India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

ரஜினி, கமல் இணைந்து நடிக்கும் வகையில் மூன்றே நாள்களில் கதை ஒன்றை எழுதியதாக மிஷ்கின் தெரிவித்துள்ளார். அது ஒரு வரலாற்று கதை என்றும், இது குறித்து தயாரிப்பாளர் தாணுவிடம் கூறி ஓகே வாங்கியதாகவும் மிஷ்கின் பேசியுள்ளார். ஆனால், ஏனோ அக்கதையை ரஜினி, கமலிடம் சொல்லாமல் டிராப் செய்ததாக அவர் கூறியுள்ளார். அந்த கதையில் விஜய் சேதுபதிக்கு முக்கிய கதாபாத்திரம் இருந்ததாகவும், மிஷ்கின் குறிப்பிட்டுள்ளார்.

ஐபிஎல் 2026 சீசனுக்காக தக்கவைத்த வீரர்களின் விவரத்தை வரும் 15-ம் தேதிக்குள் சமர்ப்பிக்க அணி நிர்வாகங்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. அன்றைய நாளிலேயே டிரேடிங் செய்யப்பட்ட வீரர்களின் விவரமும் வெளியாகவுள்ளது. விடுவிக்கப்படும் வீரர்களின் தொகை, அணிகளின் ஏலத் தொகையுடன் சேர்க்கப்படும். அதை தொடர்ந்து டிசம்பரில் வீரர்கள் ஏலம் நடைபெறவுள்ளதாக கூறப்படுகிறது. CSK யாரை தக்கவைக்கனும்னு நீங்க நினைக்கிறீங்க?

2026 தேர்தலை முன்னிட்டு நடைபெறும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணிகளுக்காக, SIR படிவத்தை நாம் பூர்த்தி செய்வது அவசியமாகும். இதில் என்னென்ன விவரங்கள் கேட்கப்பட்டு இருக்கும்? என சந்தேகம் நிலவுகிறது. இந்நிலையில், தேர்தல் ஆணையம் SIR கணக்கீட்டு படிவத்தில் வாக்காளர்கள் வழங்க வேண்டிய விவரங்கள் குறித்து, போட்டோக்களுடன் கூடிய எளிய விளக்கத்தை வெளியிட்டுள்ளது. அவற்றை SWIPE செய்து பார்க்கவும்.

BB தமிழ் சீசன் 9-ல் முதல் முறையாக ஒரே வாரத்தில் 2 பேர் எலிமினேட் ஆகியுள்ளனர். இந்த வாரம் ரம்யாவும், துஷாரும் எவிக்ட் ஆனதாக தகவல் பரவியது. தற்போது, துஷாரும், பிரவீன் ராஜ்தேவும் எலிமினேட் செய்யப்பட்டதாக உறுதிப்படுத்தப்பட்ட தகவல் கிடைத்துள்ளது. பிரவீன் ராஜ்தேவ் அன்அபிசியல் வாக்குப்பதிவில் லீடிங்கில் இருந்த நிலையில், கடைசி நேரத்தில் எப்படி எவிக்ட் ஆனார் என்ற சந்தேகம் ரசிகர்களுக்கு எழுந்துள்ளது.

▶நவம்பர் 9, ஐப்பசி 23 ▶கிழமை: ஞாயிறு ▶நல்ல நேரம்: 7:45 AM – 8:45 AM & 3.15 PM – 4.15 PM ▶கெளரி நல்ல நேரம்: 1:45 AM – 2:45 AM & 1:30 PM – 2:30 PM ▶ராகு காலம்: 4:30 PM – 6:00 PM ▶எமகண்டம்: 12:00 PM – 1:30 PM ▶குளிகை: 3:00 PM – 4:30 PM ▶திதி: பஞ்சமி ▶சூலம்: மேற்கு ▶பரிகாரம்: வெல்லம் ▶பிறை: தேய்பிறை

