India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
சிவகாசி அருகே பட்டாசு குடோனில் ஏற்பட்ட வெடி விபத்தில் 4 பேர் படுகாயமடைந்தனர். செங்கமலப்பட்டியில் உள்ள தனியார் பட்டாசு ஆலையில் விபத்து நிகழ்ந்த நிலையில், மேலும் சிலர் குடோனுக்குள் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது. சில நாட்களுக்குமுன் விருதுநகர் கல்குவாரியில் ஏற்பட்ட வெடி விபத்தில் 3 பேர் உயிரிழந்த நிலையில், மீண்டும் ஒரு சம்பவம் அரங்கேறியது மக்களை அச்சமடையச் செய்துள்ளது.
கோடை வெயிலை சமாளிக்க முடியாமல் பலரும் திண்டாடுகிறோம். வெயிலின் தாக்கத்தை குறைக்க முடியாவிட்டாலும், அதிலிருந்து தப்பிக்க சில வழிமுறைகளை கடைபிடிக்கலாம். இலகுவான மற்றும் காற்று வெளியேறக்கூடிய ஆடைகள் அணிந்து கொள்வது வெயிலின் தாக்கத்தை குறைக்க உதவும். அடிக்கடி தண்ணீர் அருந்துவது, குளிர்ச்சியான உணவுகளை உண்பது உடலுக்கு நல்லது. வெயில் தீவிரமாக இருக்கும் நேரங்களில் பயணங்களை தவிர்க்கலாம்.
ஒடிசாவில் ஆட்சி என்ற பாஜகவின் பகல் கனவு பலிக்காது என அம்மாநில முதல்வர் நவீன் பட்நாயக் தெரிவித்துள்ளார். ஒடிசாவில் பரப்புரையில் பேசிய மோடி, ஜூன் 4இல் நவீன் பட்நாயக் வீட்டுக்கு செல்வார் என்றும், அன்றே பாஜக முதல்வர் அறிவிக்கப்படுவார் எனவும் தெரிவித்திருந்தார். இந்நிலையில், தேர்தல் முடிவுக்கு பிறகு, ஜூன் 9ஆம் தேதி 11.30 மணிக்கு நவீன் பட்நாயக் முதல்வராக பொறுப்பேற்பார் என அக்கட்சி அறிவித்துள்ளது.
தமிழகம் முழுவதும் 104 சிவில் நீதிபதிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். சென்னை சிறு வழக்குகளுக்கான பதிவாளர் சோபாதேவி, திருவள்ளூர் மாவட்ட கூடுதல் முனிசிப்பாகவும், சைதாப்பேட்டை மெட்ரோ பாலிட்டன் மாஜிஸ்திரேட் லாவண்யா, செங்கல்பட்டு மாஜிஸ்திரேட்டாகவும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். சென்னையில் மட்டும் 7 பேர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதற்கான அறிவிப்பை உயர்நீதிமன்ற தலைமை பதிவாளர் வெளியிட்டுள்ளார்.
சித்திரம் பேசுதடி, வெயில் உள்ளிட்ட தமிழ் படங்களிலும், ஏராளமான மலையாள படங்களிலும் நடித்துள்ள பாவனா, வன்கொடுமை சம்பவத்தை அடுத்து, திரைத்துறையில் இருந்து ஒதுங்கியிருந்து மீண்டும் நடிக்க வந்துள்ளார். இதுகுறித்த கேள்விக்கு பதிலளித்த பாவனா, தன்னை மோசமாக சித்தரித்து வதந்தி பரப்பப்பட்டதாக கண் கலங்கினார். கசப்பான சம்பங்களால் ஏற்பட்ட பாதிப்பில் இருந்து மீள சினிமாவை விட்டு விலகி இருந்ததாக அவர் கூறினார்.
₹5,000 கோடி கடன் கேட்டு, வங்கிகளுடன் கவுதம் அதானி குழும நிறுவனம் பேச்சு நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதானி குழுமத்தின் டோடல் நிறுவன கிளையான தர்மா எல்என்ஜி டெர்மினல் லிமிடெட், 3 முதல் 5 ஆண்டு வரையிலான காலத்துக்கு கடன் கேட்டு, கிரெடிட் அக்ரகோல், டிபிஎஸ், பிஎன்பி பாரிபாஸ் உள்ளிட்டவற்றுடன் பேச்சுவார்த்தை நடத்துவதாகவும், இன்னும் 2 மாதங்களில் கடன் அளிக்கப்படலாம் என அத்தகவல் கூறுகிறது.
தோல்விகள் தான் மிகப்பெரிய பாடத்தை கற்றுக் கொடுக்கும் என்று மும்பை கேப்டன் பாண்டியா தெரிவித்துள்ளார். தொடர் தோல்விகள் குறித்து பேசிய அவர், தோல்விகளில் கிடைக்கும் அனுபவத்தை யாராலும் உங்களுக்கு கற்பிக்க முடியாது என்றும், தோனி போன்ற ரோல் மாடலாலும் கூட கற்றுத்தர முடியாது என்றும் அவர் கூறியுள்ளார். மேலும், தோல்விகளால் தான் உங்களுடைய வேலை என்ன? என்பதை தெரிந்து கொள்ள முடியும் என கருத்துத் தெரிவித்தார்.
நீட் வினாத்தாள் கசிவால், 23 லட்சம் மாணவர்களின் எதிர்கால கனவு சிதைக்கப்பட்டுள்ளதாக ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். மாணவர்களின் வாழ்க்கையோடு விளையாடியுள்ள மோடி அரசை மக்கள் மன்னிக்க மாட்டார்கள் எனவும் அவர் விமர்சித்துள்ளார். ராஜஸ்தான் மாநிலம் பரத்பூரில் நீட் தேர்வில் ஆள் மாறாட்டம் செய்த புகாரில் 5 பேர் கைது செய்யப்பட்டனர். ஆனால், வினாத்தாள் வெளியான தகவலை தேசிய தேர்வு முகமை மறுத்துள்ளது.
மக்களுக்கு தடையின்றி மின்சாரம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசின் தலைமைச் செயலாளர் ஷிவ்தாஸ் மீனா தெரிவித்துள்ளார். சென்னையில் இரவு நேரங்களில் மின்தடை ஏற்பட்டால் உடனடியாக சரிசெய்ய 60 பறக்கும் படை குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாகக் கூறிய அவர், கோடை காலத்தில் மின்சாரப் பயன்பாடு அதிகரித்துள்ளதால் சீரான மின்சாரம் வழங்க மின்சார வாரியம் ஏற்பாடு செய்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
திமுக ஆட்சிக்கு வரும்போதெல்லாம் மின்வெட்டு நடைபெறுவது எழுதப்படாத விதியாகி விட்டதாக அதிமுக பொதுச் செயலாளர் இபிஎஸ் குற்றம்சாட்டியுள்ளார். மின்வெட்டுக்கு கண்டனம் தெரிவித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகம் முழுவதும் நிலவும் அறிவிக்கப்படாத மின்வெட்டால், மக்கள் கடும் அவதிக்கு ஆளாகி வருவதாகவும், விவசாயப் பணிகளும், குடிநீர் வழங்கலும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் விமர்சித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.