News April 3, 2024

புற்றுநோயுடன் போராடி வருகிறேன்

image

பிஹார் முன்னாள் துணை முதல்வரும், பாஜக எம்.பியுமான சுஷில் குமார் மோடி கடந்த 6 மாதங்களாக புற்றுநோயுடன் போராடி வருவதாக கூறியுள்ளார். இதை மக்களிடம் தெரிவிக்க வேண்டிய நேரம் வந்துவிட்டதாக கூறிய அவர், மக்களவைத் தேர்தலில் தன்னால் போட்டியிடவோ, பிரசாரத்தில் பங்கேற்கவோ முடியாது என்று தெரிவித்தார். இது குறித்து பிரதமர் மோடியிடம் தெரிவித்துவிட்டதாகவும் கூறினார். தற்போது அவர் ராஜ்யசபா எம்.பி.யாக உள்ளார்.

News April 3, 2024

பிரதமர் பொய் செய்தியை பரப்புகிறார்

image

கச்சத்தீவு விவகாரத்தில் பிரதமர் மோடி, நிர்மலா சீதாராமன் பொய் செய்தியை பரப்புகின்றனர் என தமிழ்நாடு காங்., தலைவர் செல்வப்பெருந்தகை குற்றம் சாட்டியுள்ளார். ‘பிரதமர் பேச்சு இலங்கை மக்களிடம் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. அருணாச்சல் பிரதேசத்தின் பகுதிகளை சீனா ஆக்கிரமிக்கவில்லை என பிரதமர் கூறுவதை மக்கள் ஏற்கமாட்டார்கள். அரசியலுக்காக நாட்டின் பாதுகாப்பை தாரைவார்ப்பதை ஏற்க முடியாது’ என விமர்சித்துள்ளார்.

News April 3, 2024

18 வருடங்களுக்கு பிறகு இணையும் சூர்யா-ஜோதிகா?

image

சில்லுன்னு ஒரு காதல் படத்திற்குப் பிறகு 18 வருடங்கள் கழித்து சூர்யா- ஜோதிகா இருவரும் இணைந்து நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. காதலை மையப்படுத்தி உருவாக உள்ள இந்த படத்தை, இயக்குநர்கள் ஹலிதா ஷமீம் மற்றும் அஞ்சலி மேனன் இருவரும் இணைந்து இயக்குவார்கள் எனத் தெரிகிறது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாக வாய்ப்புள்ளது. முன்னதாக இந்த ஜோடி 6 படங்களில் இணைந்து நடித்துள்ளனர்.

News April 3, 2024

கெஜ்ரிவால் உடல்நிலை: அறிக்கை

image

கெஜ்ரிவால் உடல் எடை 65 கிலோவில் சீராக இருப்பதாக திகார் சிறை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. இரண்டு மருத்துவர்களை கொண்டு பரிசோதனை செய்ததில் கெஜ்ரிவாலின் உடல்நிலை சீராக உள்ளது. சிறைக்கு கொண்டு வரப்பட்டதில் இருந்து தற்போது வரை அதே எடையில் இருக்கிறார் என்று சிறை நிர்வாகம் அதிஷியின் குற்றச்சாட்டுக்கு மறுப்பு தெரிவித்துள்ளது. வீட்டில் சமைக்கப்பட்ட உணவு அவருக்கு வழங்கப்படுவதாகவும் விளக்கமளித்துள்ளது.

News April 3, 2024

அதிமுகவை காப்பாற்ற திமுகவை ஆதரிக்க வேண்டும்

image

அதிமுகவை காப்பாற்ற வேண்டும் என்றால் அதிமுக தொண்டர்கள் திமுகவுக்கு வாக்களிக்க வேண்டும் என கொமதேக தலைவர் ஈஸ்வரன் தெரிவித்துள்ளார். ஒவ்வொரு மாநிலத்தில் உள்ள மாநிலக் கட்சிகளை பாஜக அழித்து வருவதாக கூறிய அவர், இந்த தேர்தலில் அதிமுக தோற்றால் மட்டுமே தமிழகத்தில் அக்கட்சி தொடர்ந்து இருக்கும் எனக் கூறினார். மேலும், தேர்தலுக்கு பிறகு மோடியை, இபிஎஸ் கண்டிப்பாக ஆதரிப்பார் எனவும் அவர் ஆருடம் தெரிவித்தார்.

