News April 15, 2024

இந்த ராசிகளின் வாழ்வில் திடீர் திருப்புமுனை

image

குரோதி தமிழ் புத்தாண்டு பலரது வாழ்வில் புதிய மாற்றங்களை கொண்டு வரப் போகிறது. குரு பகவானின் நட்சத்திர பெயர்ச்சி இதோடு சேர்வதால் 3 ராசிகளின் வாழ்வில் திருப்புமுனை ஏற்படவுள்ளது. கஷ்டத்தை சந்தித்துவந்த ரிஷபம், துலாம், மகரம் ஆகிய மூன்று ராசிகளும் இனி முன்னேற்றப் பாதையில் செல்லவுள்ளனர். குரு உங்களது வாழ்வில் திருப்தியை ஏற்படுத்தவுள்ளார். வாழ்க்கை வளம் பெறும்.

News April 15, 2024

அவர் 75% தொகுதி நிதியை செலவு செய்யவே இல்லை

image

தயாநிதி மாறன் தனது தொகுதி நிதியில் இருந்து 75% செலவு செய்யவில்லை என இபிஎஸ் குற்றம் சாட்டியுள்ளார். மத்திய சென்னை தொகுதியில் பிரசாரத்தில் பேசிய அவர், இந்த தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர், இந்திய அளவில் விரல்விட்டு எண்ணக்கூடிய பணக்காரர்களின் பட்டியலில் உள்ளவர். அவர் மேலும் சொத்து சேர்ப்பதற்காகவும், சொத்துக்களை காப்பாற்றிக் கொள்வதற்காகவும் தேர்தலில் போட்டியிடுகிறார் என விமர்சித்துள்ளார்.

News April 15, 2024

இதில் இருந்து மோடி தப்பவே முடியாது

image

தேர்தல் பத்திர ஊழலில் இருந்து பிரதமர் மோடி தப்பவே முடியாது என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் தெரிவித்துள்ளார். 3ஆவது முறையாக மோடி பிரதமர் ஆவார் என்பது பகல் கனவாகவே முடியும் எனக் கூறிய அவர், ஊழல் குறித்து பேச மோடிக்கு தார்மீக உரிமை கிடையாது என்றார். நெடுஞ்சாலை, சுங்கச்சாவடிகள், கொரோனா கால சிகிச்சையில் ஊழல் நடந்திருப்பதாக சிஏஜி அறிக்கை கூறுவதாக தெரிவித்தார்.

News April 15, 2024

தேர்தலுக்கு தடை கோரி மனு

image

நெல்லை தொகுதியில் தேர்தலை நிறுத்த வேண்டும் என்று நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது. அத்தொகுதியின் பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரன் சொத்து விவரங்களை மறைத்திருப்பதாக தேர்தல் ஆணையத்தில் ஆட்சேபனை தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்மீது தேர்தல் ஆணையம் முடிவெடுக்கும் வரை தேர்தலை நிறுத்த வேண்டும் என்று வழக்கறிஞர் மகாராஜன் மனுதாக்கல் செய்திருக்கிறார்.

News April 15, 2024

அரை சதம் கடந்தார் டு ப்ளஸி

image

SRH அணிக்கு எதிரான போட்டியில் அதிரடியாக ஆடிவரும் RCB கேப்டன் டு ப்ளஸி அரை சதம் கடந்துள்ளார். 6 பவுண்டரிகள், 3 சிக்ஸர்கள் விளாசியுள்ள அவர் 25 பந்துகளில் 52* ரன்கள் எடுத்துள்ளார். தற்போது வரை RCB 9 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 111 ரன்கள் எடுத்துள்ளது. கோலி 42, ஜாக்ஸ் 7, படிதார் 9 ரன்னில் ஆட்டமிழந்தனர். SRH சார்பில் சிறப்பாக பந்துவீசிய மயங்க் மார்கண்டே 2 விக்கெட்டுகளை சாய்த்துள்ளார்.

