India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
இந்திய ராணுவத்தின் பாதுகாப்பு குறைபாடே பஹல்காம் தாக்குதலுக்கு காரணம் என்ற அஃப்ரிடிக்கு ஷிகர் தவான் பதிலடி கொடுத்துள்ளார். தங்களுடைய ராணுவத்தை நினைத்து பெருமை கொள்வதாகவும், ஏற்கனவே கார்கில் போரில் உங்களை தோற்கடித்தாகிவிட்டது, இன்னும் எவ்வளவுதான் கீழே செல்வீர்கள் எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், மற்ற நாடுகள் குறித்து பேசாமல் சொந்த நாட்டு வளர்ச்சிக்கு பாடுபடவும் அறிவுறுத்தியுள்ளார்.
அட்சய திருதியை அன்று தங்கம் வாங்கினால் நன்மை என்று நமக்கு தெரியும். ஆனால், எந்த நேரத்தில் வாங்க வேண்டும் என்பது தெரியுமா? நாளை (29.04.2025) மாலை 5.31 மணி முதல் 30.04.2025 மதியம் 2.12 மணி வரை அட்சய திருதியை நடைபெறவுள்ளது. அதில், புதன்கிழமை (30.04.2025) அதிகாலை 5.41 மணி முதல் மதியம் 12.18 மணி வரை சுப முகூர்த்தமாகும். அப்போது தங்கம் வாங்கினால், வாழ்வில் இன்பம் பெருகும்.
இந்தியா – பாக். இடையிலான பதற்றம் விரைவில் தணியும் என்று நம்புவதாக துருக்கி அதிபர் எர்டோகன் தெரிவித்துள்ளார். இருப்பினும், பாக். மக்களுக்கு வலுவான ஆதரவை வழங்குவதாகவும் அவர் கூறியுள்ளார். துருக்கியின் ராணுவ சரக்குகளை ஏற்றிச் செல்லும் விமானங்கள், பாக்.-ல் தரையிறங்கியதாக தகவல் வெளியான நிலையில், அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இருப்பினும், எவ்வித ஆயுதங்களையும் அனுப்பவில்லை என துருக்கி மறுத்துள்ளது.
புதிய சேட்டாக் 3503 EV ஸ்கூட்டர் வேரியன்டை பஜாஜ் நிறுவனம் இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. மற்ற 35 சீரிஸின் விலையைக் காட்டிலும் சற்று குறைவாக, ₹1.10 லட்சத்திற்கு விற்பனைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. அதற்கேற்றாற் போல், குறைவான வசதிகளையே கொண்டுள்ளது. மணிக்கு 63 கி.மீ அதிகபட்ச வேகத்தில் செல்லும். மற்ற 3501, 3502 வேரியன்ட்களை காட்டிலும், 0 – 80% வரை சார்ஜ் ஏற 3.25 மணி நேரம் எடுத்துக் கொள்ளும்.
IPL-ல் அதிவேக சதமடித்த இந்திய வீரர் என்ற தன்னுடைய சாதனையை முறியடித்த சூர்யவன்ஷியை, யூசுஃப் பதான் பாராட்டியுள்ளார். இளம் வீரர்களுக்கும் RR-க்கும் பிரிக்க முடியாத ஒரு பந்தம் உள்ளதாகவும், சாம்பியன் சூர்யவன்ஷி இன்னும் செல்ல வேண்டிய தூரம் நிறைய இருப்பதாகவும் அவர் புகழ்ந்துள்ளார். 2010-ல் RR-க்காக விளையாடிய யூசுஃப் 37 பந்துகளில் சதமடித்த நிலையில், வைபவ் தற்போது 35 பந்துகளில் சதமடித்துள்ளார்.
*பொறுமையும் நேரமுமே மிகவும் சக்தி வாய்ந்த வீரர்களுக்கு இணையானது. *வாழ்க்கையில் முழு திருப்தியை எதிர்பார்க்கின்றீர்களா? உங்களால் ஒருபோதும் மனநிறைவுடன் இருக்க முடியாது. *வாழ்வில் ஏற்படும் சிறு சிறு மாற்றங்களே, வாழ்க்கையை உண்மையாக வாழ வைக்கின்றன. *எங்கு எளிமை, நேர்மை மற்றும் உண்மை இல்லையோ, அங்கு உயர்வும் மேன்மையும் இல்லை. *நமக்கு எதுவும் தெரியாது என்பதை உணர்வதே உண்மையான ஞானம்.
உ.பி.யில் இந்திராவதி (50) என்ற பெண்மணி, தனது கணவன், 4 குழந்தைகளை கைவிட்டு பேரன் ஆசாத்துடன் (30) ஓடிப்போய் திருமணம் செய்த ஷாக் சம்பவம் நிகழ்ந்துள்ளது. கணவர் புகார் அளித்த நிலையில், இருவரும் வயதுக்கு வந்தவர்கள் என்பதால் இணையை தேர்ந்தெடுப்பதற்கு உரிமை இருப்பதாக கூறி, போலீசார் புகாரை ஏற்க மறுத்துவிட்டனர். காதலுக்கு கண் இல்லை என்பார்கள், அதற்காக இப்படியுமா.
பஹல்காம் தாக்குதலுக்கு பிறகு எந்த முகத்தை வைத்துக் கொண்டு மாநில அந்தஸ்து கேட்பது என J&K முதல்வர் உமர் அப்துல்லா கேள்வி எழுப்பியுள்ளார். மாநில சட்டப்பேரவையில் பேசிய அவர், 26 அப்பாவி உயிர்கள் பறிபோன நேரத்தில் மாநில அந்தஸ்து கேட்பது வெட்கக்கேடானது எனவும் தெரிவித்துள்ளார். மேலும், வருங்காலத்தில் இது பற்றி விவாதிக்கலாம், ஆனால் இந்த தருணத்தில் அதுபற்றி பேசக்கூடாது எனவும் கூறியுள்ளார்.
இஸ்ரேல் தாக்குதலில் கொல்லப்பட்ட 52,243 பாலஸ்தீனியர்களில் 65% பேர் குழந்தைகள், பெண்கள் மற்றும் முதியவர்கள் என அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. 18,000 குழந்தைகள், 12,400 பெண்கள் கொல்லப்பட்டுள்ளதாகவும், 2,180 குடும்பங்களை மொத்தமாக அழித்ததாகவும் கூறியுள்ளது. மேலும், 1,400 டாக்டர்கள், 212 செய்தியாளர்கள் கொல்லப்பட்டுள்ளனர். இத்தனை பேர் உயிரிழந்தும் இன்னும் போர் ஓய்ந்தபாடில்லை.
▶குறள் பால்: அறத்துப்பால் ▶குறள் இயல்: துறவறவியல் ▶அதிகாரம்: கொல்லாமை ▶குறள் எண்: 321 ▶குறள்: அறவினை யாதெனின் கொல்லாமை கோறல் பிறவினை எல்லாந் தரும். ▶பொருள்: எந்த உயிரையும் கொல்லாதிருப்பதே அறச்செயலாகும். கொலை செய்தல் தீயவினைகள் அனைத்தையும் விளைவிக்கும்.
Sorry, no posts matched your criteria.