News April 15, 2024

சீமானுக்கு அது இருக்கு, கமலுக்கு இல்லையே

image

நாம் தமிழர் கட்சியை சீமான் தொடங்கி 14 ஆண்டுகள் ஆகி விட்டன. சட்டப்பேரவை, மக்களவைத் தேர்தல்களில் தோல்விகளை சந்தித்தும் தில்லாக போட்டியிடுகிறது. கமலின் மநீம தொடங்கப்பட்டு 6 ஆண்டுகள் மட்டுமே ஆகின்றன. இந்த மக்களவைத் தேர்தலில் அக்கட்சி போட்டியிடவில்லை. இதை கண்ட அரசியல் ஆர்வலர்கள், சீமான் தில்லாக போட்டியிடுகிறார், ஆனால் தில் இல்லாமல் கமல் பின்வாங்கி விட்டாரே என பேசுகின்றனர்.

News April 15, 2024

வாயை திறந்தால் பொய் மட்டுமே பேசுகிறார்

image

பொய் சொல்வதில் போட்டி வைத்தால் பிரதமர் மோடி முதலிடம் பிடிப்பார் என நடிகர் கருணாஸ் தெரிவித்துள்ளார். திண்டுக்கல் சிபிஎம் வேட்பாளரை ஆதரித்து அவர் பரப்புரை மேற்கொண்டார். அப்போது, பாஜக ஆட்சிக்கு வந்தால் இந்தியா சர்வ நாசமாக போய்விடும். பாஜக ஆட்சி மக்களுக்கானது அல்ல, அதானி அம்பானிகளுக்கானது என்ற அவர், பொய் சொல்வதில் இந்திய அளவில் மோடியும், தமிழக அளவில் அண்ணாமலையும் முதலிடம் பெறுவார்கள் என்றார்.

News April 15, 2024

கேரளாவில் பிரதமர் மோடி, ராகுல் பரப்புரை

image

கேரளாவின் திருச்சூரில் பிரதமர் மோடியும், வயநாட்டில் காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தியும் ஒரே நேரத்தில் பரப்புரையில் ஈடுபட்டுள்ளனர். திருச்சூரில் நடக்கும் பொதுக்கூட்டத்தில் மோடி ஆதரவு திரட்டுகிறார். வயநாடு தொகுதியில் ராகுல் ரோடு ஷோ சென்று வாக்கு சேகரிக்கிறார். தமிழகத்தில் இன்று காலை ராகுல் பரப்புரையை முடித்து சென்ற நிலையில், மோடி கேரளாவில் பிரசாரத்தை முடித்துவிட்டு மாலையில் தமிழகம் வருகிறார்.

News April 15, 2024

மைதானத்தில் நடிகனாக மாறுகிறார் ஹர்திக் பாண்டியா

image

ஹர்திக் பாண்டியா களத்தில் அதிகம் நடிப்பதாக கெவின் பீட்டர்சன் தெரிவித்துள்ளார். மும்பை அணி ரசிகர்களின் கோபம் பாண்டியாவை அதிகம் பாதித்துள்ளது. அதனால் தான் டாஸ் போடும் போது கூட அதிகம் சிரித்து மகிழ்ச்சியாக இருப்பதை போல் காட்டிக்கொள்கிறார். இந்த நிலையில் நானும் சில காலம் இருந்துள்ளேன். கிரிக்கெட்டில் சரியான முடிவுகளை எடுக்காத போது இத்தகைய சிக்கல் எழுவது சாதாரணமான ஒன்றுதான் என்றும் அவர் கூறியுள்ளார்.

News April 15, 2024

இறுதியில் தோல்வி மட்டுமே பாஜகவுக்கு கிடைக்கும்

image

மோடி எத்தனை முறை தமிழகம் வந்தாலும் பாஜக வெற்றி பெறாது என வைகோ தெரிவித்துள்ளார். வெள்ளம் வந்த போது எட்டிப் பார்க்காத பிரதமர் தேர்தல் வந்ததும் 9 முறை தமிழகம் வந்துள்ளதாக விமர்சித்துள்ள அவர், எத்தனை முறை யார் வந்தாலும் தேர்தல் களத்தில் பாஜகவுக்கு தோல்வி மட்டுமே கிடைக்கும் என்றார். முன்னதாக மறைந்த மதிமுக எம்.பி கணேச மூர்த்தி இல்லத்திற்கு சென்ற வைகோ அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார்.

