News April 16, 2024

தர்பூசணி பழத்தில் இத்தனை நன்மைகளா?

image

கொளுத்தும் வெயிலால் ஏற்படும் வெப்பத்தில் இருந்து தப்பிக்க தர்பூசணியை பலர் வாங்கி சாப்பிடுகின்றனர். அந்தப் பழத்தில் உடலுக்கு நன்மை தரும் பல்வேறு அம்சங்கள் இருக்கின்றன. அவற்றை பற்றி தெரிந்து கொள்வோம் *இதய ஆரோக்கியத்தை அதிகரிக்க செய்கிறது *கண் பார்வை குறைபாட்டை போக்கி அதை மேம்படுத்துகிறது *பல் ஈறுகளுக்கு பாதுகாப்பு அளிக்கிறது * உதடுகள் வறண்டு போகாமல் தடுக்கிறது * உடல் சூட்டைத் தணிக்கிறது

News April 16, 2024

வில்லேஜ் குக்கிங் சேனல் விளக்கம்

image

ராகுல் காந்தி மீது அவதூறு பரப்ப வேண்டாம் என வில்லேஜ் குக்கிங் சேனல் தெரிவித்துள்ளது. இதய பாதிப்பு ஏற்பட்ட முதியவர் பெரியதம்பிக்கு உதவுமாறு சேனல் சார்பாக ராகுல் காந்தியிடம் உதவி கேட்டதாகவும், அதனை அவர் மறுத்ததாகவும் வதந்திகள் பரவி வந்தன. இதுகுறித்து விளக்கமளித்த சேனல், இது முற்றிலும் பொய். எங்கள் வளர்ச்சிக்கு உதவிய அன்பான மனிதன் ராகுல் அண்ணா. பொய் செய்திகளை பரப்ப வேண்டாம் என தெரிவித்துள்ளனர்.

News April 16, 2024

அண்ணனுக்கு வாக்கு சேகரித்த தம்பி

image

தேமுதிக விருதுநகர் தொகுதி வேட்பாளர் விஜய பிரபாகரனை ஆதரித்து அவரது சகோதரர் சண்முக பாண்டியன் வாக்கு சேகரித்தார். விருதுநகர் தொகுதிக்குட்பட்ட சிவகாசி பகுதியில் உள்ள பட்டாசு தொழிற்சாலைக்கு சென்ற அவர், அங்கு பணியாற்றுபவர்களிடம் ஆதரவு கேட்டார். தொழிலாளர்களுடன், தரையில் அமர்ந்து பேசிய அவர், இந்த முறை தனது அண்ணனுக்கு ஒரு வாய்ப்பை தாருங்கள் என வேண்டுகோள் விடுத்தார்.

News April 16, 2024

RCB மிஸ் செய்த இடங்கள்

image

நேற்று SRH-க்கு எதிரான போட்டியில் கடினமான இலக்கை நோக்கி களமிறங்கிய RCB போராடி 25 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. தொடக்க ஆட்டக்காரர்களான கோலி – டு பிளெசிஸ் கூடுதலாக 2 ஓவர்கள் விளையாடி ஓரளவுக்கு ரன்களை குவித்திருந்தால் அல்லது மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் யாராவது ஒருவர் சிறப்பாக விளையாடி இருந்தால் போட்டி RCB பக்கம் திரும்பி இருக்கலாம். அந்த அணி பந்துவீச்சிலும் கவனம் செலுத்தி இருக்க வேண்டும்.

News April 16, 2024

பாஜக தலைவர் ஓபிஎஸ்; கிண்டலடித்த ஜெயக்குமார்

image

தேர்தலுக்கு பிறகு அண்ணாமலை பாஜகவில் இருந்து காணாமல் போய்விடுவார் என ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். மக்களவைத் தேர்தலுக்கு பிறகு பாஜகவின் தலைவராக ஓபிஎஸ், பொதுச்செயலாளராக டிடிவி தினகரன் வருவார்கள். அதிமுகவில் இடமில்லாத நிலையில் பாஜக தான் அவர்களின் சாய்ஸ் ஆக இருக்கும் என்ற அவர், அண்ணாமலையின் கதையை தேர்தலுக்கு பிறகு பாஜக முடித்து வெளியே அனுப்புவார்கள் என்றும் தெரிவித்தார்.

