News April 16, 2024

ஸ்டாலின் நேருக்கு நேர் விவாதிக்க தயாரா? சரத் சவால்

image

“GSTவரி அல்ல… வழிப்பறி” என்ற தலைப்பில் பாஜக அரசையும், பிரதமர் மோடியின் செயல்பாட்டையும் முதல்வர் ஸ்டாலின் கடுமையாக விமர்சித்தார். ஒரு டிவி சேனலில் என்னுடன் நேருக்கு நேர் விவாதிக்க தயாரா? என ஸ்டாலினுக்கு சரத்குமார் சவால் விடுத்துள்ளார். ஒருவாரம் அவகாசம் தருகிறேன்; ஜிஎஸ்டி குறித்து நன்கு படித்துவிட்டு விவாதத்திற்கு வரட்டும் என்று சூளுரைத்துள்ளார்.

News April 16, 2024

சபரீசன் வியூகம் பலிக்குமா?

image

திமுக தலைவரும், முதல்வருமான ஸ்டாலினுக்கு அரசியலில் அவரது மருமகன் சபரீசன் பக்க பலமாக இருப்பதாக கூறப்படுகிறது. கடந்த தேர்தல்களில் திமுக கூட்டணி அமைத்தது, வெற்றி பெற்றதில் சபரீசனின் பங்கு அதிகம் உண்டு. அதேபோல், இந்தத் தேர்தலிலும் சபரீசனின் பங்கு அதிகம் உண்டு என்று திமுகவினர் கூறுகின்றனர். இதை வைத்து, இந்தத் தேர்தலிலும் அவரது வியூகம், வெற்றியைத் தருமா என்ற எதிர்பார்ப்பில் திமுகவினர் உள்ளனர்.

News April 16, 2024

மோடி, அமித்ஷாவுக்கு மட்டும் தனி சட்டமா?

image

எதிர்க்கட்சி தலைவர்கள் செல்லும் ஹெலிகாப்டரில் மட்டும் அதிகாரிகள் சோதனை நடத்துவதாக காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் விமர்சித்துள்ளார். பிரதமர் மோடி இந்தியா முழுவதும் தேர்தல் பரப்புரைக்கு செல்கிறார். ஆனால், இதுவரை ஒரு முறை கூட அவரின் வாகனத்திலோ அல்லது அமித்ஷாவின் வாகனத்திலோ எவ்வித சோதனையும் நடைபெறவில்லை. அவர்கள் சட்டத்திற்கு அப்பாற்பட்டவர்களா? என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

News April 16, 2024

தென்மாவட்டங்களில் மீண்டும் கொட்டப் போகும் கனமழை

image

தென்மேற்கு பருவமழை சராசரியை விட 6% அதிகம் இருக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. ஜூனில் தொடங்கும் பருவமழையில் நெல்லை, தென்காசி, குமரி, தேனி, கோவை, நீலகிரி மாவட்டங்களில் மழை பெய்யும். அண்மையில் கனமழையால் தென்மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன. இந்நிலையில் இந்திய வானிலை ஆய்வு மையத்தின் இந்த அறிவிப்பு, அங்கு மீண்டும் கனமழை வாய்ப்பு இருப்பதையே காட்டுகிறது.

News April 16, 2024

IPL: ரசிகர்கள் மனதை வென்ற RCB

image

SRH-க்கு எதிரான நேற்றைய ஐபிஎல் போட்டியில், RCB அணி ஒட்டுமொத்த ரசிகர்களின் மனதையும் வென்றுள்ளது. 288 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய RCB அணி, 20 ஓவர்களுக்குள் இலக்கை எட்டுமா? என ரசிகர்கள் எதிர்பார்ப்புடன் இருந்தனர். தொடக்கம் முதலே அதிரடியாக விளையாடிய RCB வீரர்கள், கடைசி மூச்சு வரை போராடினர். இலக்கிற்கு மிக அருகில் வந்த பெங்களூரு அணி, 25 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.

