India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
‘கல்லடி பட்டாலும் கண்ணடி படக் கூடாது’ என்பது முதுமொழி. ‘திருஷ்’ என்றால் பார்த்தல் என்று பொருள். மற்றவர்களின் பொறாமை பார்வையால் ஏற்படும் திருஷ்டி உடல் நலன், வியாபாரம் உள்ளிட்டவற்றை பாதிக்கும் என்கிறது சாஸ்திரம். அதனை கழிக்கும் ஆற்றல் ஆழித்தீயில் இருந்து எடுக்கப்படும் மை சாந்திற்கு உண்டாம். ஐயப்பன் காயத்ரி மந்திரத்தை சொல்லி நெற்றியில் அந்த மையை இட்டுக்கொண்டால் திருஷ்டிகள் விலகும் என்பது ஐதீகம்.
MI அணிக்கு எதிரான 29ஆவது லீக் போட்டியில், அதிரடியாக விளையாடி ஹாட்ரிக் சிக்ஸர்களை அடித்த தோனி இரு சாதனைகளைப் படைத்துள்ளார். இதன் 17 வருட ஐபிஎல் வரலாற்றில் ஒரு இன்னிங்ஸில் எதிர்கொண்ட முதல் 3 பந்துகளிலும் 3 சிக்சர்கள் அடித்த முதல் இந்திய வீரர் என்ற சாதனையை அவர் படைத்துள்ளார். அத்துடன், 4 பந்துகளில் 20 ரன்கள் எடுத்த அவர், 500.00 என்ற அதிக ஸ்ட்ரைக் ரேட்டில் க்ருனால் பாண்டியாவின் சாதனையை சமன் செய்தார்
பாஜக தயவில் தான் ஜெயக்குமார் கவுரவமான தோல்வி அடைந்தார் என்று வடசென்னை பாஜக வேட்பாளர் பால் கனகராஜ் கூறியுள்ளார். ராயபுரம் தொகுதியில் முடிசூடா மன்னனாக இருந்த தான் தோற்றதற்கு காரணம் பாஜகதான் என்று ஜெயக்குமார் பேசிய தொடர்பாக பதிலளித்த அவர், “கடந்த தேர்தலில் பாஜகவுடனான கூட்டணி தயவால்தான் கொஞ்ச ஓட்டாவது ஜெயக்குமார் வாங்கினார். இல்லை என்றால் சுத்தமாக வாஷ் அவுட் ஆகியிருப்பார்” எனக் கூறினார்.
▶ஏப்ரல் – 15 | ▶ சித்திரை – 02
▶கிழமை: திங்கள் | ▶திதி: சப்தமி
▶நல்ல நேரம்: காலை 06:30 – 07:30 வரை, மாலை 04:30 – 05:30 வரை
▶கெளரி நேரம்: காலை 09:30 – 10:30 வரை, மாலை 07:30 – 08:30 வரை
▶ராகு காலம்: காலை 07:30 – 09:00 வரை
▶எமகண்டம்: காலை 10:30 – 12:00 வரை
▶குளிகை: நண்பகல் 01:30 – 03:00 வரை
▶சந்திராஷ்டமம்: விசாகம்
▶சூலம்: கிழக்கு ▶பரிகாரம்: தயிர்
கார்த்திக் சுப்புராஜ் இயக்கும் புதிய படத்திற்காக நடிகர் சூர்யா தீவிர உடற்பயிற்சி மேற்கொள்ள உள்ளார். தமிழ், மலையாளம் உள்பட தென்னக மொழிகளில் ஆக்ஷன் கதைக்களத்தில் உருவாகவுள்ள இந்த படத்திற்காக மும்பையில் ஹோம் வொர்க்குகளைச் செய்துவருகிறார். வரலாற்றுப் பின்னணியிலான ‘கங்குவா’ படத்துக்காகக் குதிரையேற்றம், வாள் சண்டை போன்ற சில விசேஷப் பயிற்சிகளை சூர்யா மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது.