News April 16, 2024

‘குட் பேட் அக்லி’ படத்தில் அஜித்துக்கு வில்லன் யார்?

image

‘குட் பேட் அக்லி’ படத்தில், அஜித்துக்கு வில்லனாக யார் நடிப்பது? என்பது குறித்த சுவாரஸ்ய தகவல் இணையத்தில் கசிந்துள்ளது. அதன்படி, ‘அனிமல்’ படத்தில் வில்லனாக நடித்த பாபி தியோல் மற்றும் பிரபல பாலிவுட் நடிகர் ஜான் ஆபிரகாமிடம் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. சூர்யாவின் கங்குவா படத்தில் பாபி தியோல் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

News April 16, 2024

பொள்ளாச்சி ஜெயராமன் மருத்துவமனையில் அனுமதி

image

அதிமுகவின் மூத்த தலைவரும், எம்.எல்.ஏ.வுமான பொள்ளாச்சி ஜெயராமனுக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் கோவை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கடந்த சில நாள்களாக தீவிரப் பரப்புரை மேற்கொண்ட அவருக்கு உணவு ஒவ்வாமை ஏற்பட்டு உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு மருத்துவர்கள் தொடர் சிகிச்சை அளித்து வருகின்றனர்.

News April 16, 2024

ராகுல் ஒருமுறை வருவது, மோடி 10 முறை வருவதற்கு சமம்

image

வரலாறு மீண்டும் திரும்பும்; மன்மோகன் சிங் போன்ற ஒரு பிரதமர் நாட்டுக்கு கிடைப்பார் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். பாஜகவின் சித்தாந்தம் தமிழ்நாட்டு மக்களின் எண்ணங்களுக்கு எதிராக உள்ளதால், அது இங்கு எடுபடவில்லை. இதனால் மோடி, அமித்ஷாவின் ரோடு ஷோ தோல்வியில் முடிந்தது என விமர்சித்த அவர், ராகுல் தமிழ்நாட்டுக்கு ஒருமுறை வருவது, மோடி 10 முறை வருவதற்கு சமம் எனத் தெரிவித்தார்.

News April 16, 2024

ஓபிஎஸ்-ஐ ஆதரித்து பரமக்குடியில் நட்டா பேரணி

image

பாஜக தலைவர் ஜே.பி.நட்டா இன்று பரமக்குடியில் பரப்புரை செய்கிறார். ராமநாதபுரத்தில் போட்டியிடும் ஓபிஎஸ்-ஐ ஆதரித்து அவர் வாகனப் பேரணி மேற்கொள்ள இருக்கிறார். சரஸ்வதி நகரில் உள்ள தனியார் பள்ளி வளாகத்தில் இருந்து தொடங்கும் இந்தப் பேரணி காந்தி சிலை அருகே நிறைவடைகிறது. இதனை தொடர்ந்து திறந்த வேனில் ஓபிஎஸ்-ஐ ஆதரித்து அவர் ஆதரவு திரட்ட உள்ளார். இதனால் பரமக்குடியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

News April 16, 2024

இந்திய பங்குச் சந்தைகள் இன்றும் வீழ்ச்சி

image

இஸ்ரேல்-ஈரான் போர்ப் பதற்றத்தால், இந்திய பங்குச் சந்தைகள் இன்றும் சரிவைச் சந்தித்துள்ளன. ஈரான்- இஸ்ரேல் இடையே போர் மூளலாம் என எதிர்பார்க்கப்படுவதால், உலகப்பங்குச்சந்தைகளில் நிச்சயமற்ற தன்மை நிலவுகிறது. இதனால் இந்திய பங்குச்சந்தைகள் 2ஆவது நாளாக இன்றும் சரிவைச் சந்தித்தன. மும்பை பங்குச்சந்தையில் சென்செக்ஸ் 286 புள்ளிகளும், தேசிய பங்குச்சந்தையில் நிப்டி 68 புள்ளிகளும் வீழ்ச்சியடைந்துள்ளன.

error: Content is protected !!