News April 15, 2024

தேர்தல் பத்திரம் ரத்தால் அனைவரும் வருந்துவர்

image

தேர்தல் பத்திர திட்டம் ரத்து செய்யப்பட்டதற்கு உண்மையில் அனைவரும் வருந்துவார்கள் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். சமீபத்தில் தேர்தல் பத்திர திட்டத்தை உச்ச நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டது. இது குறித்து ANI-க்கு அளித்த பேட்டியில் மோடி, தேர்தலின் போது கறுப்பு பணப்புழக்கத்தை தடுக்கவே தன்னுடைய அரசு இதனை கொண்டு வந்தது. ஆனால் இத்திட்டம் குறித்து எதிர்க்கட்சிகள் பொய்யை பரப்பியதாகவும் சாடியுள்ளார்.

News April 15, 2024

பாண்டியாவின் புகழை பாடும் காலம் வரும்

image

மும்பை அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியாவின் புகழை ரசிகர்கள் பாடும் காலம் விரைவில் வருமென அந்த அணியின் பேட்டிங் பயிற்சியாளர் பொல்லார்டு நம்பிக்கை தெரிவித்துள்ளார். பாண்டியா மீதான ரசிகர்களின் அணுகுமுறை குறித்து அவர், கிரிக்கெட் போன்ற குழு விளையாட்டில், தனிப்பட்ட வீரரை கை காட்டுவது எரிச்சலாக உள்ளது. இந்தியாவுக்காக பாண்டியா சிறப்பாக விளையாட ரசிகர்கள் ஊக்குவிப்பதை காண காத்திருப்பதாக தெரிவித்துள்ளார்.

News April 15, 2024

முன்னாள் அமைச்சர் இந்திர குமாரி காலமானார்

image

முன்னாள் அமைச்சரும் திமுக இலக்கிய அணியின் தலைவருமாகிய புலவர் இந்திர குமாரி சென்னையில் வயது முதிர்வால் காலமானார். உடல்நிலை பாதிப்பு காரணமாக அப்போலோவில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். வேலூர் மாவட்டத்தை பூர்விகமாக கொண்ட இந்திர குமாரி, 1991 முதல் 96 வரை ஜெயலலிதாவின் அமைச்சரவையில் அமைச்சராக இருந்தார். பின்னர் 2006ஆம் ஆண்டு திமுகவில் இணைந்தார்.

News April 15, 2024

போருக்கு இடையே பாகிஸ்தான் செல்லும் ஈரான் அதிபர்

image

இஸ்ரேல் – ஈரான் இடையேயான போர் உலகளவில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி வரும் 22ஆம் தேதி பாகிஸ்தான் செல்ல உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அங்கு பாகிஸ்தான் ஆட்சியாளர்களை சந்தித்து பேச இருப்பதாக கூறப்படுகிறது. இரு நாடுகளும் முக்கிய பொருளாதார நலன்களைப் பகிர்ந்துகொள்வதால் ஈரானிய அதிபரின் பாகிஸ்தான் பயணம் முக்கியத்துவம் பெற்றுள்ளது.

News April 15, 2024

நான் இறந்துவிட்டதாக எண்ணியிருந்தேன்

image

நியூயார்க் தாக்குதலின் போது தான் இறந்து விட்டதாக எண்ணியதாக எழுத்தாளர் சல்மான் ருஷ்டி நினைவலைகளை பகிர்ந்துள்ளார். 2022ஆம் ஆண்டு நியூயார்க்கில் நிகழ்ச்சி ஒன்றில், அவர் மீது பாய்ந்த ஹாதி மடார் என்பவர் கத்தியால் சரமாரியாக குத்தினார். இது குறித்து பிபிசிக்கு அளித்த பேட்டியில், தனது இடது கண் அரைகுறையாக வேகவைத்த முட்டை போன்று இருந்ததாகவும், ஒரு கண்ணை இழந்தது மிகவும் வேதனையளிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!