India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கச்சத்தீவு விவகாரத்தில் பாஜக சரித்திரத்தை மாற்றிப் பேசுவதாக மநீம தலைவர் கமல்ஹாசன் விமர்சனம் செய்திருந்தார். இதற்கு பதிலளித்த பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன், ‘சரித்திரத்தில் நடந்த உண்மையை நாங்கள் பேசுகிறோம். பிசியாக சினிமாவில் நடித்துக்கொண்டிருக்கும் கமல், ஷூட்டிங்கிற்கு இடையே வந்து பேசினால் இப்படித்தான் இருக்கும். சரித்திரத்தை ஒழுங்காக படித்துவிட்டு வந்து அவரை பேசச் சொல்லுங்கள்’ எனக் கூறியுள்ளார்.
அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் கோரிக்கைகள் கண்டிப்பாக நிறைவேற்றப்படும் என முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார். அதிமுக ஆட்சியில் எதுவும் செய்யவில்லை எனக் குற்றம்சாட்டிய அவர், திமுக ஆட்சிதான் அவர்களுக்கு பொற்கால ஆட்சி எனக் கூறினார். மேலும், மத்தியில் INDIA கூட்டணி ஆட்சி அமைந்ததும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் முன்வைத்துள்ள கோரிக்கைகள் அனைத்தும் உறுதியாக நிறைவேற்றித் தரப்படும் என திட்டவட்டமாக தெரிவித்தார்.
ரோகித் ஷர்மா போன்ற ஒரு ஹிட்மேன், கேப்டன் பதவி இல்லாமல் இருக்கும்போது நிச்சயம் அதிரடியாக விளையாடத்தான் முயற்சி செய்வார் என்று முன்னாள் வீரர் ஸ்ரீசாந்த் கருத்து தெரிவித்துள்ளார். ஊடகமொன்றுக்கு அளித்த பேட்டியில், “இந்த சீசனில் ஒரேயொரு போட்டியில், அவரது ஆட்டம் சூடு பிடித்தால் போதும், அதன் பிறகு நடப்பவை வேறு மாதிரி இருக்கும். விரைவில் ரோஹித் சர்மாவின் அதிரடியை காண காத்திருங்கள்” எனக் கூறினார்.
உலகிலேயே மிக ஆரோக்கியமான மரபு உணவு என்று கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தால் அங்கீகரிக்கப்பட்ட பெருமையைக் கொண்டது நுங்கு. தமிழர்கள் காலங்காலமாக உண்டுவரும் நுங்கை
இளநீரோடு பானமாக பருகுவதால், வெயில் காலத்தில் ஏற்படும் ரத்த அழுத்தம், மயக்கம், முடக்குவாதம், குடல் சார்ந்த பல நோய் பாதிப்புகள் குறையுமென ஆய்வுகள் கூறுகின்றன. அத்துடன் உடலுக்கு தேவையான B12, B6 போன்ற ஊட்டச்சத்துகளும் இதில் இருக்கிறதாம்.
மறைந்த விக்கிரவாண்டி தொகுதி திமுக எம்.எல்.ஏ புகழேந்தியின் உடல் நாளை மாலை நல்லடக்கம் செய்யப்பட உள்ளது. பொதுமக்கள் அஞ்சலி செலுத்துவதற்காக விழுப்புரத்தில் உள்ள கலைஞர் அறிவாலயத்தில் இன்று மாலை 4 மணி வரை புகழேந்தியின் உடல் வைக்கப்படுகிறது. தொடர்ந்து, நாளை மாலை 4 மணிக்கு அவரது சொந்த ஊரான அத்தியூரில் நல்லடக்கம் செய்யப்பட உள்ளதாக அவரது குடும்பத்தினர் தகவல் தெரிவித்துள்ளனர்.
பாஜக ஆட்சி இனியும் தொடர்ந்தால் இடஒதுக்கீடு நடைமுறைகள் பறிபோகும் என திமுக தெரிவித்துள்ளது. அரசுத் துறைகளில் தற்போது பெண்கள் அதிக அளவில் பணிபுரிந்து வருவதாக குறிப்பிட்டுள்ள திமுக, மீண்டும் பாஜக ஆட்சி அமைந்தால் பெண்கள் முன்னேற்றம் கேள்விக்குறியாகி விடும் எனக் கூறியுள்ளது. மேலும், அதுபோன்ற ஒரு நிலை ஏற்படாமல் இருக்க பெண்கள் அனைவரும் சிந்தித்து செயல்பட வேண்டும் எனவும் திமுக கோரிக்கை விடுத்துள்ளது.
தெலங்கானா-சத்தீஸ்கர் எல்லையையொட்டிய புஜாரி கங்கர் வனப்பகுதியில், பாதுகாப்பு படையினர் நடத்திய என்கவுண்ட்டரில் 3 நக்சலைட்டுகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். மேலும், அந்தப் பகுதியில் ஆயுதங்களை மீட்டுள்ளதாகவும், தொடர்ந்து தேடுதல் வேட்டை நடந்து வருவதாகவும் மத்திய ரிசர்வ் போலீசார் தெரிவித்துள்ளனர். கடந்த ஒருவாரத்தில் 6க்கும் மேற்பட்ட நக்சலைட்டுகள் போலீஸ் என்கவுண்ட்டரில் உயிரிழந்திருப்பது குறிப்பிடத்தக்கது.
வெப்ப அலை காலத்தில், குறிப்பாக மதியம் 12 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை முடிந்தவரை வெளியில் செல்வதை தவிர்க்க வேண்டும். மதுபானங்கள், காபி, தேநீர் , கார்பனேற்றப்பட்ட குளிர்பானங்களை தவிர்க்க வேண்டும். நண்பகலில் சமைப்பதை தவிர்க்க வேண்டும். அதிக புரதம், உப்பு, காரமான, எண்ணெயில் பொறித்த உணவுகளை தவிர்ப்பது நல்லது. வெப்பத்தை உருவாக்கக்கூடிய ஒளிரும் ஒளி விளக்குகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கலாம்.
மகாலட்சுமி திட்டம் என்ற பெயரில் ஏழைப் பெண்களுக்கு ஆண்டுக்கு ரூ.1 லட்சம் வழங்கப்படும் என காங்கிரஸ் தேர்தல் வாக்குறுதி அளித்துள்ளது. இந்நிலையில் இத்திட்டம் சாத்தியமில்லாதது என்ற கருத்து எழுந்துள்ளது. அதேநேரம், தமிழ்நாட்டில் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் ரூ.1,000, கர்நாடகாவில் கிரகலட்சுமி என்ற திட்டத்தில் ரூ.2,000 வழங்குவதை சுட்டிக்காட்டும் அரசியல் விமர்சகர்கள், இத்திட்டம் சாத்தியமே என்கின்றனர்.
4 முதல் 8ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஏப்ரல் 12ஆம் தேதி வரை சிறப்பு வகுப்புகள் நடத்த பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. 4-8ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஏப்.10, 12-இல் நடைபெற இருந்த முழு ஆண்டுத் தேர்வுகள், ரம்ஜான் பண்டிகை காரணமாக ஏப்.22, 23க்கு ஒத்திவைக்கப்பட்டன. இதனால், தேர்வுக்கு ஆயத்தப்படுத்தும் வகையில் ஏப்ரல் 12 வரை மாணவர்களுக்கு பாடம் நடத்துமாறு பள்ளிக் கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.
Sorry, no posts matched your criteria.