News April 16, 2024

டாப் 15இல் இரண்டு சிஎஸ்கே வீரர்கள்

image

ஐபிஎல்லில் கொல்கத்தா அணி தவிர மற்ற அனைத்து அணிகளும் 6 போட்டிகளில் விளையாடியுள்ளன. இதில் அதிக ரன்கள் எடுத்த வீரர்களில் RCB வீரர் விராட் கோலி (361) முதல் இடத்தில் உள்ளார். இதில் முதல் 15 இடங்களில் 2 CSK வீரர்கள் இடம்பிடித்துள்ளனர். 7ஆவது இடத்தில் ஷிவம் தூபே 242, 12 ஆவது இடத்தில் ருதுராஜ் 224 உள்ளனர். இதேபோல் பவுலர்களுக்கான பட்டியலில் முஸ்தஃபிசுர் 3, பதீரனா 9 ஆவது இடங்களில் உள்ளனர்.

News April 16, 2024

5 நாள்கள் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை

image

தமிழகத்தில் ஏப்.21ஆம் தேதி மற்றும் மே 1ஆம் தேதி டாஸ்மாக் கடைகள், பார்கள் இயங்காது என அறிவிக்கப்பட்டுள்ளது. ஏப்.21இல் மஹாவீர் ஜெயந்தி கொண்டாடப்படுகிறது. மே 1இல் உழைப்பாளர் தினம் என்பதால் அந்த 2 நாள்கள் மதுக்கடைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக மக்களவைத் தேர்தலையொட்டி ஏப்.17, 18, 19ஆம் தேதி டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

News April 16, 2024

பிறரை காயப்படுத்தாமல் பேசுவது அவசியம்

image

நமது பேச்சு, ஒருவரின் மனதை வெல்லவும் செய்யும். அவரின் மனதை காயப்படுத்தவும் செய்யும். மனதை வெல்வது போல பேசினால், உலகமே வசப்படும். மனதை காயப்படுத்துவது போல் பேசினால், உலகமே உன்னை விட்டு விலகிச் செல்லும். பகையையும் அதிகரிக்க செய்யும். இதைத்தான் திருக்குறள், “தீயினாற் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே நாவினாற் சுட்ட வடு” என்று தெரிவிக்கிறது.

News April 16, 2024

திமுகவினரின் செல்போன்கள் ஒட்டுக் கேட்பு எனப் புகார்

image

திமுகவினரின் செல்போன் உரையாடல்கள் ஒட்டுக் கேட்கப்படுவதாக இந்திய தேர்தல் ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக R.S.பாரதி அளித்த புகாரில், முக்கிய வேட்பாளர்கள் மற்றும் திமுக முன்னணி தலைவர்கள் பேசுவதை, உளவு செயலிகள் மூலம் ஒட்டுக் கேட்பதாக கூறப்பட்டுள்ளது. மேலும், அமலாக்கத்துறை மற்றும் வருமானவரித் துறை மூலம் இந்த ஒட்டுக் கேட்பு நிகழ்வு அரங்கேற்றப்படுவதாகவும் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

News April 16, 2024

அண்ணாமலைக்கு அரசியல் அறிவு அதிகம்

image

அண்ணாமலை அளவுக்கு விஜய்க்கு அரசியல் அறிவு இருக்கிறதா என்பது தெரியவில்லை என நடிகை ஆர்த்தி தெரிவித்துள்ளார். சினிமாவில் நம்பர் 1 இடத்தில் இருக்கும் விஜய் அந்த இடத்தை விட்டுவிட்டு அரசியலுக்கு வருவது தைரியமான முடிவு என்ற அவர், அண்ணாமலை 2026இல் சிறந்த முதல்வர் வேட்பாளராக இருப்பார் என்று நம்பிக்கை தெரிவித்தார். மேலும், அண்ணாமலை வருங்காலத்தில் பிரதமராக வரக்கூடிய ஆற்றல் உடையவர் என்றும் தெரிவித்தார்.