News April 16, 2024

IPL: முதலிடத்தை தக்க வைக்குமா ராஜஸ்தான்?

image

RR – KKR இடையேயான 31ஆவது ஐபிஎல் போட்டி, இன்றிரவு 7.30 மணிக்கு ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நடைபெற உள்ளது. இரு அணிகளும் தலா 1 போட்டியில் தோல்வி அடைந்து, புள்ளிப் பட்டியலில் (RR -1, KKR -2) அடுத்தடுத்த இடங்களில் உள்ளன. ஆனால், புள்ளி வாரியாக (10 புள்ளிகள்) RR அணி முதலிடத்தில் உள்ளது. சொந்த மண்ணில் நடக்கும் இன்றைய போட்டியில் வெற்றி பெற்று KKR அணி முதலிடத்தை பிடிக்குமா? என ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர்.

News April 16, 2024

நாய் பாசத்தால் உயர்நீதிமன்றம் சென்ற நடிகை

image

நாயை கொன்றவர் மீது விரைந்து நடவடிக்கை எடுக்கக்கோரி நடிகை ஆயிஷா ஜூல்கா மும்பை உயர்நீதிமன்றத்தில் மனு அளித்துள்ளார். கடந்த 2020இல் அவர் வீட்டில் வேலை பார்த்தவரே அந்த நாயை கொன்ற நிலையில், அவர் கைது செய்யப்பட்டு 2 நாளில் ஜாமினில் வெளிவந்தார். இந்நிலையில், வழக்கு 4 வருடங்களாக இழுத்தடிக்கப்பட்டு வருவதால், ஆயிஷா தற்போது மனு அளித்துள்ளார். இவர், இந்தியில் ‘குர்பான்’ படத்தில் நடித்துள்ளார்.

News April 16, 2024

இன்றைக்குள் வீடுவீடாக சென்று பூத் சிலிப் கொடுக்க உத்தரவு

image

மக்களவைத் தேர்தலுக்கு இன்னும் 2 நாள்கள் மட்டுமே இருக்கும் நிலையில், தமிழகம் முழுதும் பூத் சிலிப் வழங்கும் பணிகள் நிறைவு பெற்றுவிட்டது; விடுபட்டவர்களுக்கு இன்றைக்குள் பூத் சிலிப் வழங்க தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. வீடுவீடாக வந்து பூத் சிலிப் விநியோகம் செய்யப்படுகிறது. ஒருவேளை அதை வாங்க முடியவில்லை என்றால், Voter Helpline என்ற மொபைல் செயலியில் பூத் சிலிப்-ஐ பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

News April 16, 2024

இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு

image

தமிழ்நாட்டில் 8 மாவட்டங்களில் அடுத்த 2.30 மணி நேரத்திற்கு ( காலை 10 மணி வரை) மழை பெய்யும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது. தென்காசி, தூத்துக்குடி, நெல்லை, குமரி ஆகிய மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழையும், விருதுநகர், சிவகங்கை, புதுக்கோட்டை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் மிதமான மழையும் பெய்யும் என தெரிவித்துள்ளது.

News April 16, 2024

அதிமுக: இனி 4 முனை போட்டி

image

அதிமுக பொதுச் செயலாளராக இபிஎஸ் உள்ள நிலையில், அவரை எதிர்த்து ஓபிஎஸ் வழக்கு தொடுத்துள்ளார். அதிமுகவுக்காக சசிகலாவும் தனியே
வழக்கு நடத்தி வருகிறார். அவர்கள் 3 பேர் இடையே அதிமுகவுக்கு இதுவரை போட்டி நிலவி வந்தது. அண்மையில் நடந்த பிரசாரக் கூட்டத்தில் பேசிய அண்ணாமலை, டிடிவி வசம் அதிமுக செல்லும் என கூறியிருந்தார். இதனால் அதிமுகவுக்கு இனி 4 முனைப் போட்டி நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது.

error: Content is protected !!