India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தமிழகத்தில் 13 மாவட்டங்களில் நாளை வெயில் கொளுத்தும். அதே வேளையில், சில இடங்களில் கோடை மழை பெய்யக் கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, வேலூர், திருப்பத்தூர், கள்ளக்குறிச்சி, தருமபுரி, கிருஷ்ணகிரி, சேலம், நாமக்கல், ஈரோடு, கரூர், திருச்சி, கோவை மாவட்டங்களில் பல இடங்களில் வெயில் சுட்டெரிக்கும். ஒருசில இடங்களில் மழை பெய்யும் எனக் கூறப்பட்டுள்ளது.
இந்தியாவின் முன்னணி கார் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான மஹிந்திரா, XUV700 MX புதிய வேரியண்ட் மாடல் காரை அறிமுகம் செய்துள்ளது. இதன் எக்ஸ் சோரூம் விலை ₹15 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது XUV700 AX3 வேரியண்ட் கார் விலையுடன் ஒப்பிடுகையில் ₹3 லட்சம் குறைவாகும். XUV700 MX மாடலில் இதுவரை 5 சீட்டர் காரையே மஹிந்திரா விற்பனை செய்து வந்தது. ஆனால், தற்போது 7 சீட்டர்களாக அதை மாற்றியமைத்துள்ளது.
தங்கள் பிள்ளைகளை செல்லமாக வளர்க்கும் அனைத்து பெற்றோரும் செய்யும் மிக முக்கியமான தவறு குழந்தைகள் கேட்கும் அனைத்தையும் வாங்கித் தருவது.
இதன் காரணமாக குழந்தைகளுக்கு அத்தியாவசியமான பொருட்களுக்கும், ஆசையில் வாங்கும் பொருட்களுக்கும் வித்தியாசம் தெரியாமல் போக வாய்ப்பு உண்டு. எனவே, அவர்களுக்கு ஒரு குறிக்கோளை கொடுத்து, அந்த குறிக்கோளை அடையும் பட்சத்தில் அவர்கள் விரும்பியதை அளிப்பதாக கூறுவது நல்லது.
விபத்தில் சிக்கி சுய நினைவை இழந்த நடிகை அருந்ததி நாயருக்கு ICU-வில் சிகிச்சை அளிக்கப்படுவதாக அவரது சகோதரி கூறியுள்ளார். கடந்த மார்ச் மாதம் விபத்தில் சிக்கிய அருந்ததியின் உடல்நிலையில், தற்போது வரை முன்னேற்றம் ஏற்படவில்லை என வருத்தம் தெரிவித்த அவரது சகோதரி, அனைவரது பிரார்த்தனையும், ஆதரவும் தொடர்ந்து தேவை என வேண்டுகோள் விடுத்துள்ளார். முடிந்தால், நிதியுதவி செய்யுமாறும் அவர் கோரிக்கை வைத்துள்ளார்.
இந்தியா முழுவதும் வரும் ஆகஸ்ட் மாதம் 4ஜி சேவையை பிஎஸ்என்எல் தொடங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆரம்பகட்டமாக பஞ்சாப் உள்ளிட்ட சில மாநிலங்களில் மட்டும் 4ஜி சேவையை அளித்து வருகிறது. முழு வீச்சில் இன்னும் 4ஜி சேவையை தொடங்கவில்லை. இதனால், பிஎஸ்என்எல் எப்போது முழுவீச்சில் 4ஜி சேவையை தொடங்குமென எதிர்பார்ப்பு நிலவி வந்த நிலையில், ஆகஸ்ட் மாதத்தில் தொடங்க உள்ளதாக மூத்த அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.
ஐபிஎல் தொடரின் 55ஆவது லீக் போட்டியில் மும்பை அணிக்கு 174 ரன்களை இலக்காக நிர்ணயித்தது ஹைதராபாத் அணி. டாஸ் வென்ற மும்பை அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து களமிறங்கிய ஹைதராபாத் அணி, ஆரம்பம் முதலே நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. ஹெட் (48), பேட் கம்மின்ஸ் (35), நிதிஷ் ரெட்டி (20) ரன்கள் எடுத்தனர். மும்பை தரப்பில் பியூஸ் சாவ்லா மற்றும் பாண்டியா தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
12ஆம் வகுப்பு வரை அரசுப் பள்ளியில் படித்த மாணவர்கள், உயர்க்கல்வி படிக்க ஏதுவாக தமிழ்ப் புதல்வன் திட்டத்தின் கீழ், தமிழக அரசு மாதந்தோறும் ₹1000 வழங்கி வருகிறது. இந்த நிலையில், +2 தேர்வில் தேர்ச்சிப் பெற்று உயர்கல்வி சேர விரும்பும் மாணவர்கள் இந்தத் திட்டத்தில் விண்ணப்பித்து பயன்பெறலாம். கல்லூரிகளில் சேர்ந்தப் பிறகு மாணவர்கள் அதற்கான ஆவணங்களை சமர்ப்பித்து மாதம் ₹1000 உதவித் தொகை பெறலாம்.
மக்களவைக்கு நாளை 3ஆவது கட்டத் தேர்தல் நடைபெறுவதால், இறுதிக்கட்ட ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெறுகிறது. மக்களவைக்கு 7 கட்டங்களாக தேர்தல் நடத்தப்படுகிறது. 3ஆவது கட்டமாக அசாம், பிஹார், சத்தீஸ்கர், கோவா, குஜராத், கர்நாடகா, மத்திய பிரதேசம், உத்தர பிரதேசம், மகாராஷ்டிரா, உள்ளிட்ட மாநிலங்களில் உள்ள 94 தொகுதிகளுக்கு நாளை வாக்குப்பதிவு நடைபெறுகிறது. அமித் ஷா உள்ளிட்ட வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.
ராமநாதபுரம் எம்.பி நவாஸ் கனி, யூடியூபர் சாட்டை துரைமுருகனுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார். தன் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில், வீடியோ வெளியிட்டுள்ளதால், ₹5 கோடி நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என அந்த நோட்டீஸில் தெரிவித்துள்ளார். ராமநாதபுரம் தொகுதியில் வெற்றி பெற, நவாஸ் கனி பணப்பட்டுவாடா செய்ததாக வாக்குப்பதிவுக்கு சில நாள்களுக்கு முன்பு, துரைமுருகன் வீடியோ வெளியிட்டிருந்தார்.
மும்பைக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் ஹைதராபாத் அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது. வான்கடே மைதானத்தில் டாஸ் வென்ற MI அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனால், முதலில் களமிறங்கிய SRH, ஆரம்பம் முதலே விக்கெட்டுகளை பறிகொடுத்தது. குறிப்பாக, 90 ரன்களுக்கு 3 விக்கெட் இருந்த நிலையில், அடுத்த 46 ரன்களில் 5 விக்கெட்டுகளை இழந்தது. SRH அணி தற்போது வரை 17 ஓவர்களில் 136/8 ரன்கள் எடுத்துள்ளது.
Sorry, no posts matched your criteria.