India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
ஆடு மேய்க்கும் மக்களின் கோரிக்கையை, ஆடு மேய்ப்பவன் தான் நிறைவேற்றுவான் என அண்ணாமலை தெரிவித்துள்ளார். பாம்பம்பட்டியில் ஆடு மேய்ப்பவர்கள் காப்பீட்டு அட்டை வேண்டும் என கேட்கிறார்கள், அவர்களின் கோரிக்கை நிறைவேற்றப்படும் என்று கூறிய அவர், 3ஆம் உலகப் போரை மோடி தடுத்து நிறுத்தும் ஆற்றல் மோடிக்கு உண்டு. உலக தலைவர்களிடம் அவருக்கு நல்ல தொடர்பு உள்ளதால், அவரால் அதை செய்ய முடியும் என்றும் தெரிவித்தார்.
ஆர்சிபியை வேறு சிறந்த உரிமையாளருக்கு விற்றுவிடும்படி பிசிசிஐக்கு டென்னிஸ் லெஜன்ட் மகேஷ் பூபதி உருக்கமாக கடிதம் எழுதியுள்ளார். சன் ரைசர்சுக்கு எதிரான போட்டியில் சிறப்பாக விளையாடியும் 25 ரன் வித்தியாசத்தில் ஆர்சிபி தோற்றது. இதை சுட்டிக்காட்டி தான் எழுதிய கடிதத்தில், கிரிக்கெட் விளையாட்டு, ஐபிஎல் மற்றும் ரசிகர்கள் நலனுக்காக RCBயை வேறு சிறந்த உரிமையாளருக்கு விற்றுவிடுங்கள் எனக் கூறியுள்ளார்.
கோவையில் ஆட்டை மட்டன் பிரியாணி போடுவது உறுதி என அதிமுக பேச்சாளரும், நடிகையுமான விந்தியா தெரிவித்துள்ளார். அதிமுக வேட்பாளர் சிங்கை ராமச்சந்திரனை ஆதரித்து அவர் பரப்புரை செய்தார். அப்போது பேசிய அவர், ஆளுமைகள் நடந்து சென்றாலே சிங்கம் போன்றுதான் இருப்பார்கள், குரங்குகள் தான் குட்டிக்கரணம் போட்டு பொதுமக்களிடம் கைத்தட்டல் வாங்க வேண்டும் என பாஜக தலைவர் அண்ணாமலையை அவர் மறைமுகமாக விமர்சித்தார்.
ராமநாதபுரத்துக்கு மட்டுமல்ல, பிரதமர் மோடிக்கும் ஓபிஎஸ் தேவைப்படுகிறார் என்று பாஜக தலைவர் ஜே.பி. நட்டா தெரிவித்துள்ளார். அதிமுக விவகாரத்தில் ஓபிஎஸ்சை பாஜக தலைமை, மோடி ஓரங்கட்டி விட்டதாக செய்திகள் வெளியாகி வந்தன. இந்நிலையில், ராமநாதபுரத்தில் ஓபிஎஸ்சை ஆதரித்து நடந்த கூட்டத்தில் பேசிய ஜே.பி. நட்டா, அந்தத் தொகுதி மக்களுக்கு மட்டுமல்ல பிரதமர் மோடிக்கும் ஓபிஎஸ் தேவைப்படுவதாக கூறினார்.
நாளை மாலை 6 மணிக்கு மேல் ஊடகங்கள், வலைதளங்களில் பரப்புரை மேற்கொள்ளக் கூடாது. மீறி பரப்புரை செய்தால் 2 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்படும் என்று அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. தேர்தல் தொடர்பான பொதுக்கூட்டம், ஊர்வலம் நடத்தவோ, அதில் வேட்பாளர்கள் பங்கேற்கவோ கூடாது. தேர்தல் விவகாரங்களை மக்களின் பார்வைக்கு வைக்கக் கூடாது எனவும் அறிவுறுத்தியுள்ளது.