News April 16, 2024

மீண்டும் வாக்குச்சீட்டு முறை சாத்தியமற்றது

image

தேர்தலில் மீண்டும் வாக்குச்சீட்டு முறை சாத்தியமற்றது என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. அதேநேரம், மின்னணு வாக்கு இயந்திரங்களில் முறைகேடுகள் நடக்காமல் இருக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன என்று தேர்தல் ஆணையத்திடம் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. மனித தலையீடுகள் இல்லாமல் இருந்தாலே தேர்தலில் தவறுகள் நடக்காது என்று உச்சநீதிமன்ற நீதிபதி தெரிவித்துள்ளார்.

News April 16, 2024

சிவில் சர்வீசஸில் தேர்ச்சி பெற்றோருக்கு மோடி வாழ்த்து

image

சிவில் சர்வீசஸ் தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். 2023ஆம் ஆண்டுக்கான சிவில் சர்வீசஸ் இறுதித் தேர்வில் 1016 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்து மோடி தனது X பக்கத்தில், “விடாமுயற்சி, கடின உழைப்பு மற்றும் அர்ப்பணிப்புக்கு பலன் கிடைத்துள்ளது. தேசத்தின் எதிர்காலத்தை நீங்கள் வடிவமைக்கும் காலம் வந்துவிட்டது. மனமார்ந்த வாழ்த்துகள்” என்றார்.

News April 16, 2024

‘துப்பறிவாளன் 2’ அடுத்த மாதம் தொடங்குகிறது

image

‘துப்பறிவாளன் 2’ படத்தின் படப்பிடிப்பு, அடுத்த மாதம் 5ஆம் தேதி தொடங்கும் என நடிகர் விஷால் கூறியுள்ளார். நேர்காணல் ஒன்றில் பேசிய அவர், இந்தப் படம் எனக்கொரு சவாலாக இருக்கும். இவன் எல்லாம் என்ன கிழிக்க போகிறான் என பேசியவர்களுக்கு, என்னை நிரூபிக்கும் நேரம் இது. இதற்கு இயக்குநர் மிஷ்கினுக்கு தான் நான் நன்றி சொல்ல வேண்டும். அவர் இல்லை என்றால், நான் இயக்குநராகி இருக்க மாட்டேன் எனத் தெரிவித்தார்.

News April 16, 2024

2.67 லட்சம் புகார்களுக்கு தீர்வு

image

தேர்தல் விதிமீறல் தொடர்பாக இதுவரை 2.68 லட்சம் புகார்கள் சி விஜில் செயலி மூலம் பெறப்பட்டுள்ளதாகத் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. மக்களவைத் தேர்தலையொட்டி நாடு முழுவதும் நடத்தை விதிகள் அமலில் உள்ளன. அது தொடர்பாகப் பெறப்பட்ட புகார்களில், இதுவரை 2.67 லட்சம் புகார்களுக்குத் தீர்வு கண்டுள்ளதாகவும், விதிமீறலில் 92% வழக்குகள் சராசரியாக 100 நிமிடங்களுக்குள் தீர்க்கப்பட்டுள்ளதாகவும் தகவல் கூறப்பட்டுள்ளது.

News April 16, 2024

கர்நாடக இசைக்கலைஞர் கே.ஜி.ஜெயன் காலமானார்

image

பிரபல கர்நாடக இசைக்கலைஞரும், மலையாள நடிகர் மனோஜின் தந்தையுமான கே.ஜி.ஜெயன் (89) உடல் நலக்குறைவால் இன்று காலமானார். சபரிமலை கோவிலில் தினமும் நடை திறக்கப்படும்போது இவர் பாடிய ‘ஸ்ரீகோவில் நடை துறன்னு’ பாடல் ஒலிக்கப்படுவது வழக்கம். ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்திப் பாடல்களை பாடியுள்ள இவர், ஒரு சில மலையாளப் படத்திற்கும் இசையமைத்துள்ளார். இவரது மறைவிற்கு பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

error: Content is protected !!