India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
விக்கிரவாண்டி திமுக எம்.எல்.ஏ. புகழேந்தி உடல்நலக்குறைவால் விழுப்புரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தேர்தல் பரப்புரை மேற்கொண்ட முதல்வர் ஸ்டாலினுடன் இருந்த போது புகழேந்தி திடீரென்று மயங்கி விழுந்தார். உயர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், கவலைக்கிடமாக இருப்பதாக சற்றுமுன் தகவல் வெளியாகியுள்ளது.
கச்சத்தீவு விவகாரத்தில் திமுக உண்மையை மறைத்து நாடகமாடுவதாக நடிகை குஷ்பு குற்றம் சாட்டியுள்ளார். வேலூர் தொகுதியில் பரப்புரையில் ஈடுபட்ட அவர், கச்சத்தீவை காங்கிரஸ், திமுகவினர் சேர்ந்துதான் இலங்கைக்கு கொடுத்துள்ளனர் என்றும், தற்போது தேர்தலுக்காக உண்மையை மறைத்து, நாடகமாடுவதாகவும் சாடினார். மேலும், நாட்டில் நீட் தேர்வு கொண்டு வரப்பட்டதே காங்கிரஸ், திமுக கூட்டணி ஆட்சியில்தான் என்றும் அவர் கூறினார்.
மனித உரிமை காக்கும் கட்சியின் தலைவரும், பிரபல நடிகருமான கார்த்திக், அதிமுக கூட்டணிக்கு ஆதரவு அளித்துள்ளார். அதனைத் தொடர்ந்து, அதிமுக மற்றும் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து ஏப்.9 முதல் 16ஆம் தேதி வரை மதுரை, திண்டுக்கல், தேனி, சிவகங்கை, நெல்லை உள்ளிட்ட மாவட்டங்களில் அவர், பரப்புரை மேற்கொள்கிறார். தென் தமிழகத்தில் முக்குலத்தோர் சமூக மக்கள் மத்தியில் அவருக்கு தனிச் செல்வாக்கு உள்ளது குறிப்பிடத்தக்கது.
அமெரிக்காவில் மேலும் ஒரு இந்திய மாணவர் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார். அமெரிக்காவில் கடந்த ஜனவரி மாதம் முதல் இந்திய மாணவர்கள் சிலர் அடுத்தடுத்து மர்மமான முறையில் உயிரிழந்தனர். இதனால் ஏற்பட்டுள்ள பரபரப்பு அடங்குவதற்குள் கிளீவ்லாந்தில் படித்து வந்த உமா சத்ய சாய் கட்டே என்பவர் மர்மமான முறையில் இறந்துள்ளார். அவரது மரணத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
பெங்களூரு தெற்கு மக்களவைத் தொகுதி எம்.பியும், பாஜக வேட்பாளருமான தேஜஸ்வி சூர்யாவின் சொத்து மதிப்பு ₹4.10 கோடி எனத் தேர்தல் பிரமாணப் பத்திரத்தில் கூறப்பட்டுள்ளது. 2019 தேர்தலில் அவர் அறிவித்த சொத்து மதிப்பு ₹13.46 லட்சமாக இருந்த நிலையில், 5 ஆண்டுகளில் அவை 31.5 மடங்கு உயர்ந்துள்ளது. மேலும், பெங்களூருவில் அவர் மீது 2 வழக்குகளும், டெல்லியில் ஒரு வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்தியா தனது அண்டை நாடுகள் மீது தாக்குதல் நடத்தவோ, ஆக்கிரமிக்கவோ செய்யாது என்று பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். அவர் அளித்துள்ள பேட்டியில், அண்டை நாடுகள் தொடர்பாக இந்தியா ஆரம்பம் முதல் ஒரே கொள்கையை கடைபிடித்து வருவதாகவும், அதில் எந்த மாற்றமும் இல்லை என்றும் கூறினார். அதேநேரத்தில் இந்தியா தனக்கு எதிரான செயல்களை அமைதியாக வேடிக்கை பார்க்காது என்றும் அவர் தெரிவித்தார்.
சம வேலைக்கு சம ஊதியம் கேட்டு பிப்.19, 2024 முதல் மார்ச் 8, 2024 வரை அரசுக்கு எதிராக போராட்டம் நடத்திய ஆசிரியர்களின் சம்பளத்தை பிடித்தம் செய்ய பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. போராட்டத்தில் கலந்துகொண்ட நாள்களை சம்பளமில்லா விடுப்பாக அனுமதித்து பணிப்பதிவேட்டில் பதிவு செய்யவும், 19 நாள்களுக்கு உரிய ஊதியம், பிற படிகளை ஒரே தவணையில் பிடித்தம் செய்யவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்திய கிரிக்கெட் வரலாற்றில் முன்னாள் தொடக்க வீரரான வீரேந்திர சேவாக் தனி இடத்தை பிடித்திருந்தார். அவரது ஓய்வுக்குப் பின், சேவாக் போன்ற ஒரு துணிச்சலான தொடக்க ஆட்டக்காரரை அணியால் உருவாக்க முடியவில்லை. ஆனால் SRH பேட்ஸ்மேன் அபிஷேக் ஷர்மா அந்த பற்றாக்குறையை ஈடுசெய்வார் என்று நம்பப்படுகிறது. இந்த சீசனில் அவர் விளையாடிய 4 போட்டிகளில், 32 ரன்கள் (19 பந்துகளில்), 63(23), 29(20), 37(12) என அசத்தியுள்ளார்.
2024ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் ஏராளமான திரை நட்சத்திரங்கள் வேட்பாளர்களாக களம் காண்கின்றனர். தமிழ்நாட்டில் பிரபல நடிகையும், நடிகர் சரத்குமாரின் மனைவியுமான ராதிகா சரத்குமார் விருதுநகர் தொகுதியில் பாஜக வேட்பாளராக போட்டியிடுகிறார். பெரிய திரையிலும், சின்னத் திரையிலும் வெற்றிகரமாக வலம் வந்த ராதிகா, தனது வெற்றிக்காக விருதுநகர் தொகுதியில் சரத்குமாருடன் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளார்.
இந்திய ஜனநாயக புலிகள் கட்சித் தலைவரும், நடிகருமான மன்சூர் அலிகான், வேலூர் தொகுதியில் அதிமுக கூட்டணி சார்பில் போட்டியிடுகிறார். திரைப்படங்களில் வில்லன், கதாநாயகன், குணச்சித்திர நடிகர் என பல வேடங்களில் அசத்திய மன்சூர் அலிகான், தற்போது வேலூர் தொகுதியில் வாக்குசேகரித்து வருகிறார். மீன் கடைகளுக்கு சென்று மீன்களை வெட்டி கொடுத்தல் உள்ளிட்ட நூதன வழிகளில் அவர் வாக்கு கேட்டு வருகிறார்.
Sorry, no posts matched your criteria.