India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
சென்னை அணிக்கு எதிரான நேற்றைய போட்டியில் சதம் விளாசிய ரோஹித் சர்மா, அணியின் வெற்றிக்கு முயற்சிக்கவில்லை என்று மும்பை ரசிகர்கள் விமர்சித்து வருகின்றனர். இதையொட்டி, ட்விட்டரில் #Selfish என்ற ஹேஷ்டேக் ட்ரெண்டாகி வருகிறது. அதேசமயம், ரோஹித் தனித்து நின்றாலும், மற்ற வீரர்களிடம் இருந்து அவருக்கு எந்த ஒத்துழைப்பும் கிடைக்கவில்லை என ரோஹித் ரசிகர்கள் அவருக்கு ஆதரவாக கருத்து தெரிவித்து வருகின்றனர்.
கழுகு படத்தின் மூலம் கவனம் பெற்ற இயக்குநர் சத்யசிவா இயக்கத்தில் நடிகர் சசிகுமார் புதிய படத்தில் ஒப்பந்தமாகியுள்ளார். ‘ஃப்ரீடம் ஆகஸ்ட் -14’ எனப் பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில் கதாநாயகியாக லிஜோமோல் ஜோஸ் நடிக்கிறார். தமிழ், தெலுங்கு, மலையாளம், உள்ளிட்ட 5 மொழிகளில் இப்படம் உருவாக உள்ளது. ஜிப்ரான் இசையமைக்கும் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளது.
தமிழகத்தில் 4 மாவட்டங்களுக்கு வானிலை மையம் மஞ்சள் அலர்ட் விடுத்துள்ளது. அடுத்த 2 மணி நேரத்திற்கு ( 10 மணி) சிவகங்கை, ராமநாதபுரம், நெல்லை, குமரியில் மழை பெய்யும். மழை காரணமாக தாழ்வான இடங்களில் தண்ணீர் தேங்கலாம் என எச்சரித்துள்ளது. கடந்த சில நாள்களாக பெய்து வரும் மழையால் பூமி குளிர்ச்சியடைந்து, வெப்பம் தணிந்துள்ளது. ஆனால், இனி நிலைமை மாறி மீண்டும் வெப்பம் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அசாமில் ஒரே குடும்பத்தில் 350 வாக்காளர்கள் உள்ளனர். சோனிட்புர் மக்களவைத் தொகுதியில் வசிக்கும் ரோன் பகதூருக்கு 5 மனைவிகள், 12 மகன்கள், 9 மகள்கள், 56 பேரன்கள், 12 சகோதரர்கள், 9 சகோதரிகள் உள்ளனர். அவர்களையும், அவர்களின் குடும்பத்தினரையும் சேர்த்து, 1,200 உறுப்பினர்கள் உள்ளனர். இதில் 350 பேர் இந்த தேர்தலில் வாக்களிக்கவுள்ளனர். அதே தொகுதியில் மற்றொரு குடும்பத்துக்கு 300 வாக்குகள் உள்ளன.
மும்பை கேப்டன் பாண்டியாவின் தலைமைப் பண்பு குறித்து கவாஸ்கர் கேள்வி எழுப்பியுள்ளார். சிஎஸ்கேவுக்கு எதிராக பாண்டியாவின் பந்துவீச்சும், கேப்டன்சியும் அனுபவ வீரரை போல் இல்லை. தோல்விக்கு இதுவும் ஒரு காரணம் என பாண்டியாவை அவர் விமர்சித்துள்ளார். முன்னதாக சிஎஸ்கேவுக்கு எதிராக 3 ஓவர் பந்துவீசிய பாண்டியா, 43 ரன்களை விட்டுக்கொடுத்தார். குறிப்பாக அவரின் 20ஆவது ஓவரில், தோனி 3 சிக்சர்களை பறக்க விட்டார்.
மக்களவைத் தேர்தலில் பாஜக கூட்டணியில் அமமுக போட்டியிடுகிறது. இந்நிலையில் தேனி பிரசாரக் கூட்டத்தில் பேசிய அண்ணாமலை, ஜூன் 4ஆம் தேதிக்கு பிறகு டிடிவி தினகரன் வசம் அதிமுக செல்லும் என பேசினார். தற்போது அதிமுக பொதுச் செயலாளராக இருக்கும் இபிஎஸ் வசமே, அக்கட்சி அலுவலகங்கள் உள்ளன. அண்ணாமலை இவ்வாறு கூறியிருப்பதற்கு இபிஎஸ் என்ன பதிலடி கொடுப்பார்? என அறிய தமிழக மக்கள் ஆவலோடு காத்திருக்கின்றனர்.
காங்கிரஸ் இந்த எம்.பி தேர்தலில் 300க்கும் குறைவான இடங்களில் போட்டியிட உள்ளது. இதுவரை 27 மாநிலங்கள் மற்றும் 8 யூனியன் பிரதேசங்களை சேர்ந்த 278 வேட்பாளர்களை அக்கட்சி அறிவித்துள்ளது. இன்னும் 20க்கும் குறைவான இடங்களே அறிவிக்கப்பட இருக்கிறது. இதன் மூலம் 298 இடங்களில் அக்கட்சி போட்டியிடும் சூழல் உருவாகியுள்ளது. முன்னதாக 2019- 421 இடங்கள், 2014-464 இடங்கள், 2009-440 இடங்களில் காங்கிரஸ் போட்டியிட்டது.
புயல், வெள்ளம், சுனாமி போன்ற இயற்கை பேரிடர்களின்போது, செல்போன் கோபுரங்கள் பாதிக்கப்படுவதால் தொலைத்தொடர்பு சேவை துண்டிக்கப்படுகின்றன. இதனால், மீட்புப் பணிகளில் சிரமங்கள் ஏற்படுகின்றன. இந்த நிலையை சரிசெய்ய செயற்கைக்கோள்கள் வழியாக அழைப்பை மேற்கொள்ளும் தொழில்நுட்பத்தை சீனாவைச் சேர்ந்த ஹூவாய் நிறுவனம் உருவாக்கியுள்ளது. இது படிப்படியாக பொதுப் பயன்பாட்டுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பப்புவா நியூ கினியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. 98 கிலோமீட்டர் ஆழத்தில் கினியாவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.5ஆக பதிவாகியுள்ளது. இதனால், கட்டடங்கள் குலுங்கியதால், மக்கள் அலறியடித்துக் கொண்டு வீடுகளில் இருந்து வெளியேறி சாலையில் தஞ்சமடைந்துள்ளனர். இதன் பாதிப்பு குறித்தும், சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டதா என்பது குறித்தும் உடனடியாக எந்த தகவலும் வெளியாகவில்லை.
அதிமுக ஒருங்கிணைப்பாளர் பதவியில் இருந்ததை சுட்டிக்காட்டி, அக்கட்சியை ஓபிஎஸ் உரிமை கொண்டாடுகிறார். இந்நிலையில், தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பேசிய அண்ணாமலை, டிடிவி தினகரனிடம் அதிமுக செல்லும் என பேசினார். ஓபிஎஸ்.க்கு ஆதரவாக எதுவும் கூறவில்லை. இதை சுட்டிக்காட்டி, அதிமுக விவகாரத்தில் டிடிவி தினகரனை ஆதரிக்கவும், ஓபிஎஸ்சுக்கு குட்பை சொல்லவும் பாஜக முடிவு எடுத்து விட்டதாக மக்கள் பேசி வருகின்றனர்.
Sorry, no posts matched your criteria.