India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தமிழகத்தில் சர்க்கரை நோய்க்கு, ஆண்களை விட பெண்களே அதிகம் உயிரிழந்திருப்பது பொது சுகாதார இயக்குநரக ஆய்வில் தெரிய வந்துள்ளது. 2015இல் பலியான ஆண்களின் சராசரி விகிதம் 3.4%ஆகவும், பெண்களின் விகிதம் 5%ஆகவும், 2021இல் ஆண்களின் விகிதம் 4%ஆகவும், பெண்களின் விகிதம் 4.3%ஆகவும் இருப்பது ஆய்வு மூலம் தெரிய வந்துள்ளது. சுகாதார விழிப்புணர்வு, பெண்களுக்கு குறைவாக இருப்பதே காரணமாக கூறப்படுகிறது.
‘G.O.A.T’ படத்தில், நடிகர் விஜயகாந்த் நடித்துள்ளதாக அவரது மனைவி பிரேமலதா கூறியுள்ளார். நேர்காணல் ஒன்றில் பேசிய அவர், AI தொழில்நுட்பம் மூலம் கேப்டனை படத்தில் நடிக்க வைக்க விரும்புவதாக வெங்கட் பிரபு என்னிடம் கூறினார். தேர்தலுக்கு பிறகு, விஜய்யும் இதுகுறித்து பேச வேண்டுமென தெரிவித்திருந்தார். கேப்டன் இருந்திருந்தால் இதற்கு சம்மதித்து இருப்பார். அதனால் நானும் ஒப்புக்கொண்டேன் எனத் தெரிவித்தார்.
நாட்டின் அனைத்து துன்பம், துயரங்களுக்கு காங்., பாஜக கட்சிகள்தான் காரணம் என சீமான் விமர்சித்துள்ளார். நாட்டின் முறையற்ற நிர்வாகம், ஊழல், லஞ்சம் ஆகியவற்றுக்கு இக்கட்சிகள்தான் பொறுப்பேற்க வேண்டும். ஆட்சியை கலைத்துவிடுவார்கள் என்று தமிழகத்தில் உள்ளவர்கள் (திமுக, அதிமுக) இதை தட்டிக்கேட்கவில்லை என விமர்சித்த அவர், கொசுவை ஒழிக்க முடியாத இவர்கள், எப்படி ஊழல், லஞ்சத்தை ஒழிப்பார்கள் என கேள்வி எழுப்பினார்.
பாஜக தலைவர் அண்ணாமலை கன்னட மொழியில் பேசி வாக்கு சேகரித்தார். கோவை தொகுதியில் போட்டியிடும் அவர், சூலூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் வாக்கு சேகரித்தார். அப்போது கன்னடம் பேசும் மக்கள் வசிக்கும் பகுதியில் பரப்புரை செய்த அவர், தமிழில் பேசுவதை நிறுத்திவிட்டு கன்னட மொழியில் பரப்புரையை தொடர்ந்தார். அண்ணாமலை ஏற்கெனவே சில இடங்களில் இந்தியில் பேசி வாக்கு சேகரித்தது குறிப்பிடத்தக்கது.
திமுக ஆட்சியில் அனைத்து துறைகளிலும் லஞ்சம் தலை விரித்தாடுவதாக அதிமுக பொது செயலாளர் இபிஎஸ் குற்றம்சாட்டியுள்ளார். சென்னையில் நடந்த பிரசாரக் கூட்டத்தில் பேசிய அவர், தமிழ்நாட்டில் போதைப் பொருள்கள் நடமாட்டம் அதிகரித்து விட்டதாகவும், அத்தியாவசியப் பொருள்களின் விலை பலமடங்கு உயர்ந்து விட்டதாகவும் விமர்சித்தார். ஊழல் இல்லாத துறையே இல்லை என்ற நிலையே இருப்பதாகவும் இபிஎஸ் குற்றம்சாட்டினார்.
அதிமுகவுடன் கூட்டணி வைத்து எஸ்.டி.பி.ஐ-யும், பாஜக உடன் கூட்டணி வைத்து அமமுகவும் தேர்தல் களத்தில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளன. இந்நிலையில், அக்கட்சிகளை சேர்ந்த முக்கிய தலைவர்கள் ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்துள்ளனர். எஸ்டிபிஐ கட்சியின் மாநில முன்னாள் பொருளாளர், அமமுகவின் மத்திய சென்னை எம்ஜிஆர் மன்ற செயலாளர் முகமது ரபீக் உள்ளிட்டோர் திமுகவில் இணைந்தனர்.
மணிரத்னம் இயக்கத்தில் கமல் நடிக்கும் ‘தக் லைஃப்’ படத்தில், நடிகர்கள் ஜெயம் ரவியும், துல்கர் சல்மானும் மீண்டும் இணைந்துள்ளனர். சமீபத்தில் கால் ஷீட் அமையாததால் படத்தில் இருந்து இருவரும் விலகிய நிலையில், தற்போது மீண்டும் இணைந்துள்ளனர். மேலும், இப்படத்தில் நடிகர் சிம்பு இரட்டை வேடத்தில் நடிக்க உள்ளார். மக்களவைத் தேர்தல் முடிந்த பிறகு, செர்பியாவில் படத்தின் கிளைமேக்ஸ் காட்சிகள் படமாக்கப்படவுள்ளன.
நடப்பு ஐபிஎல் தொடரில் 3 முறை 250க்கும் அதிகமான ரன்கள் அடிக்கப்பட்டுள்ளது. ஐபிஎல் தொடங்கப்பட்டதில் இருந்து இதுவரை 5 முறை 250க்கும் அதிகமான ரன்கள் எடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக 2008-2023 காலகட்டத்தில் 2 முறை மட்டுமே 250க்கு மேற்பட்ட ரன்கள் அடிக்கப்பட்டிருக்கிறது. ஆனால் நடப்பு ஐபிஎல் போட்டிகளில் ஹைதராபாத் இரண்டு முறையும் (277, 287), கொல்கத்தா ஒருமுறையும் (272) அந்த சாதனையை படைத்திருக்கின்றன.
அன்புமணி எம்.பி பதவி பெற்றது தொடர்பாக இபிஎஸ் கடுமையாக விமர்சித்துள்ளார். அதிமுகவுக்கு ஆதரவு கொடுத்து அவர்களிடம் பிச்சை எடுக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படுவதாக அன்புமணி சொல்கிறார்கள். அப்படி, அவருக்கு (அன்புமணி) நாங்கள் போட்ட பிச்சைதான் அந்த எம்.பி பதவி. பதவியை வாங்கிக்கொண்டு எங்களை விமர்சிக்கிறார்கள் என அவர் கூறினார். மேலும், சாதி வாரி கணக்கெடுப்பு நடத்த அதிமுக அரசு உத்தவிட்டதாகவும் தெரிவித்தார்.
மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக கூட்டணிக்கு தெலுங்கு சமுதாய மக்களின் அமைப்பான “தமிழ் தெலுங்கு தேசிய கட்சி” முழு ஆதரவு அளிப்பதாக அக்கட்சியின் தலைவர் ஈவிஎஸ். ராஜகுமார் நாயுடு அறிவித்துள்ளார். தேர்தலுக்கு இன்னும் ஓரிரு தினங்களே இருப்பதால், இறுதிக்கட்ட பரப்புரை தீவிரமடைந்துள்ளது. இதற்கிடையில் அரசியல் கட்சிகள், வாக்குவங்கி இருக்கும் சமூகத்தை தங்கள் பக்கம் இழுத்து வருகின்றன.
Sorry, no posts matched your criteria.