India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
சந்தானம் புதிதாக நடித்துள்ள இங்கு நான் தான் கிங்கு திரைப்படத்தின் ரிலீஸ் தேதி மாற்றப்பட்டுள்ளது. இயக்குநர் ஆனந்த் நாராயணன் இயக்கியுள்ள அந்தப் படத்தில் பிரியாலயா, தம்பி ராமையா, முனிஸ் காந்த் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். அந்தப் படம் வருகிற 10ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் ஆகும் என முதலில் அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், தற்போது 17ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என படக்குழு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
நீட் தேர்வு வினாத்தாள் கசிந்ததாக வெளியான செய்திகளுக்கு தேசிய தேர்வு முகமை (NTA) மறுப்புத் தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் நேற்று 4,750 மையங்களில் மருத்துவ படிப்பில் சேருவதற்கான நீட் இளநிலை தேர்வு நடைபெற்ற நிலையில், ராஜஸ்தானில் வினாத்தாள் கசிந்ததாக செய்திகள் வெளியாகின. இதை மறுத்துள்ள தேசிய தேர்வு முகமை, அந்த செய்திகள் அடிப்படை ஆதாரமற்றது, அதில் உண்மை இல்லை எனக் கூறியுள்ளது.
சென்னையில் இருந்து வெளியூர் செல்லும் ரயில்களில் வாரநாள்களில் 50%, வார இறுதி நாள்களில் 75% தண்ணீர் நிரப்பப்படும். ஆனால், வெயில் காலத்தில் நிலத்தடி நீர்மட்டம் சரிந்ததால், தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டு, 25% மட்டுமே நிரப்பப்படுகிறது. இதனால், ரயில் புறப்பட்ட 2 முதல் 3 மணி நேரத்தில் தண்ணீர் தீர்ந்து விடுவதால், கழிவறை உள்ளிட்டவற்றை பயன்படுத்த முடியாமல் பயணிகள் திண்டாடி வருகின்றனர்.
தமிழகத்தில் 15 மாவட்டங்களில் இரவு 7 மணி வரை இடி, மின்னலுடன் மழை பெய்யக் கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், ஈரோடு, திண்டுக்கல், கரூர், மதுரை, குமரி, நெல்லை, தென்காசி, தேனி, திண்டுக்கல், கோவை, நீலகிரியில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. இதனால் சாலைகளில் தண்ணீர் தேங்கி போக்குவரத்து நெரிசல் ஏற்படக் கூடும் என வானிலை மையம் எச்சரித்துள்ளது.
தென் மாநிலங்களில் பெரிய வெற்றியை பாஜக எதிர்பார்த்திருந்த நிலையில், கர்நாடகாவில் பிரஜ்வால் விவகாரம் பாஜகவுக்கு தேர்தல் பரப்புரையில் கடும் பின்னடைவை ஏற்படுத்தியது. மொத்தமுள்ள 28 தொகுதிகளில் ஏற்கெனவே 14 தொகுதிகளில் தேர்தல் முடிந்த நிலையில், நாளை எஞ்சியுள்ள 14 தொகுதிகளில் தேர்தல் நடைபெறுகிறது. குறைந்தது 20 இடங்களை பெற பாஜக இலக்கு நிர்ணயித்திருந்த நிலையில், அது தற்போது கேள்விக்குறியாகியுள்ளது.
பாரதிய ராஷ்டிர சமிதி கட்சி மூத்த தலைவர் கவிதாவின் ஜாமின் மனுவை டெல்லி நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் கவிதாவை கடந்த மார்ச் 15ஆம் தேதி அமலாக்கத்துறையினர் கைது செய்தனர். நீதிமன்ற காவலில் திகார் சிறையில் அடைக்கப்பட்ட அவரை சிபிஐ அதிகாரிகள் கைது செய்தனர். இந்த 2 வழக்கிலும் ஜாமின் கோரி அவர் தாக்கல் செய்த மனுவை, டெல்லி சிறப்பு நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் நள-தமயந்தி தொடரிலிருந்து, நடிகை பிரியங்கா நல்காரி கழற்றி விடப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. சன் டிவியில் ஒளிபரப்பான ரோஜா தொடர் மூலம் பிரபலமான பிரியங்கா, தற்போது நள-தமயந்தி தொடரில் நடித்து வந்த சூழலில், அவருக்கு பதில் ஸ்ரீநிதி என்பவர் மாற்றப்பட்டுள்ளார். இதுபற்றி அவர் கூறும்போது, “தனக்கே தெரியாமல் இந்த நிகழ்வு நடந்துள்ளது. விரைவில் காரணம் தெரியும்” எனத் தெரிவித்துள்ளார்.
மும்பையிலுள்ள சச்சின் டெண்டுல்கர் பங்களா அருகே வசிக்கும் டி சவுசா, சச்சினுக்கு எதிராக குற்றச்சாட்டு தெரிவித்து எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், சச்சின் பங்களா கட்டுமானப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ள சிமெண்ட் கலவை இயந்திரத்தில் இருந்து இரவு முழுவதும் வரும் சத்தத்தால் தூங்க முடியவில்லை எனக் கூறியுள்ளார். இதைக்கண்ட நெட்டிசன்கள், அதிகாரிகளிடம் புகார் அளிக்கும்படி பதிவிட்டு வருகின்றனர்.
ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்து வரும் ‘இந்தியன் 2’ படத்தின் வெளியீடு, தள்ளிப் போவதாக தகவல் கசிந்துள்ளது. படத்தின் பின் தயாரிப்பு பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டிய நிலையில், வரும் ஜூன் மாதம் வெளியாகும் என்று படக்குழு சமீபத்தில் அறிவித்திருந்தது. ஆனால், ஜூன் 13ஆம் தேதி தனுஷின் ‘ராயன்’ படம் வெளியாகும் என்று கூறப்படுவதால், இந்தியன் 2 படம் ஜூலை 18ஆம் தேதிக்குத் தள்ளிப் போவதாக கூறப்படுகிறது.
*வெளியில் செல்லும்போது, புற ஊதாக் கதிர்கள் கூந்தலை சேதப்படுத்தாத வகையில், தலையை மறைக்கும் தொப்பி அணியலாம். *கூந்தலுக்கு ஈரப்பதம் அளிக்கும் ஷாம்பு மற்றும் கண்டிஷனரை பயன்படுத்த வேண்டும். *கோடை காலத்தில் முடி உடைவது மற்றும் உதிருவதைத் தடுக்க, முன்கூட்டியே வெட்டி விடுவது பாதுகாப்பானது. *தலை முடிக்கு ஹீட்டர் பயன்படுத்துவதை குறைப்பது நல்லது. *கூந்தலைப் பாதுகாக்க தரமான பொருட்களை பயன்படுத்த வேண்டும்.
Sorry, no posts matched your criteria.