸ் அமைப்பு திடீர் மிரட்டல் விடுத்திருப்பதால், நாடு முழுவதும் உளவுத்துறை கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளது. கடந்த 2014இல் ரமலானின்போது ஐஎஸ் உருவாக்கப்பட்டது. இந்தாண்டுடன் 10 ஆண்டு ஆவதையொட்டி, அதன் செய்தித் தொடர்பாளர் வெளியிட்டுள்ள ஆடியோவில், “உலகெங்கிலும் ஐஎஸ் அமைப்பினர் தனிநபர் தீவிரவாத தாக்குதலை நடத்துங்கள்” என வலியுறுத்தியுள்ளார். இதனால் நாடு முழுவதும் கண்காணிப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

News March 31, 2024

‘ரஜினி 171’ படம் குறித்து லோகேஷ் புதிய அப்டேட்

image

ரஜினி நடிக்கவுள்ள 171வது படம் குறித்து அந்தப் படத்தை இயக்கவுள்ள லோகேஷ் கனகராஜ் புதிய அப்டேட் கொடுத்துள்ளார். வேட்டையன் படத்துக்கு பிறகு, லோகேஷ் இயக்கும் படத்தில் ரஜினி நடிக்கவுள்ளார். அந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் அண்மையில் வெளியானது. இதுகுறித்து பேசிய லோகேஷ், தனது படத்தில் இருக்கும் ரஜினியை இதற்கு முன்பு பார்த்திருக்க மாட்டீர்கள் என கூறியுள்ளார்.

error: Content is protected !!