India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டவர்கள் மீண்டும் கட்சியில் சேர்க்கப்பட வாய்ப்பே இல்லை என EPS திட்டவட்டமாக தெரிவித்துவிட்டார். ஆனால், நீக்கப்பட்டவர்கள் மன்னிப்பு கேட்டு வந்தால், அவர்களுக்காக தலைமையிடம் பேச தயார் என Ex அமைச்சர் OS மணியன் கூறியுள்ளார். கட்சி ஒன்றுபட வேண்டும் என்ற எண்ணம் அதிமுக நிர்வாகிகளிடம் உள்ளதை அவரது பேச்சு உணர்த்துவதாக அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.

பார்க்க சாதாரணமாக தெரியும் இந்த போட்டோ, உங்களின் இதயத்தை ஒரு கணம் நொறுக்கலாம். மறைந்த நடிகர் அபிநய், தனது அம்மாவுடன் இருக்கும் போட்டோ இது. SM-ல் வைரலாகிவரும் இந்த போட்டோதான், அபிநய்யின் வாட்ஸ்ஆப் DP. மேலும், சில நாள்களுக்கு முன் “SLOWLY BUT SURELY” என ஸ்டேட்டஸ் வைத்திருந்துள்ளார். மறைந்த தாயிடம் செல்லப்போவதையே அவர் இப்படி பதிவிட்டிருக்கிறார் என பலரும் வேதனையை பகிர்ந்து வருகின்றனர். RIP

குறைவான உடல் உழைப்பு, மன அழுத்தம், நீர்ச்சத்து குறைபாடு, உணவுப் பழக்கம் ஆகியவை மலச்சிக்கலுக்கான முக்கிய காரணங்கள். இது பெரியவர்களைவிட குழந்தைகளை அதிகமாக பாதிப்பதாக ஆய்வுகள் குறிப்பிடுகின்றன. சில பானங்களை அருந்துவதன் மூலம் மலச்சிக்கலில் இருந்து தப்பிக்கலாம். மேலே கொடுக்கப்பட்டுள்ள அந்த பானங்களின் லிஸ்ட்டை ஒவ்வொன்றாக SWIPE செய்து பாருங்கள்.

டெல்லி செங்கோட்டை அருகே காரில் ஏற்பட்ட வெடி விபத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 2 நாள்களில் பயங்கரவாத அமைப்புகளை சேர்ந்த 7 பேர் கைது செய்யப்பட்டனர். விசாரணையில் கிடைத்த தகவலின் அடிப்படையில் ஹரியானாவின் ஃபரிதாபாத்தில் இன்று 2 இடங்களில் 2900 கிலோ வெடி பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இந்நிலையில் செங்கோட்டையில் நடத்த கார் வெடி விபத்து தீவிரவாத சதிச்செயலா என்ற கேள்வி எழுந்துள்ளது.

அதிமுக, பாஜக கூட்டணியில் விஜய்யை சேர்க்க EPS திட்டமிட்டு வருகிறார். இந்நிலையில், திமுக – தவெக இடையே தான் போட்டி என விஜய் பேசியது குறித்த கேள்விக்கு அவர் பதிலளித்தார். அதில், கட்சியினரை உற்சாகப்படுத்த எல்லா தலைவர்களும் இப்படித்தான் பேசுவார்கள் எனக் குறிப்பிட்டுள்ளார். இதனால், அதிமுக தரப்பில் கூட்டணி பேச்சு நடப்பதை அவர் மறைமுகமாக உறுதி செய்திருப்பதாக அரசியல் நோக்கர்கள் தெரிவிக்கின்றனர்.

வடக்கு பசுபிக் பெருங்கடலில் 6.1 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக NCS தெரிவித்துள்ளது. இது பூமியின் மேற்பரப்பில் இருந்து வெறும் 10 கி.மீ., ஆழத்தில் தான் ஏற்பட்டுள்ளது. பூமிக்கு அடியில் ஏற்படும் ஆழமான நிலநடுக்கத்தை விட, மேற்பரப்பில் ஏற்படும் ஆழமற்ற நிலநடுக்கங்கள் ஆபத்தானது. ஏனெனில், அவை பூமியின் மேற்பரப்பில் வலுவான அதிர்வை ஏற்படுத்தி, அதிக சேதத்தை உண்டாக்கும் என NCS தெரிவித்துள்ளது.

மென்மையான, இளஞ்சிவப்பு உதடுகளை பெற நிறைய ஈஸியான வழிமுறைகள் உள்ளன. ➤போதுமான அளவு தண்ணீர் குடியுங்கள் ➤Lip Balm பயன்படுத்துங்கள் ➤உதடுகளை கடிப்பதை தவிர்க்க வேண்டும் ➤புகைப்பழக்கம் இருந்தால் அதனை கைவிடுங்கள் ➤தேன் & சர்க்கரையை கலந்து உதட்டில் தடவிப்பாருங்கள். அனைவருக்கும் யூஸ் ஆகட்டுமே. SHARE THIS

கடந்த ஆட்சியில் திருப்பதி லட்டுகளில் விலங்கு கொழுப்பு கலப்படம் செய்யப்பட்டதாக ஆந்திரா CM குற்றம்சாட்டியிருந்தார். இதையடுத்து SIT அமைக்கப்பட்டு தீவிர விசாரணை நடைபெற்றது. இதில் லட்டில் நெய்க்கு பதில், அதிகமாக பாமாயில் கலந்திருந்தது ஆய்வில் உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து இதை சப்ளை செய்த Bholebaba Dairy நிறுவனத்தின் இயக்குநர் அஜய்குமார் என்பவர் கைது செய்யப்பட்டார்.

சமீபமாக அதிகரித்து வரும் நோய்களில் ஒன்றான கேன்சர், உணவு, வாழ்க்கை முறை சார்ந்த நோய் என்கின்றனர் கேன்சர் நிபுணர்கள். முக்கியமாக குடலில் உள்ள நுண்ணுயிரிகளின் சமநிலை மாறுவது கேன்சர் அபாயத்தை அதிகரிக்குமாம். சுமார் 13 வகையான கேன்சர்களுக்கு முக்கிய காரணம் உடல் பருமன் என கூறும் டாக்டர்கள், இரவில் சரியாக தூங்கவில்லை என்றால் மெலடோனின் அளவு குறைந்து கேன்சர் வரும் என எச்சரிக்கின்றனர்.

<<18250638>>தங்கத்தை <<>>போன்று வெள்ளி விலையும் இன்று ஜெட் வேகத்தில் உயர்ந்துள்ளது. 3 நாள்களாக மாற்றமின்றி காணப்பட்ட வெள்ளி நிலவரம், தற்போது கிலோவுக்கு ₹4,000 அதிகரித்துள்ளது. சென்னையில் 1 கிராம் வெள்ளி ₹169-க்கும் 1 கிலோ வெள்ளி ₹1.69 லட்சத்திற்கும் விற்பனையாகி வருகிறது. கடந்த மாதம் 1 கிலோ ₹2.07 லட்சம் வரை விற்பனையான வெள்ளி, இந்த மாதம் சரிவை சந்தித்து வந்தது. இந்நிலையில், இன்று பெரியளவில் விலை அதிகரித்துள்ளது.
Sorry, no posts matched your criteria.