News April 15, 2024

வரலாறு காணாத அளவில் நகை, பணம் பறிமுதல்

image

மக்களவைத் தேர்தலையொட்டி வரலாறு காணாத அளவில் நாடு முழுவதும் ₹4,650 கோடிக்கு நகை, பணம், போதைப்பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கடந்த 2019ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் நாடு முழுவதுமே ₹3,745 கோடி அளவுக்கு நகை, பணம் பறிமுதல் செய்யப்பட்டிருந்தது. ஆனால், இந்தமுறை முதற்கட்ட தேர்தல் தொடங்குவதற்கு முன்பே, முன்பை விட கூடுதலாக ₹905 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதில் தமிழகத்தில் மட்டும் ₹450 கோடி.

News April 15, 2024

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி டெல்லி பயணம்

image

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி டெல்லி புறப்பட்டு சென்றார். தமிழகத்தில் தேர்தல் பரப்புரை உச்சகட்டத்தில் உள்ள நிலையில், ஆளுநரின் பயணம் முக்கியத்துவம் பெற்றுள்ளது. மாதந்தோறும் டெல்லி சென்று தமிழக அரசியல் நிலவரம் குறித்து உள்துறை அமைச்சகத்திடம் அவர் தகவல்களை பகிர்ந்து வருகிறார். அந்த வகையில் தற்போது அவர் டெல்லி சென்றுள்ளதாக கூறப்படுகிறது. மேலும், வரும் 17ஆம் தேதி மாலை அவர் சென்னை திரும்ப உள்ளார்.

News April 15, 2024

சந்திர சூட்டுக்கு 21 முன்னாள் நீதிபதிகள் கடிதம்

image

குறுகிய அரசியல் நலனுக்காக தவறான தகவல்களை வெளியிட்டு நீதித்துறையை சிறுமைப்படுத்தும் முயற்சியில் சில சக்திகள் ஈடுபட்டிருப்பதாக, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திர சூட்டுக்கு 21 முன்னாள் நீதிபதிகள் கடிதம் எழுதியுள்ளனர். அண்மையில் இதே குற்றச்சாட்டுடன் 600 வழக்கறிஞர்கள் கடிதம் எழுதியிருந்தனர். இதையடுத்து 4 உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதிகள், 17 உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதிகள் கடிதம் எழுதியுள்ளனர்.

News April 15, 2024

அதிரடியாக சதம் அடித்தும் கொண்டாடாத ரோஹித்

image

சிஎஸ்கேக்கு எதிராக சதம் அடித்தும் ரோஹித் கொண்டாடாமல் இருந்ததாக ஆஸி. முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் பிரட் லீ புகழ்ந்துள்ளார். 63 பந்துகளில் 105 ரன்களுடன் ரோஹித் அவுட் ஆகாமல் இருந்தார். இதுகுறித்து பேட்டியளித்த பிரட் லீ, முதல் பந்தில் இருந்தே வெற்றி என்ற லட்சியத்துடன் ரோஹித் விளையாடியதாகவும், இதனால் சதம் அடித்தபிறகு பேட்டை உயர்த்தி மகிழ்ச்சியை வெளிப்படுத்தவில்லை என்றும் பாராட்டினார்.

News April 15, 2024

தவறாக வழிநடத்தப் பார்க்கிறார் மோடி

image

நாட்டின் பன்முகத்தன்மையை பிரதமர் மோடி புரிந்துகொள்ளவில்லை என காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார். நீலகிரியில் பரப்புரை மேற்கொண்ட அவர், ஜனநாயகத்தை காக்க பெரும் போராட்டத்தை நடத்திக் கொண்டிருப்பதாக தெரிவித்தார். மேலும், ஒரு நாடு, ஒரு தலைவர் என மோடி தவறாக வழிநடத்தப் பார்ப்பதாக கூறிய அவர், பாஜகவின் தேர்தல் அறிக்கையில் ஏழை மக்களுக்கு எந்த திட்டமும் இல்லை என்றும் சாடினார்.

error: Content is protected !!