I.N.D.I.A கூட்டணியின் தலைவர்கள் பாதிப் பேர் ஜெயிலிலும்; மீதிப் பேர் பெயிலிலும் உள்ளதாக நடிகர் சரத்குமார் கூறியுள்ளார். கரூரில் பேசிய அவர், எதிர் அணியில் யார் பிரதமர் வேட்பாளர் எனத் தெரியவில்லை. ஒவ்வொரு அணிக்கும் ஒரு தலைவர் இருப்பார். ஆனால், எதிரணியில் அப்படி ஒருவர் இல்லை. திமுகவும் காங்கிரஸும் பிரிவினையை விதைக்கின்றன. தேசத்தைப் பற்றி சிந்திக்கும் மோடியின் மீண்டும் ஆட்சிக்கு வர வேண்டும் என்றார்.
வெயில் காலத்தில் ஏற்படும் வெப்ப புண்கள், அரிப்பு & பூஞ்சை தொற்று போன்ற சரும நோய்களில் இருந்து உடலை தற்காத்துக்கொள்ள மூலிகைப்பட்டை குளியலை சித்த மருத்துவம் பரிந்துரைக்கிறது. வேப்பம், சரக்கொன்றை, புங்கம், அரசம், ஏழிலைப்பாலை ஆகியவற்றின் பட்டைகளை தலா பத்து கிராம் எடுத்து, அவற்றை மஸ்லின் துணியில் முடிச்சிட்டு வெந்நீரில் போட்டு அதில் குளியுங்கள். உடலில் உள்ள கழிவுகள் நீங்கி சருமம் பொலிவு பெறும்.
உண்மை, நேர்மை, ஒழுக்கம் நிறைந்த அண்ணாமலை நாடாளுமன்றத்திற்கு செல்ல வேண்டும் என்று தமிழருவி மணியன் கூறியுள்ளார். கோவையில் பேசிய அவர், இரு திராவிட கட்சிகளின் பிடியிலிருந்து தமிழகத்தை விடுவிக்க 55 ஆண்டுகளாக ஒரு தவத்தைப் பின்பற்றி வருகிறேன். அந்தத் தவத்தை நிறைவேற்றும் மனிதராக அண்ணாமலையைப் பார்க்கிறேன். அவர் மூலம் அரசியல் மாற்றம் வரும் எனக் கூறினார்.
இளம் விக்கெட் கீப்பர் தோனி அடித்த ஹாட்ரிக் சிக்ஸர் CSK அணியின் வெற்றிக்கு உதவியதாக கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் வேடிக்கையாக கூறியுள்ளார். தொடர்ந்து பேசிய அவர், “பும்ரா சிறப்பாக பந்துவீசி இருந்தார். எங்கள் அணியின் மலிங்கா (பதிரனா) யார்க்கர்களை அபாரமாக வீசினார். துஷார், ஷர்துல் ஆகியோரும் சிறப்பாக செயல்பட்டனர். அதை நாம் மறக்கக் கூடாது. ரஹானே ஃபிட்னெஸ் ரீதியாக பின்னடைவை எதிர்கொண்டுள்ளார்” என்றார்.
மத்திய பிரதேசத்தில் ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த 8 வயது சிறுவன் லோகேஷ், சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் சோகத்தில் ஏற்படுத்தியுள்ளது. விதிஷா கிராமத்தில் உள்ள ஆழ்துளை கிணற்றில், கடந்த 12ஆம் தேதி எதிர்பாராதவிதமாக தவறி விழுந்தான். 60 அடி ஆழமுள்ள அந்தக் கிணற்றில் சிக்கிய அவனை மீட்க சுமார் 40 மணி நேரத்திற்கு மேலாக மாநில பேரிடர் அவசர மீட்புப் படையினர் முன்னெடுத்த மீட்பு நடவடிக்கைகள் தோல்வியில் முடிந்தது.
Sorry, no posts matched your criteria.