News April 15, 2024

வெற்றியை தராத 3 வீரர்களின் சதம்

image

ஐபிஎல் வரலாற்றில் சேசிங்கில் இதுவரை 3 வீரர்களின் சதம் அந்த அணிகளின் வெற்றிக்கு உதவாமல் போய் உள்ளது. 2021இல் பஞ்சாப்புக்கு எதிராக சஞ்சு சாம்சன் 119 ரன்கள் அடித்தும் ராஜஸ்தான் அணி தோல்வி அடைந்தது. அதைப்போல, நேற்றைய சிஎஸ்கேவுக்கு எதிரான ஆட்டத்தில் ரோஹித்தின் சதமும் 105 வீணானது. மேலும், 2010இல் மும்பைக்கு எதிராக யூசுப் பதான் 100 ரன்கள் அடித்தும் ராஜஸ்தான் அணி தோல்வி அடைந்தது குறிப்பிடத்தக்கது.

News April 15, 2024

5ஜி ஊழல் குறித்து பேசத் தயாரா?

image

2ஜி குறித்து பேசும் அண்ணாமலை 5ஜி ஊழல் குறித்து பேசத் தயாரா என ஆ.ராசா கேள்வி எழுப்பியுள்ளார். நீலகிரியில் பேசிய அவர், அண்ணாமலை ஒரு ஐ.பி.எஸ் அதிகாரி. அவர் அறியாமையில் பேசுகிறார் என சொல்லக்கூடாது. ஆனால், அறிவிலித்தனமாக பேசுகிறார். 2ஜி தீர்ப்பை படிக்க வேண்டும். அந்த வழக்கில் அப்பீல் செய்யப்பட்டுள்ளது. அதனை எதிர்கொள்ள நான் தயார். அதிமுகவினர் 2ஜி விவகாரத்தில் எதுவும் தெரியாமல் பேசுகின்றனர் என்றார்.

News April 15, 2024

காசிக்கு நிகரான ஆலயம்

image

தென்காசி காசி விஸ்வநாதர் ஆலயம், 1467இல் அரிகேசரி பராக்கிரம பாண்டிய மன்னரால் கட்டப்பட்டதாக கல்வொட்டு ஒன்று கூறுகிறது. கனவில் வந்து ஆலயம் கட்டும்படி அவரிடம் முருக பெருமான் கூறியதால், அங்கு கோயிலை அவர் கட்டியதாகவும், இதற்காக காசியிலிருந்து லிங்கத்தை எடுத்து வந்து பிரதிஷ்டை செய்ததாகவும் கூறப்படுகிறது. காசி ஆலயத்தில் வழிபட்டதற்கு இணையான பலன், இங்கு வழிபட்டால் கிடைக்கும் என்பது ஐதீகம்.

News April 15, 2024

பஞ்சாப் அணி கேப்டன் தவான் காயத்தால் அவதி

image

பஞ்சாப் கேப்டன் ஷிகர் தவான் காயத்தால் கடும் அவதிக்கு ஆளாகியுள்ளார். ஐபிஎல்லில் ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் விளையாடியபோது, ஷிகர் தவானுக்கு தோள்பட்டையில் காயம் ஏற்பட்டது. இதையடுத்து போட்டியிலிருந்து பாதியிலேயே வெளியேறினார். காயத்திலிருந்து குணமாக 7 நாள்கள் வரை ஓய்வு எடுக்க வேண்டியிருப்பதால், மும்பை, குஜராத் அணிகளுக்கு எதிரான போட்டிகளில் அவர் விளையாட மாட்டார் எனக் கூறப்படுகிறது.

News April 15, 2024

கடைசி நேரத்தில் EX எம்எல்ஏ அதிமுகவில் இணைந்தார்

image

தமாகாவின் முன்னாள் எம்எல்ஏ மணிவர்மா (தண்டராம்பட்டு), அக்கட்சியைச் சேர்ந்த 2500 பேர்களுடன் இபிஎஸ் முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனர். தேர்தலுக்கு இன்னும் 4 நாள்கள் மட்டுமே இருக்கும் நிலையில், பாஜக உடனான கூட்டணியில் அவர்களுக்கு உடன்பாடு இல்லை. இதனால், அக்கட்சியில் இருந்து விலகி EX எம்எல்ஏ தனது ஆதாரவாளர்களுடன் அதிமுகவில் ஐக்கியமாகியுள்ளனர். இது பாஜக கூட்டணிக்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது.

