India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
இந்தியா மதச்சார்பற்ற நாடு என்பதை பாஜக மறந்துவிடக் கூடாது என பொருளாதார வல்லுநர் அமர்த்தியா சென் தெரிவித்துள்ளார். பாஜக இந்து அடையாளங்களில் மட்டுமே கவனம் செலுத்துவது இந்துக்களுக்கு பயனுள்ளதாக இருக்குமே தவிர, ஒட்டுமொத்த நாட்டுக்கும் அது ஆபத்தை விளைவிக்கும் என்று விமர்சித்துள்ள அவர், இந்திய அரசியலமைப்பை மாற்ற பாஜக செய்யும் எந்த முயற்சியும் நாட்டின் வளர்ச்சிக்கும், மக்களுக்கும் உதவாது என்றார்.
நேற்றைய MI – CSKக்கு இடையிலான போட்டி இந்த ஐபிஎல்லின் மிக சிறந்த ஆட்டம் என்று சொல்லலாம். குறிப்பாக சென்னையின் வெற்றி மஹிபாய் கடைசி ஓவரில் அடித்த ஹாட்ரிக் சிக்ஸ் தான் காரணம். அதுமட்டும் நடக்கவில்லை என்றால், ரோஹித் இருந்த ஃபார்முக்கு மேட்ச் MI பக்கம் திரும்பி இருக்கும். ரோஹித்தின் சதமும் வீணாகி இருக்காது. அதேபோல், ருதுராஜ் கேப்டன் என்றாலும், பந்துவீச்சு, பில்டிங் என அனைத்தையும் தலா தான் கவனித்தார்.
தேர்தல் நடத்தை விதி அமலில் இருந்தாலும் மகளிர் உரிமைத்தொகை வழங்க எந்த தடையும் இல்லை என தேர்தல் ஆணையம் தெரிவித்த நிலையில், குடும்ப தலைவிகளின் வங்கிக் கணக்கில் ₹1000 வரவு வைக்கும் பணி தொடங்கியுள்ளது. ஒவ்வொருவருக்கு வங்கிக் கணக்கில் பணம் செலுத்தப்படுகிறது. இன்று மாலைக்குள் அனைவருக்கும் வந்துவிடும். ஆனால், மேல்முறையீடு செய்தவர்களுக்கு ₹1000 வராது. அவர்களுக்கு அடுத்த மாத தவணையில் தான் வழங்கப்படும்.
தங்க நகைகள் மீது இந்தியப் பெண்களுக்கு எப்போதும் தனி விருப்பம் உண்டு. சுப நிகழ்ச்சிகளுக்கு வித விதமான நகைகளை அணிவதை பெருமையாகவே கருதுகின்றனர். ஆனால், கடந்த சில நாள்களாக அதன் விலை உயர்வதை கண்டு அறண்டுள்ளனர். விலை உயர்வு செய்தி வரும்போதெல்லாம், இனி தங்கம் வாங்க முடியுமா என புலம்பி வருகின்றனர். எனினும், தங்கம் மீதான விருப்பம்தான் குறையுமா? என்பது தெரியவில்லை.
மக்களவை தேர்தலில் திமுக தலைமையிலான I.N.D.I.A கூட்டணிக்கு தமிழ்நாட்டின் தொழிற்சங்கங்கள் ஆதரவு தெரிவித்துள்ளன. அந்தவகையில், எல்பிஎஃப், எச்எம்எஸ், ஏஐடியூசி, சிஐடியூ, ஐஎன்டியூசி உள்ளிட்ட 12 தொழிற்சங்கங்கள் I.N.D.I.A கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்துள்ளன. அத்துடன், விவசாயிகள், தொழிலாளர்களை வஞ்சிக்கும் மோடி அரசை அகற்றி நாட்டை பாதுகாக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனர்.
பரப்புரைக்கு பயன்படுத்தப்படும் விமானங்கள் மற்றும் ஹெலிகாப்டர்களின் வாடகை விவரம் வெளியாகியுள்ளது. அதன்படி, ஒற்றை இன்ஜின் ஹெலிகாப்டர்களுக்கு ஒரு மணிநேரத்துக்கு ரூ.1.5 லட்சம் வரையிலும், இரட்டை இன்ஜின் ஹெலிகாப்டர்களுக்கு ரூ.3.5 லட்சம் வரை கட்டணமாக உள்ளது. அதைப்போல சிறிய ரக விமானங்களை பொறுத்தவரை ஒரு மணிநேர பயன்பாட்டுக்கு ரூ.4.5 லட்சம் முதல் ரூ.5.25 லட்சம் வரை கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
நீலகிரியில் தனியார் கல்லூரி மாணவர்களுடன் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி இன்று கலந்துரையாட உள்ளார். தான் போட்டியிடும் வயநாடு தொகுதியில் இன்று அவர் தேர்தல் பரப்புரை மேற்கொள்ள உள்ளார். இதனிடையே, கேரள எல்லையில் உள்ள தாளூரில் மாணவர்களை சந்தித்து கலந்துரையாடுகிறார். தொடர்ந்து, தேவாலயம் ஒன்றில் தேயிலை தோட்ட தொழிலாளர்கள், விவசாயிகளையும் அவர் சந்திக்க உள்ளார்.
ED கைதுக்கு எதிராக கெஜ்ரிவாலின் மனு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வருகிறது. மதுபான கொள்கை வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கும் கெஜ்ரிவால், தனது கைது சட்ட விரோதம் எனக்கூறி டெல்லி உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு, ஏப்ரல் 9இல் தள்ளுபடி செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து அவரின் மேல்முறையீட்டு மனுவை, உச்சநீதிமன்றம் விசாரிக்க உள்ளது. இந்த வழக்கில் மார்ச் 21இல் அவர் கைது செய்யப்பட்டார்.
சென்னையிலிருந்து முக்கிய நகரங்களுக்கான விமானக் கட்டணம் பலமடங்கு உயர்ந்துள்ளது. கோடை விடுமுறையில் பொழுது போக்குவதற்கு பலர் வெளியூர்களுக்கு செல்வதாலும், விஸ்தாரா விமான சேவை பாதிக்கப்பட்டிருப்பதாலும், டிக்கெட் விலை அதிகரித்துள்ளது. டெல்லிக்கான கட்டணம் ₹8,000 வரை அதிகரித்துள்ளது. ஸ்ரீநகர், ஜெய்ப்பூருக்கான கட்டணம் ₹10,000-ஐ தாண்டிவிட்டது. மதுரைக்கான கட்டணம் ₹5,000- ₹8,000ஆக உயர்ந்துள்ளது.
ஈரான்-இஸ்ரேல் மோதலில் அமெரிக்கா தலையிட்டால், ஈரானுக்கு ஆதரவாக போரில் ரஷ்யா களமிறங்கும் என்று புதின் எச்சரிக்கை விடுத்துள்ளார். சிரியாவில் உள்ள ஈரானிய தூதரகம் மீதான தாக்குதலுக்கு பதிலடியாக இஸ்ரேல் மீது ஈரான் தாக்குதல் நடத்தியது. இந்த விவகாரத்தில் அமெரிக்கா தலையிடக்கூடாது என்றும், அப்படி தலையிட்டால், ஈரானுக்கு ஆதரவாக போரில் ரஷ்யா குதிக்கும் என்றும் புதின் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.