இரவில் டிவி முன் மோடி தோன்றினாலே, இந்திய மக்கள் அலறியதுதான் அவரது ஒரே சாதனை என்று முதல்வர் ஸ்டாலின் விமர்சித்துள்ளார். பிரதமராகத் தொடரமுடியாத அச்சத்தில் பிரிவினைவாதத்தைத் தூண்டியும், எதிர்க்கட்சி ஆளும் மாநிலங்களை அவதூறு செய்தும் தம் பதவியின் தரத்தையே தாழ்த்துகிறார். ஒருவர் உண்ணும் உணவு பற்றிப் புகார்கூறி வாக்கு சேகரிக்கும் மலிவான செயலை இதுவரை எந்தப் பிரதமரும் செய்யவில்லை என சாடியுள்ளார்.
ஹைதராபாத் அணிக்கு எதிரான நேற்றைய ஐபிஎல் போட்டியில், பெங்களூரு அணி மோசமான சாதனை ஒன்றை படைத்துள்ளது. டாஸ் வென்ற பெங்களூரு அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. பெங்களூரு அணி சார்பாக பந்துவீசிய, ரீஸ் டாப்லி – 68, யாஷ் தயாள் – 51, லாக்கி ஃபெர்குசன் – 52, வைஷாக் விஜய் குமார் – 64 ரன்கள் விட்டுக் கொடுத்தனர். ஐபிஎல் மற்றும் டி20 வரலாற்றில், 4 பவுலர்கள் 50+ ரன்களுக்கு மேல் கொடுத்தது இதுவே முதல்முறை ஆகும்.
தமிழகத்தை 50 ஆண்டுகாலமாக ஆண்ட திமுக, அதிமுக ஆகிய திராவிட கட்சிகளை விட தேசிய கட்சியான பாஜக புதுப்புது யுக்திகளை கையாண்டு வருகிறது. அதில் ஒன்று தான் தேர்தல் அறிக்கை. 23 மக்களவைத் தொகுதிகளில் களமிறங்கியுள்ள பாஜக, மக்களின் எதிர்பார்ப்பு என்ன என்பதை ஒவ்வொரு தொகுதியிலும் நேரடியாக கள ஆய்வு செய்து, அதை தேர்தல் அறிக்கையாக வெளியிட்டிருக்கிறது. இதற்கு மக்கள் மத்தியிலும் வரவேற்பு இருப்பதாக சொல்லப்படுகிறது.
காஷ்மீரில் பள்ளிவாசல் கட்ட ஏழை ஒருவர் தானமாக வழங்கிய முட்டை ஒன்று ₹ 2.2 லட்சத்துக்கு ஏலத்தில் எடுக்கப்பட்டுள்ளது. மால்போராவில் மசூதி கட்ட முடிவு செய்து நிர்வாகத்தினர் நிதி திரட்டினர். அப்போது முட்டை ஒன்றை ஒருவர் வழங்கினார். அதை பெற்றுக் கொண்ட நிர்வாகத்தினர், ஏலத்தில் விட்டனர். முதலில் ₹70,000க்கு ஏலம் போன முட்டை, பிறகு ₹2.26 லட்சத்துக்கு ஏலத்தில் எடுக்கப்பட்டது.
SRH-க்கு எதிரான ஐபிஎல் போட்டியில், RCB தோல்வி அடைந்தது குறித்து 96 பட நடிகை வர்ஷா வருத்தம் தெரிவித்துள்ளார். 288 ரன்கள் என்ற இமாலய இலக்கை துரத்திய RCB அணி, தொடக்கம் முதலே அதிரடியாக விளையாடி வந்தது. ஒரு கட்டத்தில் போட்டியை வென்று விடும் என்ற நம்பிக்கையே வந்தது. ஆனால், கடைசி வரை போராடி தோல்வி அடைந்ததால், X பக்கத்தில் இதயம் நொறுங்கிய எமோஜியை பதிவிட்டு சோகத்தை வெளிப்படுத்தியிருக்கிறார் வர்ஷா.
Sorry, no posts matched your criteria.