இந்திய வீரரும், ஆர்சிபி கேப்டனுமான ராஜத் பட்டிதார் அடுத்த 4 மாதங்களுக்கு கிரிக்கெட் களம் காண மாட்டார் என தகவல்கள் தெரிவிக்கின்றன. தென்னாப்பிரிக்கா A-வுக்கு எதிரான முதல் பயிற்சி டெஸ்டில் அவர் படுகாயமடைந்துள்ளார். மருத்துவ பரிசோதனையின் அடிப்படையில் ராஜத் பட்டிதார் ஓய்வெடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக ரஞ்சி உள்ளிட்ட உள்ளூர் போட்டிகளில் இருந்தும் அவர் விலகும் நிலை ஏற்பட்டுள்ளது.

காங்., எதிர்ப்பு வாக்குவங்கியாக இருந்த முக்குலத்தோர், முத்துராமலிங்க தேவர் மறைவுக்கு பிறகு திமுகவை ஆதரித்தனர். MGR மீது பற்றுகொண்ட அச்சமூகம், ஜெ., காலத்தில் அதிமுக பின் அணிதிரண்டது. EPS தலைமையேற்ற பிறகு அதிமுக முக்குலத்தோர் வாக்குவங்கி, திமுக, டிடிவி, பாஜக என சிதறியுள்ளது. OPS-TTV இபிஎஸ் எதிர்ப்பில் உறுதிகாட்டுவதால், முக்குலத்தோர் அரசியல் திமுக Vs பாஜக என மாறும் என்கிறார்கள் விமர்சகர்கள்.

தீபாவளிக்குப் பதினைந்து நாள்களுக்குப் பிறகு கொண்டாடப்படும் வருடாந்தர விழாவான தேவ் தீபாவளி, முழு நிலவு இரவில் கொண்டாடப்பட்டது. வாரணாசியின் கங்கைக் கரையில் சுமார் 25 லட்சம் தீபங்கள் ஏற்றப்பட்டு ஜொலித்தன. ஆற்றின் குறுக்கே படகு சவாரிகள், வாணவேடிக்கைகள் என வண்ணமயமாக இருந்தது. இதன் போட்டோக்களை உங்களுக்காக மேலே பகிர்ந்துள்ளோம். ஸ்வைப் செய்து பாருங்க. பிடிச்சிருந்தா ஒரு லைக் போடுங்க

உ.பி., முசாபர்நகரில் ஹெல்மெட் அணியாமல் ஸ்கூட்டர் ஓட்டிச் சென்ற அன்மோல் என்பவரை போலீஸ் மடக்கி பிடித்தனர். வண்டி சாவியை உருவிய போலீஸ், அவருக்கு அபராதம் விதித்து சலானை நீட்டியது. அதைப் பார்த்த அன்மோலுக்கு அங்கேயே மயக்கம் வந்துவிட்டது. ஆம், ₹20,74,000 அபராதம் விதிக்கப்பட்டிருந்தது. பயந்துபோன அவர் போலீஸிடம் கேட்க, இது ஜஸ்ட் டெக்னிகல் ஃபால்ட், ₹4,000-ஐ கட்டிவிட்டு நடையை கட்டுங்கள் என்று கூறியுள்ளனர்.

சென்னையில் உலக அளவிலான கலை கூட்டமைப்பு சார்பாக நடைபெற்ற நிகழ்ச்சியில் அன்புமணிக்கு கெளரவ பிளாக் பெல்ட் வழங்கப்பட்டுள்ளது. அதனை அவர் கராத்தே உடையுடன் பங்கேற்று பெற்றுக் கொண்டார். நிகழ்ச்சியில் பேசிய அன்புமணி இனிமேல் தற்காப்பு கலைகளை காற்றுக் கொள்வேன் என தெரிவித்தார். மேலும், தங்களது ஆட்சியில் பள்ளி குழந்தைகளுக்கு தினமும் PT period இருக்கும் என்றும் கூறினார்.
Sorry, no posts matched your criteria.