India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
ஒடிசா அருகே சுற்றுலா பேருந்து ஒன்று விபத்துக்குள்ளாகி ஐவரை பலி வாங்கியிருக்கிறது. கட்டாக் நகரிலிருந்து மேற்குவங்கம் நோக்கி சென்ற தனியார் சொகுசு பேருந்து, பராபதி என்ற இடத்தில் கட்டுப்பாட்டை இழந்து பாலத்தில் இருந்து கீழே விழுந்து விபத்திற்குள்ளானது. இதில் பயணிகள் 5 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், படுகாயமடைந்த 38க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
➤1520 – ஐந்தாம் சார்லஸுக்கு எதிராக ஸ்பானிய கிளர்ச்சி தொடங்கியது. ➤1799 – டாபோர் மலை சமரில் நெப்போலியன் துருக்கியரைத் தோற்கடித்தார். ➤1889 – சார்லி சாப்ளின் பிறந்த நாள். ➤1961 – கியூபாவை பொதுவுடைமை நாடாக பிடல் காஸ்ட்ரோ அறிவித்தார். ➤1966 – முதலாவது உலகத் தமிழாராய்ச்சி மாநாடு கோலாலம்பூரில் தொடங்கியது. ➤1972 – நாசாவின் அப்போலோ 16 விண்ணுக்கு ஏவப்பட்டது. ➤2013 – விடுதலை வீரர் லகுமையா மறைந்த நாள்.
பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்ததும் நாடு முழுவதும் பொது சிவில் சட்டம் அமல்படுத்தப்படும் என மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் கூறியுள்ளார். மும்பையில் பேசிய அவர், நாட்டை அடுத்த 1,000 ஆண்டுகளுக்கு வளர்ச்சிப் பாதையில் பயணிக்க வைக்கும் தொலைநோக்குப் பார்வையில் பாஜக தேர்தல் அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. தோல்வி பயத்தில் உள்ள எதிர்க்கட்சிகள் பாஜகவின் செயல்பாடுகள் அனைத்தையும் விமர்சிக்கின்றன எனக் கூறினார்.
வெளிநாடுகளுக்கு 10 லட்சம் டன் சர்க்கரையை ஏற்றுமதி செய்ய அனுமதியளிக்க வேண்டுமென இந்திய சா்க்கரை ஆலைகள் சங்கம் விடுத்த கோரிக்கையை மத்திய அரசு நிராகரித்துள்ளது. அதே வேளையில், ஆலைகளில் அதிகப்படியாக இருப்பில் உள்ள கரும்புச்சாறை எத்தனால் தயாரிப்புக்குப் பயன்படுத்த அனுமதி அளிப்பது தொடா்பாக மத்திய அரசு பரிசீலித்து வருகிறது. நடப்பு பருவத்துக்கான சா்க்கரை உற்பத்தி மார்ச்சில் 3 கோடி டன்னாக அதிகரித்துள்ளது.
▶குறள் பால்: அறத்துப்பால் ▶இயல்: பாயிரவியல்
▶அதிகாரம்: கடவுள் வாழ்த்து ▶ குறள் எண்: 3
▶குறள்:
மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார்
நிலமிசை நீடுவாழ் வார்.
▶பொருள்: மலர் போன்ற மனத்தில் நிறைந்த பெருந்தகையாளரைப் பின்பற்றுவோரின் புகழ்வாழ்வு, அழிவற்ற இன்ப உலகில் நெடுங்காலம் நிலைத்து நிற்கும்.
தேர்தல் நேரத்தில் விசாரணை நிறுவனங்களை பாஜக அரசு தவறாகப் பயன்படுத்தி எதிர்க்கட்சிகளை முடக்கப் பார்க்கிறது என்று மம்தா பானர்ஜி குற்றம்சாட்டியுள்ளார். கூச் பெஹாரில் பிரசாரத்தில் ஈடுபட்டபோது பேசிய அவர், “தோல்வி பயத்தில் உள்ள பாஜக, முதல்கட்ட வாக்குப் பதிவுக்கான நாள் நெருங்கும் சமயத்தில் என்ஐஏ விசாரணை முகமை மூலம் எதிர்க்கட்சியினரை கைது செய்ய சதித்திட்டம் தீட்டி வருகிறது” என்றார்.
காஸா முனையில் நடைபெற்று வரும் போரை முடிவுக்குக் கொண்டு வர இந்திய அரசு தொடர்ந்து பங்காற்ற வேண்டும் என்று ஈரான் வெளியுறவுத் துறை அமைச்சர் அப்துல்லஹியான் கோரிக்கை விடுத்துள்ளார். மத்திய அமைச்சர் ஜெய்சங்கரிடம் அவர் தொலைபேசியில் பேசியுள்ளார். அப்போது, ஸோடியாக் குழுமத்தின் கப்பலில் உள்ள 17 மாலுமிகளை இந்திய அரசின் பிரதிநிதிகள் சந்திக்க ஏற்பாடு செய்யப்படும் என அவர் வாக்குறுதி அளித்ததாகக் கூறப்படுகிறது.
நடப்பு ஐபிஎல் தொடரின் SRH – RCB அணிகள் இடையிலான 29ஆவது லீக் போட்டியானது பல சாதனை பட்டியல்களில் இடம்பிடித்துள்ளது. அவை விவரம் பின்வருமாறு:- 1.ஐபிஎல் வரலாற்றில் அதிக ரன்கள் குவிக்கப்பட்ட ஆட்டங்களின் பட்டியலில் முதலிடம் (549 ரன்கள்). 2. அதிக சிக்சர்கள் (38) அடிக்கப்பட்ட ஆட்டங்களில் முதலிடம். 3. அதிக பவுண்டரிகள் 4+6 (43 ஃபோர்ஸ், 38 சிக்ஸர்கள் மொத்தம் 81) அடிக்கப்பட்ட ஆட்டங்களின் பட்டியலில் முதலிடம்.
இன்று (ஏப்ரல் 16) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com -க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 11 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 நபர்களின் புகைப்படங்கள் மட்டும் இதில் இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க!
ஐபிஎல் வரலாற்றில் 250+ என்ற ரன்களை இலக்கை அதிவேகமாக சேஸ் செய்து ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி என்ற சாதனையை படைத்திருக்கிறது. SRH அணிக்கு எதிரான 29ஆவது லீக் போட்டியில், சேஸிங் செய்த RCB அணி 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 262 ரன்கள் எடுத்தது. இதன் மூலம் சேஸிங்கில் அதிக ரன்கள் எடுத்த அணிகளின் பட்டியலில் MI அணியை (SRHக்கு எதிராக MI 246 ரன்கள் எடுத்தது) பின் தள்ளி RCB அணி முதலிடம் பிடித்துள்ளது.
Sorry, no posts matched your criteria.