India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
பெங்களூருவைச் சேர்ந்த பெண்ணின் ஸ்கூட்டரை பறிமுதல் செய்த போக்குவரத்து காவலர்கள், அவருக்கு ரூ.1.36 லட்சம் அபராதம் விதித்துள்ளனர். விதிமீறலில் ஈடுபடுபவர்களுக்கு அபராதம் விதிப்பது வழக்கம். ஆனால், இந்தப் பெண் ஹெல்மெட் அணியாமல் பயணித்தல், போன் பேசியபடி பயணித்தல், சிக்னலை மதிக்காமல் பயணித்தல் என 270 முறை விதிமீறலில் ஈடுபட்டது சிசிடிவி காட்சிகளில் உறுதியாகியுள்ளது. இந்நிலையில், மொத்தமாக சிக்கியுள்ளார்.
உலகின் முன்னணி கார் தயாரிப்பு நிறுவனமான டெஸ்லா, தனது ஊழியர்களில் 10% பேரை பணி நீக்கம் செய்ய திட்டமிட்டுள்ளது. டிசம்பர் கணக்கீட்டின்படி, இந்நிறுவனத்தில் மொத்தம் 1,40,473 பேர் பணியாற்றுகின்றனர். தற்போதைய தகவலின்படி சுமார் 15,000 பேர் வேலையை இழக்க உள்ளனர். உலக சந்தையில் மின்சார வாகனங்களுக்கான தேவை அதிகரித்திருந்தாலும், விற்பனையில் போட்டியும் அதிகரித்துள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
RCB அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் SRH அணி 287/3 ரன்கள் அடித்துள்ளது. இதன் மூலம் ஐபிஎல்லில் அதிக ரன்கள் அடித்த அணி என்ற தனது பழைய சாதனையை (277) SRH முறியடித்துள்ளது. இன்றைய போட்டியில் சிறப்பாக விளையாடிய ஹெட் 102, க்ளாஸன் 67, மார்க்ரம் 32*, சமத் 37* ரன்கள் அடித்தனர். ஒட்டுமொத்தமாக SRH அணி சார்பில் 22 சிக்ஸர்கள் அடிக்கப்பட்டுள்ளது. RCB சார்பில் பெர்குசன் அதிகபட்சமாக 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
தினசரி சாப்பிடும் உணவில் வெங்காயத்தை அதிகம் சேர்த்துக்கொள்வது வெயிலின் தாக்கத்திலிருந்து தப்பிக்க உதவும் என்கிறார்கள். வெங்காயத்தில் அதிகம் தண்ணீர் உள்ளதால், உடலுக்குத் தேவையான நீர் சத்து கிடைக்கிறது. வெங்காயம் இயற்கையாகவே குளிர்ச்சியான பண்புகளைக் கொண்டது. எனவே இது உடலின் வெப்பநிலையைக் கட்டுப்படுத்தி, குளிர்ச்சியைக் கொடுக்கும். இதனால்தான் பலரும் பழைய சாதத்துடன் வெங்காயம் எடுத்துக்கொள்கிறார்கள்.
தமிழகத்தில் இன்று இரவு மழை பெய்யவிருக்கும் மாவட்டங்களின் பட்டியலை சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது. அதன்படி, தேனி, திண்டுக்கல், விருதுநகர், தென்காசி, நெல்லை, தூத்துக்குடி, ராமநாதபுரம், குமரி ஆகிய மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்யக்கூடும். கோவை, திருப்பூர், மதுரை ஆகிய மாவட்டங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
குருவாயூரில் இருந்து மதுரை நோக்கி சென்ற எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணியை பாம்பு கடித்ததால் பரபரப்பானது. மதுரையைச் சேர்ந்த கார்த்திக் என்ற பயணி ரயிலில் பயணித்துக் கொண்டிருந்தபோது, அவரது இருக்கையின் கீழ் இருந்த பாம்பு அவரை கடித்துள்ளது. இதைத் தொடர்ந்து ஏட்டுமானூர் ரயில் நிலையத்தில் ரயில் நிறுத்தப்பட்டு அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரது உடல்நிலை சீராக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
RCB அணிக்கு எதிராக அதிரடியாக ஆடிவரும் SRH வீரர் க்ளாஸன் 23 பந்துகளில் அரை சதம் அடித்துள்ளார். இது நடப்பு தொடரில் இவர் அடிக்கும் மூன்றாவது அரை சதமாகும். எதிரணியின் பந்துவீச்சை சிதறடித்து வரும் இவர் 2 பவுண்டரிகள், 5 சிக்ஸர்கள் விளாசியுள்ளார். இவரது அதிரடி ஆட்டத்தால் SRH அணி 15 ஓவர்கள் முடிவில் 205/2 ரன்கள் எடுத்துள்ளது. மார்க்ரம் 7* ரன்களுடன் களத்தில் உள்ளார்.
‘தங்கலான்’ படத்தில் நடித்து முடித்துள்ள விக்ரம், அடுத்ததாக ‘சித்தா’ பட இயக்குநர் அருண் குமார் படத்தில் நடிக்க இருக்கிறார். இப்படத்தின் டைட்டில் டீசர் விக்ரமின் பிறந்தநாளான ஏப்ரல் 17ஆம் தேதி வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே, ஷங்கர் மகளின் திருமண நிகழ்ச்சியில் விக்ரம் பங்கேற்றிருந்தார். அவரது லுக் கவனம் ஈர்த்த நிலையில், புதிய படத்திற்கான கெட்டப்பா? என ரசிகர்கள் யூகித்து வருகின்றனர்.
நடைபெற உள்ள தேர்தலில் அர்ப்பணிப்பு, உழைப்பு, ஈடுபாடு பல மடங்கு இருக்க வேண்டும் என நிர்வாகிகளுக்கு இபிஎஸ் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து பேசியுள்ள அவர், அஞ்சாமல், அயராமல், துவளாமல் வெற்றியை இலக்காகக் கொண்டு பணிகளை தொடர வேண்டும். தேர்தல் களம் நமக்கு சாதகமான நிலையில் இருப்பது அனைவருக்கும் தெரியும். வெற்றியை சிந்தாமல், சிதறாமல் வாக்குகளாக மாற்ற உற்சாகத்துடன் பணியாற்றுங்கள் என உத்தரவிட்டுள்ளார்.
RCB அணிக்கு எதிராக அதிரடியாக ஆடிவரும் SRH வீரர் டிராவிஸ் ஹெட் 39 பந்துகளில் சதம் அடித்துள்ளார். இதன் மூலம் IPL வரலாற்றில் குறைந்த பந்துகளில் சதம் அடித்த 4 ஆவது வீரர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார். கெயில் 30, யூசுப் பதான் 37, டேவிட் மில்லர் 38 பந்துகளில் சதம் அடித்துள்ளனர். இன்றைய போட்டியில் 9 பவுண்டரிகள், 8 சிக்ஸர்கள் பறக்கவிட்டு நடப்பு தொடரில் தனது முதலாவது சதத்தை பதிவு செய்துள்ளார் ஹெட்.
Sorry, no posts matched your criteria.