India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கோவை சூலூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பகுதியில் பிரசாரம் செய்யச் சென்ற அண்ணாமலையை அதிமுகவினர் தடுத்து நிறுத்தியதால் சலசலப்பு ஏற்பட்டது. அதிமுகவுக்கு ஒதுக்கப்பட்ட நேரத்தில் தாமதமாக வந்த அண்ணாமலை பிரசாரம் செய்ய முயற்சிப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது. அதிமுகவினர் போராட்டத்தில் குதித்ததையடுத்து போலீசார் அண்ணாமலையை திரும்பிப் போகச் செய்தனர்.
ஐபிஎல் 18ஆவது லீக் போட்டியில் ஐதராபாத் அணிக்கு 166 ரன்களை இலக்காக நிர்ணயித்தது சென்னை அணி. ராஜீவ் காந்தி மைதானத்தில் நடைபெறும் போட்டியில் டாஸ் வென்ற ஐதராபாத் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து களமிறங்கிய CSK வீரர்கள் ஷிவம் துபே 45, ரஹானே 35, ஜடேஜா 31, கெய்க்வாட் 26 ரன்கள் எடுத்தனர். SRH தரப்பில் புவனேஸ்வர், நடராஜன், கம்மின்ஸ், ஷபாஸ் அஹமத், உனத்கட் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.
60 ஆண்டுகளாக ஆட்சி செய்தும் குப்பைகளை கூட முறையாக கையாளத் தெரியாத அரசுகளாக திமுக, அதிமுக அரசுகள் இருந்ததாக தமிழிசை செளந்தரராஜன் விமர்சனம் செய்துள்ளார். சென்னையில் ஏற்படும் வெள்ளத்திற்கு தீர்வு கிடையாது, குப்பை மேடு பிரச்னைகளுக்குத் தீர்வு கிடையாது என அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்த அவர், மாற்றம் வேண்டுமா? ஏமாற்றம் வேண்டுமா? என்பதை மக்கள் தான் முடிவு செய்ய வேண்டும் எனத் தெரிவித்தார்.
கிரிக்கெட் உலகின் ஜாம்பவான் தோனி, ஐபிஎல் போட்டிகளில் பல்வேறு சாதனைகளை படைத்துள்ளார். அந்த வகையில் அவர் இதுவரை விளையாடியதில், 20 ஆவது ஓவர்களில் மட்டும் 303 பந்துகளில் 61 சிக்ஸர்களை விளாசியுள்ளார். இதன் மூலம் கடைசி ஓவரில் குறைந்த பந்துகளில் அதிக சிக்ஸர் விளாசிய பெருமைக்கு அவர் சொந்தக்காரரானார். முன்னதாக DC அணிக்கு எதிரான போட்டியில் கடைசி ஓவரில் தோனி 2 சிக்ஸர் விளாசியது குறிப்பிடத்தக்கது.
மகளிர் உரிமைத் தொகை திட்டம் பல பெண்களுக்கு வரவில்லை என்று தொடர்ந்து புகார்கள் எழுந்து வருகின்றன. அதற்கு திமுக எம்.பி. கனிமொழி முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார். தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பேசிய அவர், “பெண்கள் பயன்பெறும் விதமாக மாதம் ₹1000 வழங்கப்படுகிறது. சில பெண்களுக்கு அது கிடைக்கவில்லை. தேர்தல் முடிந்தபின் சிறப்பு முகாம்கள் அமைத்து அனைத்து பெண்களுக்கும் வழங்கப்படும்” என்று கூறினார்.
எத்தனை முறை படையெடுத்து வந்தாலும் தமிழகத்தை பாஜகவால் கைப்பற்ற முடியாது என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். விழுப்புரம் பிரசாரத்தில் பேசிய அவர், அதிமுகவை மட்டுமின்றி தமிழகத்தின் உரிமைகளையும் பாஜகவிடம் அடகு வைத்தவர் எடப்பாடி பழனிசாமி என குற்றம்சாட்டினார். மேலும், பாஜகவுடன் கள்ளக் கூட்டணி வைத்துள்ள இபிஎஸ்ஸின் நாடகம் தமிழக மக்களிடம் ஒருபோதும் எடுபடாது எனவும் அவர் கூறினார்.
ஸ்பா சென்டர்களில் ஆண்களுக்கு ஆண்களும், பெண்களுக்கு பெண்களும்தான் மசாஜ் செய்ய வேண்டும் என்று உத்தரவிடக் கோரிய மனுவை டெல்லி உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. தொழில்முறையில் மசாஜ் செய்பவர்கள் பாலின பாகுபாடு பார்க்காமல் பணியில் ஈடுபடுவதுதான் வழக்கம். ஆனால், அதனை வேறு நோக்குடன் பார்த்த மனுதாரருக்கு டெல்லி உயர்நீதிமன்றம் கண்டனத்தையும் தெரிவித்துள்ளது.
கோடை வெயில் சுட்டெரித்து வரும் சூழலில் எலுமிச்சை பழம் விலை கிலோ ₹130 வரை உயர்ந்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். கோயம்பேடு மார்க்கெட்டுக்கு நாள்தோறும் 100 டன் எலுமிச்சை பழங்கள் கொண்டுவரப்படும். தற்போது கோடை சீசனையொட்டி தேவை அதிகரித்துள்ள சூழல் எலுமிச்சை வரத்து 40 டன்னாக குறைந்துள்ளது. இதனால் மொத்த விற்பனையில் கிலோ ₹100, சில்லறையாக கிலோ ₹130க்கு விற்பனை செய்யப்படுகிறது.
தமிழக மக்களுக்கு பல முறை வேட்டு வைத்த பிரதமர் மோடிக்கு, மக்களவைத் தேர்தலில் நாம் வேட்டு வைக்க வேண்டும் என உதயநிதி தெரிவித்துள்ளார். திமுக வேட்பாளர்களை ஆதரித்து டெல்டா மாவட்டங்களில் பிரசாரம் செய்து வரும் அவர், “தமிழகம் ஒரு ரூபாய் வரி கட்டினால் 29 பைசா மட்டுமே திரும்பக் கிடைக்கிறது. அந்த 29 பைசா என்பது இன்று செல்லாக்காசு. வரும் தேர்தலுக்குப் பிறகு மோடியும் செல்லாக்காசாக மாறிவிடுவார்” எனக் கூறினார்.
Sorry, no posts matched your criteria.