India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
பாலிவுட் நடிகை ஜான்வி கபூர், ராஜ்குமார் ராவ் நடித்துள்ள புதிய படம் ‘மிஸ்டர் அண்ட் மிஸஸ் மஹி’. தோனியின் பெயரை கொண்டு உருவாகியுள்ள இப்படம் மே 31இல் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜான்வி கபூர், ராஜ்குமார் ராவ் இருவரும் 7ஆம் நம்பர் கொண்ட இந்திய கிரிக்கெட் அணியின் ஜெர்சியில் இருக்கும் படத்தை படக்குழு பகிர்ந்துள்ளது. இப்படத்திற்கும், தோனிக்கும் சம்பந்தம் இருக்கிறதா என பொறுத்திருந்து பார்க்கலாம்.
பாஜக ஆட்சி தொடர்ந்தால் உலக தரம் வாய்ந்த உள்கட்டமைப்பின் மையமாக இந்தியா மாறும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். கேரளாவின் திருவனந்தபுரத்தில் பிரசாரம் செய்த அவர், பாஜகவின் தேர்தல் அறிக்கையை விவரித்தார். பாஜகவின் ஆட்சி தொடர்ந்தால் விண்வெளித் துறையில் இந்தியா பல்வேறு சாதனைகளை நிகழ்த்தும். விவசாயிகளின் வங்கிக் கணக்கில் கிசான் நிதி தொடர்ந்து வரும். முதியவர்கள் இலவச சிகிச்சை பெறலாம் என்றார்.
ஒவ்வொரு வகையான உணவும் செரிமானத்திற்கு குறிப்பிட்ட கால அளவை எடுத்துக் கொள்ளும். உணவியல் நிபுணர்களின் கருத்துப்படி, பழச்சாறு – 15 நிமிடங்கள், மீன்கள், நீர் சத்து மிகுந்த பழங்கள், காய்கறிகள் – 30 நிமிடங்கள், நீர் சத்து குறைந்த பழங்கள், காய்கறிகள் – 40 நிமிடங்கள், தானியங்கள் – 90 நிமிடங்கள், பருப்பு வகைகள் – 2 முதல் 3 மணி நேரம், இறைச்சி – 3 முதல் 4 மணி நேரம் வரை செரிமானத்திற்கு எடுத்துக் கொள்ளும்.
நாட்டின் சுதந்திரத்தை பாதுகாக்க பாஜக அரசை ஆட்சியில் இருந்து அகற்ற வேண்டுமென மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். மேற்கு வங்கத்தில் பிரசாரம் செய்த அவர், பாஜக மீண்டும் ஆட்சி அமைத்தால் எதிர்காலத்தில் இந்தியாவில் தேர்தலே நடக்காது என்றார். பாஜக அரசு ஒரு எதேச்சதிகார அரசு. ஒரே நாடு, ஒரே தேர்தல், ஒரே மொழி, ஒரே உணவு என்பதுதான் அவர்களது கொள்கை என்றார்.
நாக் அஸ்வின் இயக்கி பிரபாஸ் நடிப்பில் தயாராகி வரும் திரைப்படம் ‘கல்கி 2898 ஏடி’. அமிதாப் பச்சன், கமல்ஹாசன், ராணா, துல்கர் சல்மான் என நட்சத்திர பட்டாளங்கள் நடித்து வரும் இப்படம் ஜூன் 4ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், VFX பணிகள் நிறைவடையாததால் ஜூன் 20ஆம் தேதிக்கு ரிலீஸை தள்ளிவைக்க படக்குழு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால், பிரபாஸ் ரசிகர்கள் வருத்தமடைந்துள்ளனர்.
அமைச்சர் பொன்முடி மீதான செம்மண் குவாரி வழக்கில் மேலும் ஒருவர் பிறழ்சாட்சியம் அளித்திருக்கிறார். ஓய்வுபெற்ற கிராம நிர்வாக அலுவலர் சின்னசாமி இன்று விழுப்புரம் நீதிமன்றத்தில் ஆஜராகி பிறழ்சாட்சியம் அளித்தார். டிஜிபி அலுவலகத்தில் வைத்து தன்னிடம் கையெழுத்து பெறப்பட்டதாகவும், வழக்கு குறித்து தனக்கு எதுவும் தெரியாது என்றும் சின்னசாமி தெரிவித்துள்ளார். இதனால் வழக்கு, பொன்முடிக்கு சாதகமாக மாறுகிறது.
பசிபிக் பெருங்கடலின் மேற்பரப்பு வெப்பநிலை பொதுவாக 26 முதல் 27 டிகிரி செல்சியஸ் வரை இருக்கும். பசிபிக் பெருங்கடலில் கடலின் மேற்பரப்பு வெப்பநிலை இயல்பை விட அதிகரிப்பது ‘எல் நினோ’ என்று அழைக்கப்படுகிறது. இதனால் இயல்பை விட மழைப்பொழிவு குறையும். இதற்கு நேர்மாறாக, பசிபிக் பெருங்கடலின் மேற்பரப்பு வெப்பநிலை இயல்பை விட குறைவது ‘லா நினா’ என அழைக்கப்படுகிறது. இதனால் இயல்பை விட மழைப்பொழிவு அதிகமாக இருக்கும்.
ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து இந்தியாவுக்கு வந்துக் கொண்டிருந்த சரக்கு கப்பலை ஈரான் இஸ்லாமிய புரட்சி படையினர் சிறை பிடித்துள்ளனர். அதில் இந்தியாவைச் சேர்ந்த 17 மாலுமிகள் உள்பட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 25 மாலுமிகள் சிக்கியுள்ளனர். இந்நிலையில் ஈரான் அதிகாரிகளுடன் இந்திய வெளியுறவுத் துறை தொடர்பு கொண்டு பேசியது. இதன் விளைவாக இந்திய மாலுமிகளை இந்திய அதிகாரிகள் சந்திக்க ஈரான் அனுமதி அளித்துள்ளது.
ஜனவரி முதல் மார்ச் வரையிலான முதல் காலாண்டில் ஸ்மார்ட்ஃபோன்கள் ஏற்றுமதியில் ஆப்பிள் நிறுவனத்தை, சாம்சங் நிறுவனம் முந்தியுள்ளது. IDC வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்தாண்டு இதே காலத்தோடு ஒப்பிடுகையில், சாம்சங் ஸ்மார்ட்ஃபோன்களின் ஏற்றுமதி 7.8% அதிகரித்து, 20.8% சந்தையை கைப்பற்றியுள்ளது. அதே நேரம், ஆப்பிள் நிறுவனத்தின் ஏற்றுமதி 9.6 % சரிந்து, 17.3% சந்தையை மட்டுமே கைப்பற்றி 2ஆவது இடத்தை பிடித்தது.
பாலியல் புகாரில் சிக்கிய ஒருவருக்கு எப்படி சலுகை காட்ட முடியும் என்று ராஜேஷ் தாஸ் வழக்கில் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. பாலியல் புகார் மீதான வழக்கில் முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸுக்கு 3 ஆண்டுகாலம் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அது தனக்கு பெரிய இழப்பை ஏற்படுத்தும் என்பதால் அதனை ரத்து செய்ய வேண்டும் என்றும் ராஜேஷ் தாஸ் நீதிமன்றத்தில் மனு அளித்திருந்தார்.
Sorry, no posts matched your criteria.