India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

டெல்லி கார் குண்டு வெடிப்பு குறித்து பேசியுள்ள தேஜஸ்வி யாதவ், இந்தியர்கள் எவ்வளவு காலம் பயத்தின் நிழலில் வாழ்வார்கள் என கேள்வி எழுப்பியுள்ளார். தேசிய பாதுகாப்பு விஷயத்தில் அரசுடன் உறுதியாக நிற்போம் எனவும், நாட்டின் பாதுகாப்பை விட வேறு எதுவும் முக்கியமில்லை என்றும் தெரிவித்துள்ளார். மேலும், இந்த விஷயத்தில் முழுமையான விசாரணை நடத்தி, நியாயமான நடவடிக்கை வேண்டும் எனவும் அவர் கோரிக்கை வைத்துள்ளார்.

வீடுகளில் காலை, மாலை வேளைகளில் ஊதுபத்தி ஏற்றி வைப்பது வழக்கமே. ஆனால், அந்த ஊதுபத்தியை ஏற்றி வைக்க, சில வழிமுறைகள் உள்ளன. ஜோதிடத்தின் படி, வழிபாட்டின் போது ஊதுபத்தி ஏற்றினால், எப்போதும் 2 ஏற்றி வைக்கவும். இதைச் செய்வதன் மூலம், வீட்டில் அமைதியும் மகிழ்ச்சியும் நிலவும். அதே நேரத்தில், தெய்வங்களின் ஆசீர்வாதமும் கிடைக்கும் என நம்பப்படுகிறது. பலரும் அறியாத இந்த அரிய தகவலை அனைவருக்கும் பகிரவும்.

SIR-ஐ எதிர்த்து திமுக கூட்டணி கட்சிகள் சார்பில் இன்று தமிழகம் முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. சென்னையில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் வைகோ, சண்முகம், திருமாவளவன், செல்வப்பெருந்தகை, முத்தரசன் உள்ளிட்டோர் கலந்து கொள்ள உள்ளனர். பாஜகவிற்கு எதிரான வாக்குகளை நீக்கவே SIR கொண்டு வரப்படுவதாக திமுக குற்றஞ்சாட்டி வரும் நிலையில், சுப்ரீம் கோர்ட்டில் வழக்கும் தொடர்ந்துள்ளது.

சர்வதேச சந்தையில் கடந்த 2 வாரங்களாக மந்த நிலையில் காணப்பட்ட தங்கம் மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்து வருகிறது. ஒரே நாளில் 125 டாலர்கள்(₹11,082) அதிகரித்துள்ளது. இதனால், தற்போதைய நிலவரப்படி 1 அவுன்ஸ்(28g) $4,126 ஆக உள்ளது. வெள்ளி விலையும் 1 அவுன்ஸ் $50-ஐ கடந்துள்ளது. இதனால், நம்மூர் சந்தையில் தங்கம் விலையில் பெரிய மாற்றம் இருக்கும் என வியாபாரிகள் கூறுகின்றனர்.

*பிஹாரில் இன்று 2-ம் கட்ட தேர்தல். *பாலிவுட் நடிகர் தர்மேந்திராவின் உடல்நிலை சீராக உள்ளதாக அறிவிப்பு. *PM மோடி இன்று பூடான் பயணம். *டெல்லி குண்டுவெடிப்பை தொடர்ந்து அமெரிக்கர்கள் பாதுகாப்பாக இருக்க அந்நாட்டு தூதரகம் எச்சரிக்கை. *டெல்லி கார் குண்டு வெடிப்பிற்கு ஜப்பான், பிரிட்டன், அர்ஜெண்டினா, மாலத்தீவு இரங்கல். *மியான்மரில் சைபர் மோசடி கும்பலிடம் சிக்கி தவித்த 197 இந்தியர்கள் நாடு திரும்பினர்.

நம்ம வீட்டில் அம்மா அடிக்கடி சுண்டைக்காய் வறுவல் அல்லது குழம்பு வைப்பாங்க. சுலபமாக கிடைக்கும் இதில், பல்வேறு நன்மைகள் உள்ளன. நம்ம ஊர்ல இதுக்கு பலரும் அவ்வளவு முக்கியத்துவம் தருவதில்லை. ஆனா இது உண்மையிலேயே எல்லோருடைய வீட்டின் கிச்சன் டேபிளில் இருக்க வேண்டிய ஒன்று. இதன் நன்மைகள் என்னென்ன என்று, மேலே போட்டோக்களில் பகிர்ந்துள்ளோம். ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. SHARE

*வாரத்தின் முதல் நாளான நேற்று இந்திய பங்குச்சந்தைகள் ஏற்றத்துடன் வர்த்தகத்தை நிறைவு செய்தன. *கிரெடிட் கார்டு கடன் தொகை ₹2.17 லட்சம் கோடியாக அதிகரிப்பு. *இந்தியாவில் நடப்பாண்டில் வீடு விற்பனை மதிப்பு ₹6.65 லட்சம் கோடியாக உயரும் என எதிர்பார்ப்பு. *அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 6 காசுகள் குறைந்து ₹88.71 ஆனது. *ஒடிஷா, ம.பி., ஆந்திராவில் தங்கம் இருப்பதற்கான ஆதாரங்கள் கண்டுபிடிப்பு.

வட உள் தமிழகம் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதாக IMD தெரிவித்துள்ளது. அதன்காரணமாக நெல்லை மாவட்ட மலைப்பகுதிகள், தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக மஞ்சள் அலர்ட் விடுத்துள்ளது. அதேபோல், தமிழகத்தில் வரும் 16-ம் தேதி வரை இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை நீடிக்கும் என்றும் தெரிவித்துள்ளது.

நாடு முழுவதும் அங்கீகரிக்கப்படாத அரசியல் கட்சிகள் ₹9,169 கோடி வரி ஏய்ப்பு செய்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அங்கீகரிக்கப்படாத கட்சிகளுக்கு வரும் நன்கொடைகளுக்கு வரிவிலக்கு உண்டு. இதை சாதகமாக பயன்படுத்திய சிலர், அக்கட்சிகளுக்கு நன்கொடை வழங்கி, ITR தாக்கல் செய்துள்ளனர். நன்கொடை மிக அதிகமாக இருந்ததால், மத்திய நேரடி வரிவிதிப்பு வாரியம் சந்தேகம் அடைந்து, நடத்திய ஆய்வில் இது தெரியவந்துள்ளது.

மிருணாள் தாகூர் நேரடியான தமிழ் படங்களில் நடிக்கவில்லை என்றாலும், ‘சீதா ராமம்’ திரைப்படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களின் இதயத்தில் இடம்பிடித்த தேவதை. தனது சிரிப்பு மற்றும் கண்கள் செய்யும் மாயஜாலத்தாலும் ரசிகர்களை தன் வசம் கட்டி வைத்துள்ளார். விரைவில் இவர் தமிழ் படங்களில் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மிருணாள் இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ள மின்னும் போட்டோஸ் பிடிச்சிருந்தா ஒரு லைக் போடுங்க.
Sorry, no posts matched your criteria.