India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
இந்தியாவில் விடியலை ஏற்படுத்த தான் I.N.D.I.A கூட்டணியை அமைத்துள்ளதாக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சென்னை மாதவரத்தில் வடசென்னை திமுக வேட்பாளரை ஆதரித்து நடைபெற்ற பரப்புரையில், மக்களோடு, மக்களாக இருந்து திமுகவும், காங்கிரஸும் தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளது. இது மாறுபட்ட தேர்தல். ஆனால் முக்கியமான தேர்தல் என குறிப்பிட்ட அவர், காங்கிரஸ் தேர்தல் அறிக்கை தெற்கின் குரல் எனவும் பாராட்டினார்.
ஈரான் கடற்படையால் சிறைப்பிடிக்கப்பட்ட சரக்குக் கப்பலில் சிக்கியுள்ள 3 தமிழர்கள் உட்பட 17 இந்தியர்களை விடுவிப்பது தொடர்பாக ஈரான் வெளியுறவு அமைச்சருடன், மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் தொலைபேசியில் பேசியுள்ளார். அப்போது அங்கு நிலவும் சூழல் குறித்து கேட்டறிந்த ஜெய்சங்கரிடம், விரைவில் சரக்குக் கப்பலில் உள்ள இந்தியர்களை, இந்திய தூதரக அதிகாரிகள் சந்திக்க அனுமதிக்கப்படுமென ஈரான் தரப்பில் கூறப்பட்டுள்ளது.
பெங்களூரு அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் அதிரடியாக ஆடிவரும் SRH வீரர் டிராவிஸ் ஹெட் அதிரடியாக அரை சதம் கடந்துள்ளார். 20 பந்துகளில் அவர் 5 சிக்ஸர், 3 பவுண்டரிகளுடன் 51* ரன்கள் அடித்துள்ளார். மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் அபிஷேக் ஷர்மா 23* ரன்களுடன் களத்தில் உள்ளார். இவர்களது அதிரடி ஆட்டத்தால் SRH அணி 6 ஓவர்கள் முடிவில் விக்கெட் இழப்பின்றி 76 ரன்கள் எடுத்துள்ளது.
25% இலவச சேர்க்கை இட ஒதுக்கீடு தொடர்பான அறிவிப்பினை அனைத்து தனியார் பள்ளிகளிலும் பெரிய பலகையில் வெளியிட வேண்டும் என்று பள்ளிக் கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது. கட்டாயக் கல்வி திட்டத்தின் கீழ் அனைத்து தனியார் பள்ளிகளிலும் 25% மாணவர்களுக்கான கல்விக் கட்டணத்தை அரசு செலுத்துகிறது. இத்திட்டத்திற்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க <
மணிப்பூரை பிரிக்க விட மாட்டோம் என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார். மணிப்பூரில் பிரசாரம் செய்த அவர், மக்களவைத் தேர்தல் மணிப்பூரை பிரிக்க நினைப்பவர்களுக்கும், ஒற்றுமையை உருவாக்க நினைப்பவர்களுக்கும் இடையிலான போர் என்றார். மணிப்பூரில் அமைதியை நிலைநாட்ட பிரதமர் மோடி முன்னுரிமை அளித்து வருவதாகத் தெரிவித்தார். மணிப்பூர் கலவரத்தில் குறைந்தது 220 பேர் உயிரிழந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
RPFல் உள்ள 4,660 போலீஸ் பணியிடங்களுக்கான (SI-452, Constable-4,208) அறிவிப்பு வெளியாகியுள்ளது. SI பணிக்கு 20 – 28 வயதுடைய, பட்டப்படிப்பு முடித்தவர்களும், Constable பணிக்கு 18 – 28 வயதுடைய, பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களும் விண்ணப்பிக்கலாம். ஆன்லைன் தேர்வு மற்றும் உடற்தகுதி தேர்வு அடிப்படையில் தேர்வு நடைபெறும். விண்ணப்பிக்க கடைசித் தேதி: மே 14. இணையதளம்: <
உலகின் பரபரப்பான விமான நிலையங்களில் டெல்லி விமான நிலையம் 10ஆவது இடம் பிடித்துள்ளது. ஏசிஐ வெளியிட்டுள்ள தரவுகளின்படி, முதல் 10 பரபரப்பான விமான நிலையங்களில் 5 அமெரிக்காவில் உள்ளன. அமெரிக்காவின் அட்லாண்டா சர்வதேச விமான நிலையம் 2023இல் 10.46 கோடி பயணிகளைக் கையாண்டு முதல் இடம் பிடித்துள்ளது. துபாய் விமான நிலையம் 8.69 கோடி பயணிகளைக் கையாண்டு 2ஆவது இடம் பிடித்துள்ளது.
பிரதமர் மோடி வீட்டுக்கும், நாட்டுக்கும் கேடு என முதல்வர் ஸ்டாலின் கடுமையாக விமர்சித்துப் பேசியுள்ளார். சென்னை மாதவரத்தில் தேர்தல் பரப்புரையில் பேசிய அவர், ஒரே இரவில் ஊழலை ஒழிக்கப் போவதாகக் கூறி பணமதிப்பிழப்பு நடவடிக்கையை அறிவித்தார். ஜிஎஸ்டியை அமல்படுத்தி மக்களையும் கொடுமைப்படுத்தினார். கொரோனாவை ஒழிக்க விளக்கு ஏற்றக் கூறியும், மணி அடிக்கக் கூறியும் ஏதோ விஞ்ஞானி போல பேசினார் என சாடியுள்ளார்.
பிரதமர் மோடி 6 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிட தடை விதிக்கக் கோரி டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. ஆனந்த் ஜோந்தலே என்பவர் தொடர்ந்த வழக்கில், உ.பி., பிரசாரத்தில் பிரதமர் மோடியின் பேச்சு சாதி, மத வெறுப்புணர்வை தூண்டும் வகையில் இருந்ததெனவும், மேலும் அரசுக்கு சொந்தமான விமானம், ஹெலிகாப்டர்களை பிரசாரத்திற்கு மோடி பயன்படுத்துவது தேர்தல் விதிமீறல் எனவும் அதில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
சனாதன தர்மத்தின் மீது திமுக வெறுப்பை விதைப்பதாக பிரதமர் மோடி குற்றம்சாட்டியுள்ளார். ANI ஊடகத்திற்குப் பேட்டி அளித்த அவர், தமிழ்நாட்டில் ஆளும் திமுக அரசு மீது மக்களுக்கு அபரிமிதமான கோபம் இருப்பதாகத் தெரிவித்தார். தமிழ்நாட்டு மக்கள் தற்போது பாஜக நோக்கி நகரத் தொடங்கியுள்ளனர். அண்ணாமலை சிறப்பாகச் செயல்படுகிறார். ஐபிஎஸ் வேலையை விட்டுவிட்டு அவர் பாஜகவில் பணியாற்றி வருவதாகத் தெரிவித்தார்.
Sorry, no posts matched your criteria.