News April 15, 2024

8வது முறையாக இன்று தமிழகம் வருகிறார் மோடி

image

தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் 19ம் தேதி நடைபெறும் நிலையில், தேர்தல் பிரசாரம் 17ஆம் தேதியுடன் முடிவடைகிறது. இதையொட்டி, பிரதமர் மோடி இன்று 8வது முறையாக தமிழகம் வருகிறார். திருவனந்தபுரத்தில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்றுவிட்டு ஹெலிகாப்டர் மூலம் மாலை 4.10 மணிக்கு நெல்லை அம்பாசமுத்திரம் வருகிறார். அங்கு, நயினார் நாகேந்திரன், பொன்.ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோருக்கு அவர் வாக்கு சேகரிக்கிறார்.

News April 15, 2024

இறுதிக்கட்ட வாக்கு சேகரிப்பில் அரசியல் தலைவர்கள்

image

தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் 19ஆம் தேதி நடைபெறும் நிலையில், தேர்தல் பிரசாரம் 17ஆம் தேதியுடன் முடிவடைகிறது. இதையொட்டி, தமிழகம் முழுவதும் தீவிர பிரசாரம் மேற்கொண்டு வந்த முதல்வர் ஸ்டாலின் சென்னை திரும்பியுள்ளார். தொடர்ந்து, இன்று திருவள்ளூர், வடசென்னை தொகுதிகளில் வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டுகிறார். இதேபோல், இபிஎஸ்ஸும் இன்று மத்திய, தென்சென்னையில் வாக்கு சேகரிக்கிறார்.

News April 15, 2024

3ஆம் உலகம் போர் ஏற்படுமா?

image

உலகின் சிறந்த ஆருடரான நாஸ்ட்ரடாமஸ் எழுதிய தீர்க்கதரிசனங்கள் (தி ப்ராஃபசீஸ்) என்ற நூலில், ‘2024இல் உலகம் மிகப்பெரிய கடற்படை போரை பார்க்க நேரிடும்’ என்று குறிப்பிடப்பட்டிருப்பதாகச் சொல்லப்படுகிறது. இஸ்ரேல் மீது ஈரான் தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து, இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்க போர்க்கப்பல்கள் களம் இறங்கியிருப்பதைப் பார்க்கும் போது, கணிப்பு உண்மையாகுமோ என்ற அச்சம் உலக மக்களிடையே ஏற்பட்டுள்ளது.

News April 15, 2024

காமராஜரின் பொன்மொழிகள்

image

✍எல்லோருடைய வாழ்க்கையும் வரலாறு ஆவதில்லை; வரலாறாய் ஆனவர்கள் தனக்காக வாழ்ந்ததில்லை. ✍எல்லாம் போய்விட்டாலும் வெல்ல முடியாத உள்ளம் இருந்தால் உலகத்தையே கைப்பற்றலாம். ✍பிள்ளை ஊனமாய் பிறந்தால் சொத்து சேர்த்து வை; சொத்து சேர்த்து பிள்ளையை ஊனமாக்காதே! ✍ சில சமயம் முட்டாளாய்க் காட்சியளிப்பது அறிவுள்ள செயல். ✍சுதந்திரம் என்றால் பயமில்லாது வாழ்வதுதான்; பயமில்லாது வாழ நியாயமாக நடந்துகொள்ள வேண்டும்.

News April 15, 2024

மீண்டும் கதாநாயகியாக நடிக்கும் ராய் லட்சுமி

image

ஒரு குட்டநாடன் பிளாக் (2018) மலையாளப் படத்திற்கு பின் படம் கதாநாயகியாக நடிப்பதற்கான வாய்ப்பே இல்லாதிருந்தவர் நடிகை ராய் லட்சுமி. 6 வருடங்கள் கழித்து ‛டிஎன்ஏ’ என்கிற படத்தின் மூலம் ரீ என்ட்ரி கொடுத்துள்ளார். இப்படத்தில் ரேச்சல் புன்னூஸ் என்கிற ஐபிஎஸ் அதிகாரி கதாபாத்திரத்தில் நடித்துள்ள அவர், இதன் மூலம் தென்னிந்திய திரைப்படங்களில் தனது கதாநாயகி அந்தஸ்தை மீண்டும் தக்க வைக்க எண்ணுகிறாராம்.

error: Content is protected !!