India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
இந்தியாவின் ஒட்டுமொத்த மாம்பழ உற்பத்தி, நடப்பு சீசனில் 14% வரை அதிகரித்து, 24 மில்லியன் டன்களாக அதிகரிக்குமென ICAR-CISH இயக்குநர் தாமோதரன் தெரிவித்துள்ளார். மேலும் அவர், ‘இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ள ஏப்ரல் முதல் ஜூன் வரை வீசும் வெப்ப அலை, மாம்பழங்கள் உற்பத்தியில் பெரிய பாதிப்பை ஏற்படுத்தாது. மே மாதம் விவசாயிகள் போதிய நீர் அளித்து பராமரித்தால், மாம்பழங்கள் உதிர்வதை தவிர்க்கலாம்’ என்றார்.
கச்சத்தீவு தாரை வார்ப்புக்கு நாடாளுமன்ற ஒப்புதலோ, மத்திய அமைச்சரவை ஒப்புதலோ இல்லாததால் அது செல்லுமா என கேள்வியெழுந்துள்ளது. இந்தியா, வங்கதேச எல்லை ஒப்பந்தம் 1974இல் ஏற்பட்டாலும், 2015இல் மோடி அரசும், நாடாளுமன்றமும் ஒப்புதல் அளித்த பிறகே அமலானது. ஆனால் கச்சத்தீவு விவகாரத்தில் அது நடக்கவில்லை எனக் கூறப்படுகிறது.
இலங்கைக்கு கச்சத்தீவை தனிப்பட்ட ரீதியில் இந்திரா காந்தி அளித்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இலங்கையின் அப்போதைய அதிபரான ஸ்ரீமாவோ பண்டாரநாயகவின் அரசியல் எதிர்காலத்தை காக்க இதுபோல செய்ததாகவும், இதற்கு பதிலாக இந்தியா எந்த பிரதிபலனையும் பெறவில்லை எனவும், எதிர்காலத்தில் பிரச்னை ஏற்பட்டால் கச்சத்தீவை திரும்பத் தர வேண்டுமென வாக்குறுதி பெறவில்லை எனவும் கூறப்படுகிறது.
இந்தியாவின் மிகச்சிறந்த தபால்காரராக 1988இல் தேர்வு செய்யப்பட்ட பெங்களூருவைச் சேர்ந்த விக்டர் தன்ராஜ் காலமானார். 1957 முதல் 1992 வரை தபால்துறையில் பணிபுரிந்த அவர், பணியில் மிகவும் அர்ப்பணிப்புடன் இருந்தார். இதனால் 1988ஆம் ஆண்டு இந்தியாவின் சிறந்த தபால்காரராக தேர்வு செய்யப்பட்டார். பிரிட்டிசார் கால உடையை விரும்பி அணிந்து வந்த அவர், தனது 90வது வயதில் பெங்களூரில் காலமானார்.
கச்சத்தீவு தாரை வார்ப்புக்கு நாடாளுமன்ற ஒப்புதல் இதுவரை பெறப்படவில்லை என தகவல் வெளியாகியுள்ளது. 1974இல் கச்சத்தீவை இலங்கைக்கு இந்திரா காந்தி அரசு தாரை வார்த்தது. இதுகுறித்த ஆர்டிஐ தகவலை அண்ணாமலை வெளியிட்டதால் பரபரப்பு நிலவுகிறது. இந்நிலையில், கச்சத்தீவு தாரை வார்ப்புக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்ததற்கு ஆதாரம் இல்லை என்ற புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன.
பாக். ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதி இந்தியாவுக்கு சொந்தமானது என்று வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். செய்தியாளர்களிடம் பேசிய அவர், பாக். ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதி இந்தியாவுக்கு சொந்தம் என்பது ஒரு கட்சியின் நிலைப்பாடு மட்டுமல்ல, தேசத்தின் நிலைப்பாடு என்றார். அனைத்து கட்சிகளின் ஆதரவுடன் நாடாளுமன்றமும் இதுகுறித்து தெளிவான முடிவெடுத்துள்ளது எனவும் அவர் கூறினார்.
தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வட தமிழக உள் மாவட்டங்களில் ஒருசில இடங்களில் வெப்பநிலை 39-41 டிகிரி செல்சியஸ் இருக்கக்கூடும். அதிக வெப்பநிலை, அதிக ஈரப்பதம் இருக்கும் பொழுது அசௌகரியம் ஏற்படலாம். குழந்தைகள், முதியோர், கர்ப்பிணிகள் முடிந்தவரை வீடுகளுக்குள்ளேயே இருக்கவும்.
பீஹாரில் மக்களவைத் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்டதால், லோக் ஜனசக்தி கட்சியைச் சேர்ந்த முக்கிய தலைவர்கள் 22 பேர் ஒரே நேரத்தில் ராஜினாமா செய்துள்ளனர். வேட்பாளர் தேர்வில் வேறு கட்சியில் இருந்து வருவோருக்கு முன்னுரிமை அளித்துள்ளதாக ராஜினாமா செய்த தலைவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். அதிருப்தி தலைவர்கள் I.N.D.I.A கூட்டணியை ஆதரிக்க இருப்பதாக லோக் ஜனசக்தி தலைவர் சிராக் பஸ்வான் தெரிவித்துள்ளார்.
நீலகிரி அதிமுகவின் கோட்டை என்பதை பொதுமக்கள் நிரூபித்து காட்ட வேண்டும் என இபிஎஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார். நீலகிரி வேட்பாளர் லோகேஷை ஆதரித்து பேசிய அவர், ஜெயலலிதா நீலகிரிக்கு அடிக்கடி வந்து சென்ற ஒரே காரணத்திற்காக திமுக இந்த மாவட்டத்தை புறக்கணித்ததாக குற்றம் சாட்டினார். மேலும், காற்றில் ஊழல் செய்த ஆ.ராசா தேர்தலுக்கு பிறகு எங்கு இருப்பார் என்று கூற முடியாது என்றும் இபிஎஸ் விமர்சித்தார்.
கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவகுமாரின் சகோதரர் சுரேஷின் சொத்து மதிப்பு 5 ஆண்டுகளில் 75% உயர்ந்துள்ளது. பெங்களூருவில் போட்டியிடும் அவர், பிரமாணப் பத்திரத்தில் ரூ.593.04 கோடி சொத்துகள் இருப்பதாக தெரிவித்துள்ளார். 2019 தேர்தலில் அவரின் சொத்து மதிப்பு ரூ. 338.87 கோடியாக இருந்தது. அதேபோல் மாண்டியா தொகுதியில் போட்டியிடும் காங்., வேட்பாளர் வெங்கடரமண கவுடாவின் சொத்துமதிப்பு ரூ.633 கோடியாக உள்ளது.
Sorry, no posts matched your criteria.