News April 3, 2024

மீண்டும் உயர்கிறது பெட்ரோல், டீசல் விலை?

image

கச்சா எண்ணெய் விலை உயர்வு கவலை அளிப்பதாக எண்ணெய் அமைச்சகத்தின் செயலாளர் பங்கஜ் ஜெயின் தெரிவித்துள்ளார். மூன்றாவது பெரிய இறக்குமதி நாடான இந்தியா, அச்சம் கொண்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். கச்சா எண்ணெய் விலை உயர்வால் பெட்ரோல், டீசல் விலை உயர வாய்ப்புள்ளதா? என்ற கேள்விக்கு பதில் அளித்த அவர், கச்சா எண்ணெய் விலை ஒரு மாதத்திற்கு தொடர்ந்து நீடித்தால் எண்ணெய் நிறுவனங்கள் தகுந்த முடிவெடுக்கும் என்றார்.

News April 3, 2024

கச்சத்தீவை மீட்பது சாத்தியமா?

image

தேர்தல் நெருங்கும் சூழலில் கச்சத்தீவு விவகாரம் பூதாகரமாக வெடித்துள்ளது. இந்நிலையில், இலங்கையிடம் இருந்து கச்சத்தீவை திரும்ப பெறுவது சாத்தியமில்லை என்கிறார் முன்னாள் இந்திய துணைத் தூதர் நடராஜன். கச்சத்தீவை பொறுத்தவரை உச்ச நீதிமன்றமே ‘அது முடிந்த கதை’ என தீர்ப்பளித்துள்ளதை அவர் சுட்டிக்காட்டியுள்ளார். கச்சத்தீவு விவகாரத்தில் மாநில அரசு எதுவும் செய்திருக்க முடியாது எனவும் குறிப்பிட்டுள்ளார்.

News April 3, 2024

பாஜகவில் இணைகிறார் தமிழ் நடிகை சுமலதா

image

பிரபல நடிகையும், மாண்டியா மக்களவைத் தொகுதி எம்.பி.யுமான சுமலதா, பாஜகவில் இணைவதாக அறிவித்துள்ளார். தனது ஆதரவாளர்கள் முன்னிலையில் பேசிய அவர், சுயேச்சையாக போட்டியிட்டு தன்னை வெற்றி பெறச் செய்த மாண்டியா மக்களை எப்போதும் மறக்கமாட்டேன். விரைவில் பாஜகவில் இணைகிறேன்; எப்போதும் போல உங்களின் ஆதரவு வேண்டும் எனத் தெரிவித்தார். இவர் தமிழில் முரட்டுக்காளை, கழுகு உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.

News April 3, 2024

வெயில்: முதல் ஆளாக ஃபாலோ செய்த அண்ணாமலை

image

தமிழ்நாட்டில் அடுத்த 5 நாட்களுக்கு அதிகபட்ச வெப்பநிலை 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கும் என்று வானிலை மையம் எச்சரித்துள்ளது. அதிக வெப்பநிலை மற்றும் அதிக ஈரப்பதம் இருக்கும் பொழுது அசெளகரியம் ஏற்படலாம். தேர்தல் பரப்புரையில் ஈடுபடுபவர்கள் அடிக்கடி, இளநீர், மோர், தண்ணீர் போன்றவற்றை அடிக்கடி குடிக்கவும். இதை அண்ணாமலையும், வானதி சீனிவாசனும் தற்போது ஃபாலோ செய்ய ஆரம்பித்துள்ளனர்.

News April 3, 2024

மச்சானை விட பச்சான் தான் முக்கியம்

image

மச்சானை விட பச்சான் (தங்கர் பச்சான்) தான் முக்கியம் என பாமக தலைவர் அன்புமணி தெரிவித்துள்ளார். மண்ணுக்காகவும், மக்களுக்காகவும் குரல் கொடுக்கும் தங்கர் பச்சானை கடலூர் தொகுதி மக்கள் ஆதரிக்க வேண்டும் என கேட்டுக் கொண்ட அவர், இவரை விட ஒரு சிறந்த வேட்பாளர் யாராவது இருந்தால் எனக்கு அடையாளம் காட்டுங்கள் எனக் கூறினார். இதே தொகுதியில் போட்டியிடும் காங்., வேட்பாளர் விஷ்ணு பிரசாத் அன்புமணியின் மச்சான் ஆவார்.

error: Content is protected !!