India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

மியான்மரின் புத்திடாவுங்கிலிருந்து 300 குடியேறிகளுடன் புறப்பட்ட படகு தாய்லாந்து-மலேசிய எல்லைக்கு அருகே கடலுக்குள் மூழ்கியது. இச்சம்பவத்தால் 7 பேர் உயிரிழந்த நிலையில், 100-க்கும் மேற்பட்டோர் தண்ணீரில் மூழ்கி மாயமானது தெரியவந்துள்ளது. இந்நிலையில், மாயமானவர்களை தேடும் பணியில் மீட்பு படையினர் ஈடுபட்டுள்ளனர். இதேபோல 2021-ல் மலேசியாவில், புலம்பெயர்ந்தோர் சென்ற கப்பல் மூழ்கியதால் 20 பேர் இறந்தனர்.

மத்திய அரசின் எல்லை சாலைகள் நிறுவனத்திலுள்ள (BRO) Vehicle Mechanic உள்ளிட்ட 542 பணியிடங்களுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. கல்வித்தகுதி: 10-வது, ITI தேர்ச்சி. வயது வரம்பு: 18 – 25 வரை. சம்பளம்: ₹18,000 – ₹63,200 வரை கிடைக்கும். விண்ணப்பிக்க கடைசி நாள்: நவ.24. மேலும் அறிய & விண்ணப்பிக்க இங்கே <

கடந்த வாரத்தில் தொடர் சரிவிலிருந்த பங்குச்சந்தைகள் வாரத்தின் முதல்நாளான இன்று(நவ.10) உயர்வுடன் வர்த்தகத்தைத் தொடங்கியுள்ளன. சென்செக்ஸ் 187 புள்ளிகள் உயர்ந்து 83,404 புள்ளிகளிலும், நிஃப்டி 59 புள்ளிகள் உயர்ந்து 25,552 புள்ளிகளிலும் வர்த்தகமாகின்றன. Asian Paints, ONGC, Titan Company, Reliance உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் கணிசமாக உயர்ந்துள்ளதால் முதலீட்டாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

என்ன போராட்டம், என்ன தியாகம் செய்துள்ளீர்கள்? எதற்கு உங்களுக்கு திமுக இளைஞரணி பதவி என DCM <<18244386>>உதயநிதிக்கு<<>> தவெக கொள்கை பரப்பு இணைச்செயலாளர் லயோலா மணி கேள்வி எழுப்பியுள்ளார். உண்மையான அட்டை கத்தி உதயநிதிதான் என்ற அவர், போய் அடுத்த படத்திற்கு ரிவ்யூ கொடுங்கள் என விமர்சித்துள்ளார். மேலும், எமர்ஜென்சியை பார்த்த திமுக, கடைசியில் அதை கொண்டு வந்த இந்திரா காந்தியிடம் அடிமையாக கிடந்தது என்றும் கூறியுள்ளார்.

தங்கம் விலை இன்று(நவ.10) சவரனுக்கு ₹880 அதிகரித்துள்ளது. 22 கேரட் 1 கிராமுக்கு ₹110 உயர்ந்து ₹11,410-க்கும், சவரன் ₹91,280-க்கும் விற்பனையாகிறது. சர்வதேச சந்தையில் தங்கம் விலை ஏறுமுகத்தை கண்டுள்ளதால், நம்மூர் சந்தையிலும் தங்கம் விலை பெரிய மாற்றத்தை கண்டுள்ளது.

பிஹார் சட்டப்பேரவைத் தேர்தலில் ஆர்ஜேடி தலைமையில் எதிர்க்கட்சிகளின் மெகா கூட்டணி அமைந்தது. இதில் ஹேமந்த் சோரனின் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியும்( ஜேஎம்எம்) இடம் பெற்றது. ஆனால், அக்கட்சிக்கு 2 தொகுதிகள் கூட ஒதுக்கவில்லை. இதனால், அதிருப்தியடைந்த அக்கட்சியின் மூத்த தலைவர் சுதிப்ய குமார், இதற்கு சரியான பதிலடியாக ஜார்க்கண்டில் ஆர்ஜேடி, காங்., உடனான கூட்டணியை மறுபரிசீலனை செய்வோம் என கூறியுள்ளார்.

இன்றைய உலகம் இன்ஸ்டாகிராமில் தான் வசித்து வருகிறது. தினமும் ஆயிரக்கணக்கான போஸ்ட்களை பார்க்கிறோம். ஆனால், உலக மக்களை ஒட்டுமொத்தமாக வசீகரித்து, அதிக Likes பெற்ற போஸ்ட் எது என்று உங்களுக்கு தெரியுமா? மேலே உள்ள போட்டோவை வலது பக்கமாக Swipe செய்து எந்த போட்டோ, அதிக Likes-ஐ பெற்றுள்ளது என பாருங்கள். இதில், நீங்க எந்த போஸ்டுக்கெல்லாம் Like போட்டிருக்கீங்க?

திமுக அறிவுத் திருவிழாவை நடத்தியுள்ளது, அதிமுக அடிமைத் திருவிழா நடத்தலாம் என DCM உதயநிதி விமர்சித்துள்ளார். EPS ஒரு கடைந்து எடுத்த அடிமை என சாடிய அவர், அதிமுக என்ற போர்வையை போற்றிக் கொண்டு பாசிச பாஜக தமிழ்நாட்டில் ஊடுருவ பார்க்கிறது என்றார். மேலும், சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணி மாபெரும் வெற்றி பெற்று, CM ஸ்டாலின் மீண்டும் CM ஆக பொறுப்பேற்க வேண்டும் என கூறினார்.

வெற்றிமாறன் – சிம்பு கூட்டணியில் உருவாக இருக்கும் ‘அரசன்’ படத்தின் ப்ரோமோ பெரும் வரவேற்பை பெற்றது. இந்த ப்ரோமோவின் ஷூட்டிங் 2 மாதங்களுக்கு முன் எடுக்கப்பட்ட நிலையில், அதனை தொடர்ந்து படத்தில் எந்தவித முன்னேற்றமும் இல்லாமல் இருந்தது. இச்சூழலில்தான், ‘மாஸ்க்’ படத்தின் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட வெற்றிமாறன், படத்தின் ஷூட்டிங் வரும் 24-ம் தேதி தொடங்கும் என கூறியிருக்கிறார்.

தனது கோவில்பட்டி தொகுதியிலேயே 30% வாக்காளர்களை காணோம் என்று கடம்பூர் ராஜூ கூறியுள்ளார். தேர்தல் நேரத்தில் தில்லுமுல்லு என்பது திமுகவுக்கு கை வந்த கலை. இரட்டைபதிவு, இறந்தவர்கள் பெயர்கள் நீக்கப்படாமல் உள்ளது என 30% பேரை கண்டுபிடிக்க முடியவில்லை. இவர்கள் பெயர் வாக்காளர் பட்டியலில் இருக்கும்; ஆனால், ஆள் இருக்க மாட்டார்கள். வாக்குப்பதிவு அன்று மட்டும் வந்து அந்த வாக்குகள் விழும் என்று சாடினார்.
Sorry, no posts matched your criteria.