India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
* பஞ்சாப் அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 28 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி.
* நாடு முழுவதும் இன்று இளநிலை மருத்துவப் படிப்பிற்கான நீட் தேர்வு நடைபெற்றது.
* இந்திய மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
* மூன்றாம் கட்ட மக்களவைத் தேர்தலுக்கான பிரசாரம் நிறைவடைந்தது.
* மறைந்த நெல்லை காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் உடல் அடக்கம் செய்யப்பட்டது.
➤எடை குறைப்புக்காக காலை உணவை தவிர்க்கக் கூடாது. ➤காலை உணவை தவிர்ப்பதால் கவனக்குறைவு ஏற்படும். ➤காலை உணவாக துரித உணவுகளை சாப்பிடக் கூடாது. ➤பழங்கள், பழச்சாறுகளை காலையில் சாப்பிடுவது சிறப்பு ➤ இனிப்பான உணவை தவிர்ப்பது நல்லது. ➤ ஆவியில் வேகவைத்த இட்லி, காலையில் பொருத்தமான உணவாக இருக்கும். ➤ அதேபோல, சிறுதானிய உணவு வகைகள், காய்கறிகள் போன்றவற்றை உணவாக எடுத்துக் கொள்ளலாம்.
சமையலில் உருளைக் கிழங்கை தொடர்ந்து சேர்த்தால் சில பாதிப்புகள் ஏற்படலாம் எனக் கூறப்படுகிறது. உருளையை சமையலில் அதிகம் சேர்த்தால் பொட்டாசியம் அதிகரித்து, சிறுநீரக பிரச்னை அதிகரிக்க வாய்ப்புள்ளது. சர்க்கரை நோயாளிகள் அதிகம் சாப்பிட்டால், ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரிக்கலாம். உடலில் வாயுத் தொல்லை, ஒவ்வாமை, கீழ்வாதம் போன்ற பிரச்னைகள் ஏற்படவும் வாய்ப்புள்ளது. அதனால், அளவோடு சேர்த்து பயனடைவோம்.
லக்னோ அணியை 98 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய கொல்கத்தா அணி அபார வெற்றிபெற்றுள்ளது. இன்றைய போட்டியில் முதலில் பேட்டிங் செய்த KKR அணி 235/6 ரன்கள் எடுத்து. பின்னர் 236 ரன்கள் இலக்கை விரட்டி ஆடிய LSG 16.1 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 137 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியடைந்தது. KKR தரப்பில் சிறப்பாக பந்து வீசிய வரும் சக்ரவர்த்தி, ரானா தலா 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.
கோடை விடுமுறையில் மக்கள் வெளியூர் செல்வதை பயன்படுத்தி, வீட்டுக்கதவை உடைத்து திருடர்கள் கைவரிசை காட்டுவது ஏப்ரல், மே மாதங்களில் அதிகரித்து வருகிறது. இதை கீழ்காணும் யோசனைகளைக் கடைபிடித்தால் தவிர்க்கலாம் * இரட்டை பூட்டு முறையை கடைபிடித்தல் * கேட்டில் உள்பக்கமாக பூட்டு போடுதல் * பூட்டு உடைக்கப்பட்டால் சத்தம் வரும் வகையில் அலாரம் * அபாய ஒலி எழுப்பும் சிசிடிவி கேமராக்கள் *நாய்கள் வளர்த்தல்
ஐபிஎல் போட்டிகளில் பஞ்சாப் அணிக்கு எதிராக 1,115 நாள்களுக்கு பிறகு, சென்னை அணி வென்றுள்ளது. 2021இல் கடைசியாக மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் பஞ்சாப் அணியை சென்னை வீழ்த்தியிருந்தது. அதன் பிறகு, 2 ஐபிஎல் தொடரில் சென்னை, பஞ்சாப் அணியை வெற்றி கொள்ளாமல் இருந்த நிலையில், இன்றைய போட்டியில் மீண்டும் வென்றுள்ளது. இந்த இடைபட்ட ஆண்டுகளில், 5 முறை பஞ்சாப் தொடர்ந்து சென்னையை வென்றது.
*மேஷம் – அமைதியாக இருக்க வேண்டும்
*ரிஷபம் – நினைத்து நிறைவேறும்
*மிதுனம் – மனதில் தெளிவு உண்டாகும்
*கடகம் – கூடுதல் சுமை ஏற்படும்
*சிம்மம் – அதிருப்தி நிலவும்
*கன்னி – சாதகமான நாள்
*துலாம் – கவனம் தேவை
*விருச்சிகம் – முக்கிய முடிவுகளை தவிர்க்கவும்
*தனுசு – நிதானமாக செயல்படவும்
*மகரம் – லாபகரமான நாள் *கும்பம் – வாய்ப்புகளை இழக்க நேரிடும் *மீனம் – தடைகள் உண்டாகும்
இளையராஜா பணத்தின் மீது அளவுக்கு அதிகமாக ஆசைப்படுகிறார் என தயாரிப்பாளர் கே.ராஜன் விமர்சித்துள்ளார். படத்தை தயாரிக்கும் தயாரிப்பாளருக்கு தான் பாட்டும் இசையும் சொந்தம் என்ற அவர், வீடு கட்டும் கொத்தனாருக்கு வீடு சொந்தமாகாது என்றார். தன் பாடலை வணிக நோக்கத்தோடு யாரும் பயன்படுத்த கூடாது என இளையராஜா நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளதால், திரைத்துறையில் பலரும் அவரை விமர்சித்து வருகிறார்கள்.
*தினமும் ஒரே நேரத்தில் படுக்கைக்கு செல்லுங்கள். படுக்கையறையில் அதிக வெளிச்சம் வேண்டாம். *படுக்கையறையில் மொபைல், லேப்டாப் பயன்படுத்துவதை தவிருங்கள் *தூங்கும் முன்பு மனதை குழப்பும் விஷயங்களை தவிர்க்க வேண்டும். ஜர்னல், டைரி எழுதும் பழக்கம் மனதை லேசாக்கும் *உறங்கும் முன் லேசான அசைவுகள் கொண்ட யோகா, தியானம், ஆழமாக சுவாசித்தல் போன்ற பயிற்சிகள் செய்யலாம்.*மெல்லிய இசை கொண்ட பாடல்களை கேட்கலாம்
மோடியின் துணிச்சலான முடிவால்தான் இந்தியாவில் பெட்ரோல் விலை உயரவில்லை என்று வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்கக் கூடாதென
இந்தியாவுக்கு நிர்பந்தம் தரப்பட்டதாகவும், ஆனால் இதை மோடி கண்டுகொள்ளவில்லை என்றும் அவர் தெரிவித்தார். நிர்பந்தத்துக்கு கட்டுப்பட்டு இருந்தால், பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.20 உயர்ந்திருக்கும் என்றும் அவர் கூறினார்.
Sorry, no posts matched your criteria.